இறுதி நபித்துவம்

இறுதி நபித்துவம்

லா' மற்றும் 'பஃதி' - தவறான புரிதல்களும் விளக்கங்களும்

மேலும் படிக்க
ஈஸா அலை அவர்கள் மரணம்

ஈஸா அலை அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள்

ஈசா (அலை) அவர்கள், தமக்கு முன் சென்ற அனைத்துத் தூதர்களைப் போல இறந்துவிட்டார்

மேலும் படிக்க
இமாம் மஹ்தி அலை

இமாம் மஹ்தி அலை தோன்றிவிட்டார்கள்

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மையை திருக்குர்ஆனை கொண்டு நிரூபித்தல்-பகுதி 1

மேலும் படிக்க

 திருக்குர்ஆனிலிருந்து சான்றுகள்

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இயற்கையான முறையில் மரணமடைந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும் திருக்குர்ஆனின் 30-க்கும் மேற்பட்ட வசனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

(அஹ்மதியல்லாத முஸ்லிம்களுக்கான குறிப்பு: அஹ்மதிய முஸ்லிம்களாகிய நாங்கள் பிஸ்மில்லாவை ஒரு வசனமாகவே கணக்கிடுகிறோம். எனவே, உங்கள் வசன எண்களுக்கு அது -1 ஆக இருக்கும். உதாரணமாக, அத்தியாயம் 3, வசனம் 145 என்பது அத்தியாயம் 3, வசனம் 144 ஆக இருக்கும்.)


+
(3:145) ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா ﷺ அவர்களுக்கு முன்பே எல்லா தூதர்களும் மரணமடைந்துவிட்டார்கள்
மேலும் முஹம்மது ஒரு தூதர் மட்டுமே ஆவார். அவருக்கு முன் தோன்றிய எல்லாத் தூதர்களும் மரணமடைந்து விட்டனர். எனவே அவர் மரணமடைந்து விட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களோ? தமது குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவோரால் ஒருபோதும் அல்லாஹ்வுக்குச் சிறு இழப்பையும் ஏற்படுத்த முடியாது. மேலும் அல்லாஹ் நன்றி செலுத்துவோருக்கு நிச்சயமாக நற்பலன் வழங்குவான்.
READ MORE
+
(5:76) ஹஸ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் மறைந்தார், அவருக்கு முன் வந்த அனைத்து தூதர்களைப் போலவே
மர்யமின் மகன் மிஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர்29. அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்30. அவர்களுடைய நன்மைக்காக அடையாளங்களை எவ்வாறு நாம் விளக்கிக் கூறுகின்றோம் என்பதையும், அவர்கள் எவ்வாறு திருப்படுகின்றனர் என்பதையும் பார்ப்பீராக31. (திருக்குர்ஆன் 5:76)
READ MORE
+
(3:56) ஹஸ்ரத் ஈஸா عليه السلام அவர்களுக்கு அல்லாஹ்வின் நான்கு வாக்குறுதிகள்
ஈஸாவே ! நான் உமக்கு (இயற்கையான) மரணத்தைத் தருவேன். மேலும் உமக்கு எனது சந்நிதியில் உயர்வு தருவேன்.20 மேலும் நிராகரிப்பவர்களி(ன் குற்றச்சாட்டுகளி(லிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துவேன். மேலும் உம்மை பின்பற்றுபவர்களை, நிராகரிப்பவர்களைவிட இறுதிநாள் வரை மேலோங்கச் செய்வேன். பின்னர் என்னிடமே நீங்கள் திரும்பிவர வேண்டியதிருக்கிறது. அப்பொழுது நான், நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன் என்று அல்லாஹ் கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்) (திருக்குர்ஆன் 3:56)
READ MORE
+
(5:117-118) ஹஸ்ரத் ஈஸா عليه السلام அவர்களின் மரணம் தொடர்பாக அவர்களுடைய சொந்த சாட்சியம்
மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம், அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லாஹ் கேட்ட போது,43 அவர் "நீ தூயவன் எனக்குத் தகாததை நான் கூறியில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின், நிச்சயமாக நீ அதனைத் தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய்; உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை (யெல்லாம்) நான்கு அறிந்தவனாவாய்" என்று கூறினார். நீ எனக்குக் கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தை தந்தபின், நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய்; மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய்.(திருக்குர்ஆன் 5:117-118)
READ MORE
+
(16:21-22) அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் மீது பிரார்த்திக்கப்படுபவர்கள் அனைவரும் மரணமடைவார்கள்.
மேலும், அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் (பொய்க் கடவுளரால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணமடைந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை (க் கூட) அவர்கள் அறிவதில்லை. ரு2 (திருக்குர்ஆன் 16:21-22)
READ MORE
+
(17:94-95) இஸ்லாத்தில் பௌதீக விண்ணேற்றம் இல்லை
அல்லது, உமக்குத் தங்கத்தாலான வீடொன்று இருத்தல் வேண்டும்; அல்லது, நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும்; நாங்கள் படிக்கத் தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டு வராத வரை, நீர் வானத்திற்குச்22 சென்றதையும் நாங்கள் நம்பமாட்டோம். நீர் கூறுக: 'என் இறைவன் தூய்மையானவன்; நான் ஒரு மனிதனாகிய23 தூதரேயன்றி வேறு அல்லன்'. (எனவே என்னால் வானம் செல்ல இயலாது). ரு10 மக்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள், ' அல்லாஹ் ஒரு மனிதனையா தூதராக அனுப்பியுள்ளான்' என்று கூறியது தான் அவர்களை நம்பிக்கை கொள்ள விடாமல் தடுத்தது. (திருக்குர்ஆன் 17:94-95)
READ MORE
+
(19:32-33) ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்தவரை ஸகாத் செலுத்த வேண்டியிருந்தது.
நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடனிருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான். மேலும் என் தாயாருடன் மிக்க நல்ல முறையில் நடந்து கொள்பவனாக என்னை ஆக்கியுள்ளான். என்னை ஆணவம் கொண்டவனாகவும், இரக்கமற்றவனாகவும் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32-33)
READ MORE
+
(21:35) ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா ﷺ அவர்களுக்கு முன் நித்திய வாழ்வு இல்லை.
உமக்கு முன்னர், எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து, அவர்கள் மட்டும் என்றென்றும் (மிக நீண்ட நாள்) உயிருடன் இருப்பதா?6. (திருக்குர்ஆன் 21:35)
READ MORE
+
(19:34) ஹஸ்ரத் ஈஸா عليه السلام அவர்களின் வாழ்க்கைச் சுழற்சி
நான் பிறந்த நாளிலும் எனக்குச் சாந்தி கிடைத்தது. நான் மரணமடையும் நாளிலும், எனக்கு உயிரளித்து மீண்டும் நான் எழுப்பப்படும் நாளிலும் (எனக்கு சாந்தி கிடைக்கும்). (திருக்குர்ஆன் 19:34)
READ MORE
+
(33:41) ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா ﷺ, அனைத்து நபிமார்களின் முத்திரை
முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தை இல்லை. ஆனால் (அவர்) அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் கா(த்)தம் ஆகவும் விளங்குகின்றார்11. மேலும் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாவான். (திருக்குர்ஆன் 33:41)
READ MORE
+
(89:28-31) நீங்கள் இறக்கும் வரை பரலோகத்தில் நுழைய முடியாது
நிம்மதியடைந்த ஆன்மாவே! நீ உன் இறைவனிடம் திருப்தியடைந்தவாறும், அவன் (உன்னிடம்) திருப்தியடைந்தவாறும் (அவனிடம்) திரும்பி வருக9. தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கிடையே நுழைந்து விடுக10. (என உன் இறைவன் உன்னிடம் கூறுகின்றான்). மேலும் நீ என் தோட்டத்தில் நுழைந்து விடுக. (திருக்குர்ஆன் 89:28-31)
READ MORE
+
(3:159) அல்லாஹ்விடமே நீங்கள் ஒன்றுசேர்க்கப்படுவீர்கள்.
நீங்கள் மரணமடைந்தால் அல்லது கொல்லப்பட்டால், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 3:159)
READ MORE
+
(2:135) அவர்கள் மரணமடைந்த மக்கள்
அவர்கள் (தமது சகாப்தத்தை முழுமைப்படுத்தி) மரணமடைந்து விட்ட ஒரு சமுதாயத்தினர். அவர்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து அவர்களுக்கே. நீங்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து உங்களுக்கே. மேலும் அவர்கள் செய்தது பற்றி (எதுவும்) உங்களிடம் கேட்கப்படமாட்டாது. (திருக்குர்ஆன் 2:135)
READ MORE
+
(7:26) அதில் நீங்கள் வாழ்வீர்கள், மரிப்பீர்கள், உயிர்த்தெழுப்பப்படுவீர்கள்.
(பின்னர்) இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். இதிலேயே மரணமடைவீர்கள். இதிலிருந்தே நீங்கள் வெளியாக்கவும் படுவீர்கள் என்றான்10. (திருக்குர்ஆன் 7:26)
READ MORE
+
(36:69) நாம் அவரைப் படைப்பின் பலவீனமான நிலைக்குத் திரும்பச் செய்கிறோம்.
நாம் எவருக்கு நீண்ட ஆயுளை வழங்குகின்றோமோ அவரது உடல் வலிமையைக் குன்றச் செய்கின்றோம். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன் 36:69)
READ MORE
+
(2:37) பூமியில் இருப்பிடம்
மேலும் ஷெய்த்தான் இதன் மூலம் (இம்மரத்தின் மூலம்) அவ்விருவரையும் (அவர்களின் அந்தஸ்திலிருந்து) விலக்கி விட்டான். (இவ்வாறு) அவன் அவர்கள் இருந்த நிலையிலிருந்து அவர்களை வெளியாக்கி விட்டான். எனவே நாம் (அவர்களிடம் இங்கிருந்து) வெளியேறி விடுங்கள் என்று கூறினோம். உங்களுள் சிலர் சிலருக்குப் பகைவர் ஆவீர்கள். (குறிப்பிட்ட) ஒரு காலம் வரை இதே பூமியில் உங்களுக்கு வாழுமிடமும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் (ஏற்படுத்தப்பட்டு) உள்ளன (என்பதை நினைவில் கொள்ளுங்கள்.) (திருக்குர்ஆன் 2:137)
READ MORE
+
(25:21) எல்லா தூதர்களும் உணவு உண்டார்கள், எப்போதும் உணவு உண்டார்கள்.
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாரும் உணவு உண்டனர். கடை வீதிகளில் நடமாடினர். நாம் உங்களுள் சிலரைச் சிலருக்கு சோதனையாக்கியுள்ளோம். (முஸ்லீம்களாகிய) நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றீர்களா? (இல்லையா என்பதனைக் காண அவ்வாறு செய்துள்ளோம்) உமது இறைவன் நன்கு பார்ப்பவனாவான். (திருக்குர்ஆன் 25:21)
READ MORE
+
(55:27-28) பூமியில் உள்ள யாவும் அதன்மேல் அழியும்.
(பூமியாகிய) இதன் மீது உள்ளவையெல்லாம் அழியக்கூடியவையே; புகழுக்கும், கண்ணியத்திற்குமுரிய உம் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். (திருக்குர்ஆன் 55:27-28)
READ MORE
+
(16:44) நினைவூட்டலைப் பெற்றிருப்பவர்களிடம் கேளுங்கள்
நாம் உமக்கு முன்னர் ஆண்களையே வஹி அறிவித்து(த் தூதர்களாக) அனுப்பியுள்ளோம். நீங்கள் அறியவில்லையாயின் வேதஞானம் பெற்றவர்களிடம் கேளுங்கள். (திருக்குர்ஆன் 16:44)
READ MORE
+
(21:102-103) சொர்க்கத்திற்கான நுழைவாயில் உறுதிப்படுத்தப்பட்டது
நன்மை கிடைக்கும் என்ற நற்செய்தியினை ஏற்கனவே எம்மிடமிருந்து பெற்றவர்கள், அதிலிருந்து (நரகத்திலிருந்து) வெகு தொலைவில் விலகியே இருப்பார்கள். அவர்கள் அதன் சப்தத்தைக் கூடக் கேட்க மாட்டார்கள். தங்கள் உள்ளம் விரும்பும் நிலையிலே அவர்கள் என்றென்றும் இருப்பர். (திருக்குர்ஆன் 21:102-103)
READ MORE
+
(30:41) அல்லாஹ்வின் சட்டத்தில் வாழ்க்கையுடன் கூடிய நான்கு நிகழ்வுகள்
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிர்பெறச் செய்வான். உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றாரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 30:41)
READ MORE
+
(22:6) மனித உடல் மேலும் மேலும் பலவீனமடைகிறது
மக்களே! நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது குறித்து ஐயத்திற்குள்ளாகியிருந்தால், (நினைவில் கொள்ளுங்கள்) நாம் (நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவாக்க நாம் உங்களை முதலில் மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் விந்திலிருந்தும், அதன் பின்னர் (முன்னேற்றத்தை வழங்கி) ஒட்டிக் கொள்ளும் தன்மையினைக் கொண்ட ஒரு நிலையிலிருந்தும், பின்னர் சதைத் துண்டிற்கு நிகரான ஒரு நிலையிலிருந்தும் படைத்தோம். அது குறைவான அல்லது முழுமையான ஒரு சதைத் துண்டின் வடிவமாக இருந்தது. நாம் விரும்புவதனை, குறிப்பிட்ட ஒரு காலம் வரை கருப்பைகளில் தங்கி இருக்கச் செய்கின்றோம். பின்னர் நாம் உங்களை ஒரு குழந்தையின் வடிவில் வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் உங்களுடைய வலிமையினை (வலிமை வாய்ந்த வயதினை) அடைய, உங்களை வளரச் செய்கிறோம். உங்களுள் சிலர் தமது (இயல்பான) வயதையடைந்து மரணமடைக்கின்றனர். உங்களுள் இன்னுஞ்சிலர் மிக முதிய வயதை அடைகின்றனர். இதனால் அவர்கள் அறிவைப் பெற்றிருந்த பின்னரும், எதுவுமறிவதில்லை. நீர் பூமியை(ச் சில காலங்களில்) வறண்டு, உயிரற்றதாகக் காண்கின்றீர். பின்னர் நாம் அதன் மீது (மழை) நீரை இறக்கும் போது, அது பொலிவு பெற்று, செழுமையடையத் தொடங்குகின்றது. அழகு வாய்ந்த எல்லா வகையான வயல்களையும் அது முளைக்கச் செய்கின்றது. (திருக்குர்ஆன் 22:6)
READ MORE
+
(4:79) மரணம் தொடர்பான அல்லாஹ்வின் சட்டம்
நீங்கள் எங்கிருந்தாலும், வலிமைவாய்ந்த கோட்டைகளில் நீங்கள் இருந்தாலுஞ் சரியே மரணம் வந்து உங்களைப் பிடித்துக் கொள்ளும். (மேற்க்கூறப்பட்ட) அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டால் இது உம்மிடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். (இவை) எல்லாமே அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நீர் கூறுவீராக. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்விஷயத்தையும் விளங்கிக் கொள்வதன் பக்கம் இவர்கள் நெருங்குவதே இல்லை. (திருக்குர்ஆன் 4:79)
READ MORE
+
(10:25) உயிரின் தாவர ஒற்றுமை
இவ்வுலக வாழ்க்கை, மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் தண்ணீரைப் போன்றதாகும். இதன் பின்னர் மக்களும் கால்நடைகளும் உண்ணுகின்ற பூமியின் விளைச்சல், அத்துடன் கலந்து விடுகிறது. எதுவறையெனில் பூமி (அதன் மூலம்) தனது அணிகலன்களைப் பெற்று வனப்புடன் தோற்றமளிக்கிறது. மேலும் அதில் வாழ்பவர்கள் தாங்கள் (அதன் விளைச்சலை) ஒன்று திரட்டிக்கொள்ளத் தகுதி பெற்றதாக எண்ணுகின்றனர். அப்போது அதன் மீது இரவிலோ பகலிலோ நம்முடைய (ஆக்கினைப் பற்றிய) கட்டளை வருகிறது. நேற்று இவ்விடத்தில் (எதுவுமே) இல்லாதிருந்தது போன்று நாம் அதனை அறுவடை செய்த வயலைப்போல் ஆக்கிவிடுவோம். சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இவ்வாறே நாம் (நம்முடைய) வசனங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றோம். (திருக்குர்ஆன் 10:25)
READ MORE
+
(21:8-9) உண்ணாத உடல்கள் இல்லை
உமக்கு முன்னர் ஆண்களையே நாம் அவர்களுக்கு வஹி அறிவித்து (தூதராக) அனுப்பி உள்ளோம். நீங்கள் அறியாதிருந்தால் வேத(ஞான)முடையவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நாம் அத் தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம்2 வாழ்ந்ததுமில்லை. (திருக்குர்ஆன் 21:8-9)
READ MORE
+
(54:55–56) சுவர்க்கம் ஒன்றையொன்று சார்ந்ததாகும்
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், தோட்டங்களிலும், ஆறுகளிலும் இருப்பர். எல்லாம் வல்ல அரசனிடத்திலுள்ள நிலையான கண்ணியம் மிக்க இருப்பிடத்தில் இருப்பர். (திருக்குர்ஆன் 54:55-56)
READ MORE
+
(39:22) பூமியின் தாவரங்களுடனான ஒற்றுமை
அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 39:22)
READ MORE
+
(23:13–16) மனித வாழ்வின் படிநிலைகள்
நிச்சயமாக நாம் மனிதனைக் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான தங்குமிடத்தில் விந்தாக வைத்தோம். இதன் பிறகு அந்த விந்தை ஒட்டுகின்ற ஒரு பொருளாக உருவாக்கினோம். அடுத்து அந்த ஒட்டுகின்ற பொருளை சதைக் கட்டியாக உருவாக்கினோம். பின்னர் அந்த சதைக் கட்டியை எலும்புகளாக உருவாக்கினோம். பிறகு அந்த எலும்புகளுக்குச் சதையை அணிவித்தோம். பின்னர் அதனை மற்றொரு படைப்பாக வளர்ச்சியடையச் செய்தோம். எனவே படைப்போருள் மிகச்சிறந்தவனாகிய அல்லாஹ் மிக்க அருளுக்குரியவனாவான். பின்னர் நீங்கள் அதற்குப் பிறகு நிச்சயமாக மரணமடைபவர்களே. (திருக்குர்ஆன் 23:13-16)
READ MORE
+
(30:55) பலவீனத்தின் நிலை
அல்லாஹ் தான் உங்களை ஒரு பலவீனமான நிலையிலிருந்து படைத்து, பலவீனத்திற்குப் பின்னர் வலிமையினை அளித்து, வலிமைக்குப் பின்னர் பலவீனத்தையும், முதுமையையும் ஏற்படுத்தினான். தான் நாடுவதை அவன் படைக்கின்றான். அவன் நன்கு அறிபவனும், முழுமையான ஆற்றல் பெற்றவனுமாவான். (திருக்குர்ஆன் 30:55)
READ MORE
+
(59:8) மஸீஹ் ஈசா இப்னு மர்யம் (அலை) அவர்களின் முதுமைப் பருவம்
நகரங்களின் மக்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு வழங்கியவைகள்6, அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும். ஏனெனில் அவை உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையே (மட்டும்) சுற்றி வரக்கூடாது. தூதர் உங்களுக்கு வழங்குவதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களை அவர் தடுக்கின்றாரோ, அதிலிருந்து விலகி நில்லுங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடினமான தண்டனையளிப்பவன் ஆவான். (திருக்குர்ஆன் 59:8)
READ MORE
+
(23:51) இந்தியாவில் ஈசா (அலை) அவர்கள்
நாம், மர்யமுடைய மகனையும், அவருடைய தாயையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும், நீரூற்றுக்களைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம்5. (திருக்குர்ஆன் 23:51)
READ MORE
+
குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கற்பிக்கப்படாதது
"ஈசா (அலை) அவர்களுக்கு குர்ஆனோ அல்லது ஹதீஸ்களோ கற்றுக்கொடுக்கப்படாது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்துகிறது; இதுவே அவர் இயற்கை மரணமடைந்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது. ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இயற்கை மரணமடைந்துவிட்டார் என்றும், அவர் மீண்டும் வரமாட்டார் என்றும் திருக்குர்ஆனிலிருந்து தெளிவாகத் தெரிகிறது."
READ MORE
+
ஈசா (அலை) அவர்கள் தம்மைப் பின்பற்றியவர்கள் செய்த இணைவைப்பை (ஷிர்க்) அறிந்திருக்கவில்லை
"ஈசா (அலை) அவர்களுக்கு குர்ஆனோ அல்லது ஹதீஸ்களோ கற்றுக்கொடுக்கப்படாது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்துகிறது; இதுவே அவர் இயற்கை மரணமடைந்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது. மறுமை நாளில் தம்மைப் பின்பற்றியவர்களின் நிலை குறித்து ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் அறியாதிருக்கிறார்கள் என்பது திருக்குர்ஆனிலிருந்து தெளிவாகத் தெரிகிறது."
READ MORE
+
நம் உம்மத்திலிருந்தே உருவாகும் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்)
"நமது கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) கடந்த கால கலீஃபாக்களின் தன்மைகளைக் கொண்டவர்களாகவே இருப்பாரே தவிர, அந்தப் பழைய கலீஃபாக்களே நேரடியாக வரமாட்டார்கள் என்பதை திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்துகிறது. இது, இறுதி காலத்தில் வரவிருக்கும் மஸீஹ் என்பவர் ஈசா (அலை) அவர்களின் தன்மையைக் கொண்டவரே தவிர, ஈசா (அலை) அவர்களே நேரடியாக வரமாட்டார் என்பதை நமக்குக் காட்டுகிறது."
READ MORE

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

Blogger இயக்குவது.