ஈஸா (அலை) உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்க்கு எடுத்து வைக்கும் எதிர் வாதம் -3

அஹ்மதி அல்லாத சகோதரர்கள் ஈஸா (அலை) உயிரோடு வானத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு எதிர் வாதமாக எடுத்து வைக்கும் வாதம் திருக்குர்ஆனின் 4:159 வசனம் ஆகும். அந்த வசனத்தில் வருவதவாது, "அவர் (ஈஸா) இறப்பதற்கு முன்னதாக வேதக்காரர்கள் அவர் மீது நிச்சயமாக ஈமான் கொள்வார்கள்." இந்த வசனத்தை வைத்துக் கொண்டு அவர்கள் எடுத்து வைக்கும் வாதம், இந்த காலம் வரை யூதர்கள் அனைவரும் ஈஸா வை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆகவே ஈஸா பூத உடலுடன் வானத்தில் இருக்கிறார். அவர் மீண்டும் வானத்திலிருந்து இறங்கி வருவார், அவரை நிராகரித்த யூதர்கள் அனைவரும் அவர்கள் மீது ஈமான் கொள்வார்கள். என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது.
நமது பதில்: அஹ்மதி அல்லாதோரின் மேலே கூறப்பட்டுள்ள வாதம் பொய்யானதே,  தவறானதே ஆகும். இதற்குரிய காரணங்களை நாம் கீழே காணலாம்.
முதல் காரணம்: இந்த வசனத்தில் வேதக்காரர்கள் அனைவரையும் சுட்டி காட்டி கூறப்படுகிறது. ஏனென்றால் "ان منஎன்ற சொல்லானது யாரை நோக்கி கூறப்படுகிறதோ அவர்கள் அனைவரையும் உள்ளடக்கூடிய சொல்லாக இருக்கிறது. ஈமான் என்று அஹ்மதி அல்லாதோர் எதனை பொருள் கொள்கின்றார்களோ அந்த ஈமான் மரணித்துக் கொண்டிருக்கக்கூடிய வேதக்காரர்களிடம் தென்படுவதில்லை. ஆகவே இதுதான் இதற்கு பொருள் என்றால், வேதக்க்காரர்கள் அனைவரும் ஈமான் கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவனின் கூற்று உண்மையாக, அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா (அலை) மீண்டும் இந்த உலகிற்கு வருகை தரும் வரை அனைத்து வேதக்காரர்களையும் உயிரோடு வைத்திருப்பான் அல்லவா....! ஆனால் இறைவன் அவ்வாறு செய்யவில்லை. ஆகவே இந்த பொருள் தவறானதே ஆகும் என்பது நிரூபணம் ஆகிறது.

இங்கு ஒருவர், ஈஸா (அலை) அவர்கள் இறங்கும் சமயத்தில் இருக்கும் யூதர்களையே குறிக்கும் என்று சொன்னால், முதலாவதாக அவர், இவ்வாறு அந்த வசனத்தில் சொல்லப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது, அஸ்ஃபஹானின் 70 ஆயிரம் யூதர்கள் தஜ்ஜாலுடன் இருப்பார்கள் அவர்கள் கொள்ளப்படுவார்கள் என்றும், 12 ஆயிரம் யூத பெண்கள் மசீஹை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பார்கள் என்றும் (கன்ஸுல் உம்மால், கீதாபுல் கியாமஹ் மின் கசமுல் அவ்வல், மூன்றாவது பாகம் ஃபி அஷ்ராதிஸ் சாஅஹ் பாகம் 7 பக்கம் 171, மிஸ்ரி, பதிப்பகம் ஹைதராபாத் பாகம் 7 பக்கம் 174) என்று உள்ளது. ஆகவே இந்த பொருள் தவறானதே ஆகும்.
இரண்டாவது காரணம்: இவ்வாறு பொருள் கொள்வது ஏன் தவறு என்று சொன்னால், இந்த வசனத்திற்கு முன்னும் பின்னும் யூதர்களின் தீமைகளை பற்றி எடுத்து சொல்லும் வசனங்கள் அதிகம் காணப்படுகின்றன. எவர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்களோ அவர்களின் நல்லவற்றை பற்றி “لٰکِنِ الرَّاسخُونَ (4:163) வசனத்திலிருந்து எடுத்து சொல்லப்படுகிறது. இவ்வாறான மாபெரும் நல்ல காரியத்திற்கு பிறகு அவர்களின் தீமைகளைப் பற்றி எடுத்து கூறும் இந்த முறையானது நுட்பத்திற்கு எதிரான முறையாகும். இது எவ்வாறு ஒரு நுட்பமான விஷயத்திற்கு எதிராக இருக்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் கூற்றின் நடைமுறைக்கும் எதிரானதாகவே இருக்கிறது. ஆகவே இந்த பொருள் தவறானது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
மூன்றாவது காரணம்: அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَوْ کَانَ مِنْ عِنْدِ غَیْرِ اللہِ لَوَجَدُوْا فِیْہِ اخْتِلَافًا کَثِیْرًا
பொருள்: இந்த வேதம் அல்லாஹ்வின் புறமிருந்து அல்லாமல் வேறு ஒருவரது புறமிருந்து வந்திருந்தால் (இயற்கை விதிமுறைகள் சட்ட விஷயங்களில்) முரண்பாடுகள் அதிகம் காணப்பட்டிருக்கும். இவ்வாறு இல்லாததை அல்லாஹ் இந்த வேதத்தின் உண்மை நிலைக்கு உதாரணமாக எடுத்து கூறுகின்றான். ஆனால் அஹ்மதி அல்லாத சகோதரர்களின் பொருளை நாம் ஒரு வகையில் சரியானது என்று எண்ணினாலும் இறைவனின் இந்த வேதத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால், இந்த வசனத்திற்கு முன்னதாக உள்ள ஒரு வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்,فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا அதாவது (யூதர்களில்) குறைவானவர்களை தவிர அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். (4:47) ஆனால் 4:159 வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் பொருளோ, “அனைவரும் ஈமான் கொள்வார்கள்” என்பதாகும்.
நான்காவது காரணம்: இறைவன் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை நோக்கி கூறுகின்றான், “நான் உம்மை பின்பற்றுபவர்களை இறுதி நாள் வரை யூதர்கள் மீது வெற்றியை வழங்குவேன்” (ஆலி இம்ரான்: 56) ....மேலும் கூறுகின்றான், “நாம் அவர்கள் இருவருக்கும் (யூதர்களுக்கும், கிருத்தவர்களுக்கும்) இடையில் பகைமையை உருவாக்கிவிட்டோம். (அல் மாயிதா: 15) மேலும் அல் மாயிதா 65 வது வசனத்திலும் இவ்வாறே கூறுகிறான். இப்போது நீங்களே சிந்தித்து பாருங்கள், ஒரு வாதத்திற்கு அனைத்து யூதர்களும் ஈமான் கொள்ளுவார்கள் என்று வைத்துக் கொண்டால், இவ்வாறு அனைத்து யூதர்களும் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை பின்பற்றத் துவங்கிவிட்டால், பிறகு இறுதி நாள் வரை இவர்கள் மீது எவ்வாறு வெற்றி கொள்வதை பற்றி ஆலி இம்ரான் வசனம் 56 கூறுகிறது...? பிறகு எவ்வாறு அல் மாயிதா வசனத்தின் அடிப்படையில் இவர்கள் இருவருக்கும் இடையில் பகைமை நிலைக்கும்...? ஆகவே 4:159 வசனத்திற்கு நீங்கள் கொள்ளும் பொருள் தவறே என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஐந்தாவது காரணம்: موتہ எனும் பதத்தில் வரக்கூடிய ہِ (ஹி) என்ற சுட்டி காட்டக்கூடிய சொல் மற்றொரு கிராஅத்தில் ھُمْ (ஹும்) என்று பன்மை சொல்லாக வந்துள்ளது. இதன் அடிப்படையில் வேதக்காரர்களை மட்டும்தான் இதற்கு பொருளாக கருத முடியும். ھُمْ ஐ பற்றி ஓர் அறிவிப்பி இவ்வாறு வருகிறது, ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், அபி இப்னு கஅப் (ரலி) அவர்கள் கிராஅத்தில் موتہ என்பதற்கு பதிலாக مَوْتِھِمْ என்று வந்துள்ளது. (இப்னு ஜரீர் பாகம் 6, பக்கம் 15)

قَبْلَ مَوْتِھِمْ  இன் அறிவிப்பாளர்

அஹ்மதி அல்லாதோர் கூறுவதாவது, இப்னு அப்பாஸிடமிருந்து அறிவிக்கப்படும் கப்ல மவ்திஹிம் சம்பந்தப்பட்ட கிராஅத் பொய்யானது ஆகும். இதில் இருக்கும் இரண்டு அறிவிப்பாளரான கசீஃப் மற்றும் அதாப் இப்னு பஷீர் பலகீனமானவர் ஆவார், என்று கூறுகின்றனர்.
நமது பதில்: இப்னு ஜரீர் ஹஸ்ரத் இப்னு அப்பாஸிடமிருந்து ஐந்து அறிவிப்பை இந்த “கப்ல மவ்திஹிம்” கிராஅத் சம்பந்தப்பட்ட அறிவிப்பை நகல் செய்துள்ளார்கள். இதில் உள்ள நான்கு அறிவிப்புகளில் நீங்கள் கூறும் இரண்டு அறிவிப்பாளரும் இல்லை.
2- மீதமுள்ளது ஐந்தாவது அறிவிப்பு. இந்த அறிவிப்பில் கசீஃப் மற்றும் அதாப் இப்னு பஷீர் ஆகிய இரு அறிவிப்பாளர்களும் இருக்கின்றனர். இந்த அறிவிப்பும் கூட சரியானதே ஆகும். கசீஃப் இப்னு அப்துல் ரஹ்மானை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“கசீஃப் உறுதியான அறிவிப்பாளர் ஆவார். எவரின் பார்வையில் கசீஃப் ஆட்சேபனைக்குரியவராக கருதப்படுகிறாரோ அவர்களின் பார்வையில் கஸீஃபிடமிருந்து அப்துல் அசீஸ் இப்னு அப்துல் ரஹ்மான் அறிவிக்கும் அறிவிப்பானது நம்ப தகுந்தது இல்லை என்பதாகும். ஏனென்றால் குறை என்பது அப்துல் அசீஸ் என்பவரிடம் உள்ளது அல்லாமல் கசீஃப் இடம் இல்லை......என்று எழுதப்பட்டுள்ளது. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 3 பக்கம் 143 மற்றும் 144)
இவ்வாறு இந்த அறிவிப்பின் இரண்டாவது அறிவிப்பாளர் அதாப் இப்னு பஷீர் அவர்களும் நம்ப தகுந்தவர் மற்றும் வலுவானவர் ஆவார். இவரைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “அதாப் இப்னு பஷீர் அவர்களை இப்னு முஈன் மற்றும் இப்னு ஹபான் மற்றும் தாரே குத்னி ஆகியோரும் வலுவானவர் என்று கூறியுள்ளார்கள்.” (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 7 பக்கம் 91)
அஹ்மதி அல்லாதோரின் வாதம்: இப்னு ஜரீரில் இப்னு அப்பாஸின் கூற்றாகிய “கப்ல மவ்தி ஈஸா என்பது சஈத் இப்னு ஜுபைர் இன் வழியாக சஹீஹானா சனதினை கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் இர்ஷாதுஸ் சாரி ஷரஹ் ஸஹீஹ் புகாரி ஆகும். இது அஹ்மதி அல்லாதவர்களின் எதிர் வாதமாக இருக்கிறது.
நமது பதில்: இப்னு ஜரீரில் சஈத் இப்னு ஜுபைர் இன் வழியாக இரண்டு அறிவிப்பை மட்டுமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. முதல் அறிவிப்பானது முஹம்மது இப்னு பஷார் என்பவர் இப்னு மஹ்தி அப்துல் ரஹ்மானிடமிருந்து, இவர் சுஃப்யானிடமிருந்து, இவர் அபீ ஹசனிடமிருந்து, இவர் சஈத் இப்னு ஜுபைரிடமிருந்து உள்ளது. ஆகவே இந்த அறிவிப்பு பலகீனமானதே ஆகும். ஏனென்றால், தஹ்ஸீபுத் தஹ்ஸீபில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “ எஹ்யா என்பவரிடமிருந்து எடுத்ததாக கூறி அறிவித்த அனைத்து அறிவிப்புகளிலும் முஹம்மது இப்னு பஷார் என்பவர் எந்தவித கவலையுமின்று பொய்யுரைத்து வந்தார் என்று உமர் இப்னு அலி அவர்கள் மிகவும் வலுவாக கூறியதாக அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் கூறுகின்றார்கள். இவ்வாறு இப்னு மஹ்தி இடமிருந்து எடுக்கப்பட்ட முஹம்மத் இப்னு பஷார் என்பவரின் ஓர் அறிவிப்பை பற்றி அலி இப்னு மதீனி என்பவரிடம் கேட்ட போது அவர் இந்த அறிவிப்பானது பொய்யானது ஆகும் என்று கூறிவிட்டார். இவ்வாறு எஹ்யா இப்னு முஈன் என்பவர் முஹம்மத் இப்னு பஷாரை நல்லவர் என்று கருதியதில்லை. (அவரைப் பற்றி கவலை பட்டதில்லை) மாறாக அவரை பலகீனமானவராக ஆக்கிவிட்டார். இவ்வாறே கவாரீரி என்பவரும் இவரை விரும்பியதில்லை. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 9 பக்கம் 81)
இது முதல் அறிவிப்பின் நிலையாக இருக்கிறது. (இந்த அறிவிப்பை முஹம்மத் இப்னு பஷார் இப்னு மஹ்தியிடமிருந்து அறிவித்துள்ளார் என்பதை நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்) இரண்டாவது அறிவிப்பின் ஓர் அறிவிப்பாளராக அபி இப்னுல் அப்பாஸ் இப்னு சஹ்லுல் அன்சாரி இருக்கிறார். இவரை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “இவர் வலுவானவர் இலை என்று அபூ பஷருத் தவ்லாபி என்பவர் கூறியுள்ளார். இப்னு முஈனும் கூட இவரை பலகீனமானவர் என்று நியமித்துள்ளார். மற்றும் இமாம் அஹ்மத் இன் பார்வையில் இவர் ஓர் ஹதீஸை நிராகரிப்பவராக இருக்கிறார். நசாயி இவரை வலுவற்றவராக கருதியுள்ளார். இவரின் ஹதீஸ் பின்பற்றுவதற்கு தகுதியானது அல்ல என்று அகீலி கூறியுள்ளார். இமாம் புகாரியின் பார்வையிலும் கூட இவர் வலுவானவர் கிடையாது. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 1 பக்கம் 186)
இப்னு ஜரீரில் “கப்ல மவ்தி ஈஸா” என்ற அறிவிப்பானது இப்னு அப்பாசிடமிருந்துள்ள ஒரே அறிவிப்பே ஆகும். இந்த அறிவிப்பு சஈத் இப்னு ஜுபைர் என்பவரின் வழியாக இல்லாவிட்டாலும் இது பலகீனமானதே ஆகும். ஏனென்றால் இந்த அறிவிப்பிலும் உபை இப்னுல் அப்பாஸ் என்ற அறிவிப்பாளரே இருக்கிறார். இவர் பலகீனமானவர் ஆவார்.
மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதை பாருங்கள், “இந்த பொருளின் அடிப்படையில் ஹஸ்ரத் உபை இப்னு கஅப் என்பவரின் “இல்லா லயுமிநன்ன பிஹீ கப்ல மவ்திஹிம்” எனும் கிராஅத்தானது நிரூபிக்கின்றது. இதனின் பொருள் “அவர்களில் ஒவ்வொருவரும் தனது மரணத்திற்கு முன்னதாகவே அவரை ஈமான் கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.
ஹஸ்ரத் அபி இப்னு கஅப் என்பவரின் இந்த கிராஅத்தானது புகாரியின் கீழ்காணும் இந்த அறிவிப்பின் மூலம் முக்கியத்துவம் பெறுகிறது.
“ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், “திருக்குர்ஆன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ஹஸ்ரத் சாலிம் (ரலி), ஹஸ்ரத் முஆஸ் பின் ஹபல் (ரலி) மற்றும் ஹஸ்ரத் உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்). (புகாரி கிதாபுல் மனாகிப், பாப் மனாகிப் உபை இப்னு கஅப் (ரலி) பாகம் 2 பக்கம் 194, மிஸ்ரி)
இப்போது ஓர் இறையச்சமுடையோரின் வேலை என்னவென்றால் அவர் இந்த இரண்டு கிராஅத்தையும் முன்வைத்து பொருள் கொடுக்க கடமை பட்டுள்ளார்கள்.
ஆறாவது காரணம்: ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் “ஈஸாவின் மரணத்திற்கு முன்பு என்று கூறியுள்ளார்கள். இதே ஹஸ்ரத் இப்னு அப்பாஸிடமிருந்தே (ரலி) இவ்வாறும் ஓர் அறிவிப்பு உள்ளது. அவர்கள் கூறுகின்றார்கள் “யூதர்களின் மரணத்திற்கு முன்பு” என்று கூறியுள்ளார்கள்......மட்டுமல்ல இதில் வருகின்ற முதலில் சுட்டி காட்டி வரும் சொல் (ஹி) என்பது அல்லாஹ்வை குறிக்கிறது என்றும் ஒரு சாராரும், ரசூல் (ஸல்) அவர்களை குறிக்கிறது என்று இன்னொரு சாராரும் கூறியதாக வந்துள்ளது. ஹஸ்ரத் இக்ரிமாவின் (ரலி) கொள்கையும் இதுவே ஆகும். (ஃபத்ஹுல் பயான் பாகம் 2 பக்கம் 244)
இந்த வசனத்தில் “சுட்டி காட்டக்கூடிய” சொல் இரண்டு உள்ளது. ஒன்று “பிஹீ” மற்றொன்று பிஹிம்” ஆகும். இவ்விரண்டும் எதை அல்லது யாரை சுட்டி காட்டுகிறது என்பதில் விரிவுரையாளர்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முதலி வரக்கூடிய “பிஹீ” என்பது ஈஸா, அல்லாஹ், நபி (ஸல்) மற்றும் குர்ஆனை குறிக்கிறது என்றும் சிலர் கூறியுள்ளார்கள். இரண்டாவது வரக்கூடிய பிஹிம்” என்பது ஈஸா மற்றும் வேதக்காரர்களை குறிக்கிறது என்றும் கூறியுள்ளனர். எப்போது “சுட்டிக் காட்டக்கூடிய” இந்த சொல்லானது மசீஹைதான் குறிக்கும் என்று ஓர் ஒன்றுபட்ட கருத்தில் வந்தால் மட்டுமே அஹ்மதி அல்லாதோர்களின் பொருள் சரியானதாக அமைய முடியும். ஆனால் இவ்வாறு இல்லை. ஆகவே இவ்வாறான கிராஅத் இருந்த போதிலும் அஹ்மதி அல்லாதோரின் கூற்று சரியானது என்று ஒரு போதும் கூற முடியாது.
ஏழாவது காரணம்: இந்த 4:159 வசனத்திற்கு பிறகு அல்லாஹ் “அவர் இறுதி நாளின் போது அவர்கள் மீது சாட்சியாளராக இருப்பார்” (4:160) என்று கூறுகிறான். அதாவது அவர்களுக்கு (யூதர்களுக்கு) எதிராக ஈஸா சாட்சி கூறுவார். 4:159 வசனத்தின் படி, அவர்கள் அனைவரும் ஈஸாவின் மீது ஈமான் கொள்வார்கள், என்று பொருள் கொண்டால், பிறகு அவர் எவ்வாறான சாட்சியை கூறுவார்...? அது மட்டுமல்ல அந்த சாட்சிக்கு அவசியம்தான் என்ன? ஏனென்றால், ஒரு மறுப்பிற்கு பிறகே சாட்சிக்கான அவசியம் தேவை படுகிறது. இறுதி நாளுடன் சாட்சியை ஒப்பிட்டு கூறுவதின் மூலம் தெரியவருவது என்னவென்றால், (பனூ இஸ்ரவேலர்களுக்கு வந்த அந்த) மசீஹ் இந்த உலகதிற்கு மீண்டும் வர மாட்டார் என்பது தெரிகிறது. இல்லை என்றால் அவர் இந்த உலகதிற்கு மீண்டும் வந்து சாட்சி பகர்வார் என்றல்லவா கூறப்பட்டிருக்க வேண்டும்.

ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் விளக்கத்தைப் பற்றி

சில அஹ்மதி அல்லாத சகோதரர்கள் ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த புகாரி நூலிலுள்ள ஓர் அறிவிப்பை சுட்டி காட்டி, அவர் மசீஹீன் இறங்குதலை 4:159 வசனத்தை ஆதாரம் காட்டி அறிவித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்த வசனம் மூலம் ஈஸா (அலை) மீண்டும் வருவார் என்பது நிருபணமாகிறது என்று கூறி வருகின்றார்கள்.
நமது பதில்: இந்த அறிவிப்பை அடுத்து ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய வாசகம் அவரின் சொந்த வாசகம். இதை மிகைப் படுத்தி காட்ட முடியாது. ஏனென்றால், ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பாளார்களில் மிக சிறந்த அறிவிப்பாளராக இருந்திருக்கிறார் அவ்வளவுதான் ஆனால் விளக்கத்தில் அல்ல. கீழே பார்க்கவும்:
1-   அறிவிப்பாளர்களில் ஹாஃபிஸ் மற்றும் நேர்மையாளரின் அடிப்படையில் பிரபல்யமான அறிவிப்பாளராக இருந்தாலும் விளக்கத்தை சொல்லுவதிலும், ஃபத்வாவை வழங்குவதிலும் நம்பதகுந்தவர்கள் அல்லாத சில இரண்டாவது வகையான அறிவிப்பாளர்களும் இருக்கின்றனர். உதாரணத்திற்கு, ஹஸ்ரத் அபூ ஹுரைரா மற்றும் அனஸ் பின் மாலிக் ஆவர். (உசூல் நிசாமுத்தீன் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்-ஷாஷி அல்-பஹஸுஸ் ஸானி- ஃபசல் ஃபி அக்ஸாமில் கபர் வல் கசமுஸ் ஸானி மினர் ரிவாஹ்-பதிப்பகம் நூல் கிஷோர் பக்கம் 40 & ரசீதிய்யா நூலகம், டில்லி பக்கம் 82)
2-   மவ்லான சனாவுல்லா சாஹிப் பானி பத்தி அவர்கள் தனது விளக்கவுரையாகிய “தஃப்சீர் மல்ஹரி” எனும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை சுட்டி காட்டி வசனத்திற்கு பொருள் கொடுப்பது தவறாகும். தகுந்தது அல்ல. இது அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் சுய கருத்தாகும். இது ஹதீஸிற்கு சரி சமமாக நிற்க முடியாது. ஏனென்றால் ஹதீஸின் மூலம் இவ்வாறு நிரூபணம் ஆகுவதில்லை.

ஆகவே, உசூலை சார்ந்தோர்கள் மற்றும் முஹத்திசீன்களின் பார்வையில் ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வலுவானவர் அவரின் அறிவிப்பு சரியானதே ஆகும். ஆனால் அவர்களின் சுய சிந்தனை மற்றும் கூற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக திருக்குர்ஆனின் 30 வசனங்கள், பல்வேறு ஹதீஸ்கள் அதுமட்டுமல்லாது இந்த உம்மத்தின் பல்வேறு வழிகாட்டிகளின் கூற்றுகள் இவரின் (அதாவது அபூ ஹுரைராவின்) கூற்றிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அவரின் அந்த கூற்று ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த புகாரி ஹதீஸிலேயே ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சுயமாக விளக்கம் தந்த இன்னொரு அறிவிப்பும் உள்ளது. ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் அறிவிக்கின்றார்கள், “ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது ஷெய்தான் தொடுகின்றான். ஆனால் மர்யம் மற்றும் இப்னு மர்யம் இதிலிருந்து விதிவிலக்கானவர்கள். இவர்கள் இருவரையும் ஷெய்தான் தொடவில்லை” என்று புகாரி கிதாபுல் அன்பியா, பாப் 44 & முஸ்லிம் கிதாபுல் ஃபஸாயில் பாப் 146 இலும் வந்துள்ளது. இந்த ஹதீஸை பற்றி ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது, “ரசூல் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை புரிந்து கொள்வதற்கு குர்ஆனின் “ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களின் தாயார் “நான் மர்யம் மற்றும் அவளின் சந்ததிகள் விரட்டப்பட்ட ஷெய்தானிடமிருந்து பாதுகாப்பு கோருகிறேன்” என்று கூறிய வசனத்தை ஓதுங்கள் என்று கூறியதாக “புகாரி கிதாபுத் தஃப்சீர்- தஃப்சீர் சூரா ஆலி இம்ரான் பாகம் 3, பதிப்பகம் மிஸ்ரியா” வந்துள்ளது.

ஹஸ்ரத் அபூ ஹுரைராவின் இந்த விளக்கம் முற்றிலும் தவறே ஆகும். ஏனென்றால் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களின் தாயார் மேலே கூறப்பட்டுள்ள துஆவை மர்யம் (அலை) பிறந்த பிறகு செய்தார்கள். ஆனால்  ஹதீஸில் ஷெய்தான் அணுகவில்லை, தொடவில்லை என்று எங்கு வந்துள்ளதோ அங்கு பிறக்கும் சமயம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே எவ்வாறு மேலே கூறப்பட்டுள்ள வசனத்திற்கு ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் தனது சுய விளக்கத்தை தந்து தவரிழைத்துள்ளாரோ அவ்வாறே 4:159 வசனதிற்கும் அவர் தந்த சுய விளக்கம் தவறே, ஏற்றுக் கொள்ள தக்கது அல்ல என்பது நிருபணமாகிறது.                                 (தப்லீக் பாக்கட் புக் நூலிலிருந்து)

ஆகவே 4:159 வசனம் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இந்த பூவுலகிற்கு பூத உடலுடன் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்பதை எடுத்து கூறுகிறது என்று கொண்டிருக்கும் கொள்கையானது தவறானதே ஆகும் என்பது மேலே கூறப்பட்டுள்ள ஆதாரங்களின் மூலம் தெள்ள தெளிவாக விளங்குகிறது.

(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)

கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்'.



எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.

பதில் : கேள்வி கேட்டவர் தவறான கருத்துக் கொண்டுள்ளார். அதாவது வேதத்தையுடையவர்களில் எல்லாப் பிரிவினர்களும் மஸீஹின் மரணத்திற்கு முன் அவரிடம் கட்டாயம் நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் பொருள் என்று அவர் எண்ணிக்கொண்டார்.
ஏனெனில் அந்த வசனத்தின் பொருள் கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டதுதான் என்று நாம் கற்பனையாக ஏற்றுக் கொண்டாலும் அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேததையுடையவர்களும், தற்போது இருப்பவர்களும்,இனிமேல் வருபவர்களும் எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்பவர்களாக கட்டாயம் இருப்பார்கள் என்றாகிவிடும்.

ஆனால் இவ்வாறு எண்ணுவது பொருத்தமற்றது. வேதத்தையுடைய எண்ணற்ற மக்கள் மஸீஹின் நுபுவத்தை மறுத்த நிலையில் இது நாள் வரை நரகத்தை அடைந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் நன்கறிவர். இனிமேலும் அவர்களில் எத்தனை பேர் அவரை மறுப்பதன் காரணமாக அந்த நெருப்பில் நுழைவார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

இறந்துபோன வேதத்தையுடையவர்கள் எல்லோரும் அவர் இறங்கும் காலத்தில் அவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருப்பின்,அவன் அவர்கள் எல்லோரையும் அவர் இறங்கும் காலம் வரையிலும் உயிரோடு வைத்திருப்பான். அனால் வர்கள் இறந்து போனபின் அவர்கள் இனி எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?

சிலர் மிகவும் செயற்கையான முறையில் ஒரு பதில் கூறுவார்கள். அதாவது மஸீஹ் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து அவர் மீண்டும் இறங்கும் காலம் வரை மறுக்கும் நிலையில் இறந்து போன வேதத்தையுடைய மக்களை அவர் இறங்கும் பொது ஒரு வேளை இறைவன் மீண்டும் உயிர்பெறச் செய்யலாமே என்பார்கள்.

இதற்க்கு பதில் என்னவென்றால் இறைவனால் இயலாதது எதுவும் இல்லைதான்! ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த எண்ணங்களுக்கான எந்த அறிகுறியாவது திருக்குரானிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ உள்ளதா? உண்டு என்றால் அவற்றை ஏன் இவர்கள் எடுத்து வைப்பதில்லை?

சிலர் சிறிது வெட்கத்துடன் தாழ்ந்த குரலில் இதற்க்கு ஒரு விளக்கமளிப்பார். அதாவது வேதக்காரர்கள் என்றால் மஸீஹின் இரண்டாவது வருகையின் போது உலகில் வாழக்கூடிய மக்களாவார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டதும் நம்பிக்கை கொள்வார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன் அவர்கள் எல்லாரும் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் அணியில் இணைந்து கொள்வார்கள் என்பர்.

ஆனால் இந்த எண்ணமும் எந்த அளவு தவறு என்றால்,முதலாவதாக் மேலே குறிப்பிட்ட அந்த வசனம் மிகத் தெளிவாக பொதுவான மக்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலிருந்து வேதக்காரர்கள் என்ற சொல் ஈஸா நபியின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ உள்ள வேதக்காரர்களையும் குறிக்கும் எனத் தெரிகிறது. அந்த வசனத்தைக் ஒரு குறிப்பிட்ட ஒரு காலவறையோடு தொடர்புபடுத்தக் கூடிய எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தில் இல்லை. தவிர எடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொருளும் தவறாகும்.

ஏனெனில் மஸீஹை மறுப்போர் வேதக்காரராயினும் வேதக்காரர்களல்லாதவராயினும் அவரின் மூச்சினால்,குப்ரின் நிலையிலேயே இறந்துபோவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் உரத்த குரலில் கூறுகின்றன, (மஸீஹின் மூச்சால் இறப்பது என்பதன் உண்மையான பொருளை நாம் விளக்கி வந்துள்ளோம். இதன் பொருள்,சான்றுகளின் அடிப்படையில் இறப்பதாகும். ஏதேனும் நஞ்சு நிறைந்த நச்சுப் பொருள் அவரது வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து பலவீனமான காபிர்களைக் கொல்லும் என்றோ ஆயினும் அதனால் தஜ்ஜாலைக் கொல்ல முடியாது என்றோ எண்ணுவது தவறாகும்).

திரும்ப திரும்ப அந்த ஹதீஸுகளை நாம் எடுத்து எழுதத் தேவையில்லை. இந்த நூலிலோ அதற்குரிய இடத்தில் காணலாம். இது தவிர தாஜ்ஜாலும் வேதக்காரர்களைச சேர்ந்தவனாவான் என்பது முஸ்லிம்களின் ஒருமித்தக் கருத்தாகும். அவன் அவர் மீது நம்பிக்கைக்கொள்ளமாட்டான் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த எண்ணத்தைப் பின்பற்றுவோர் இந்த ஹதீசுகளைப் படித்து எந்த அளவு வெட்கப்படுவார்கள் என்று என்னால் இப்போது யூகிக்கவே முடியவில்லை.

இன்னொன்றும் நம்பப்படுகிறது. முஸ்லிம் ஹதீஸில் உள்ளது. அதாவது மஸீ ஹிற்குப் பின் தீயவர்கள் எஞ்சியிருப்பர். அவர் மேல் கியாமத் (பேரழிவு) நிகழும் என்பதே அது. எந்தக் காபிரும் எஞ்சியிருக்கமாட்டான் என்றால் அது (கியாமத்) எங்கிருந்து வரப்போகிறது?

இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அந்தப் பொருள் சரியில்லை என்றால் எந்தப் பொருள்தான் சரியானது? அந்த இடத்திலேயே அதனுடன் தொடர்புடைய எல்லா வசனங்களையும் கவனித்தால் அந்த வசனத்தின் சரியான பொருள் தெரியவரும். அந்தப் பொருள்தான் சரியானது என ஒப்புக் கொள்வதில் தயக்கம் ஏற்படாது.
எனவே முதலில் அந்த வசனங்கள் எல்லாவற்றையும் கீழே குறிப்பிடுகிறேன். அதன்பின் அந்த வசனங்களின் அடிப்படியில் நிரூபணமாகும் பொருளையும் குறிப்பிடுகிறேன். அந்த வசனங்களாவன:-

وَّقَوْلِـہِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللہِ۝۰ۚ وَمَا قَتَلُوْہُ وَمَا صَلَبُوْہُ وَلٰكِنْ شُـبِّہَ لَہُمْ۝۰ۭ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْہِ لَفِيْ شَكٍّ مِّنْہُ۝۰ۭ مَا لَہُمْ بِہٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ۝۰ۚ وَمَا قَتَلُوْہُ يَقِيْنًۢاO

بَلْ رَّفَعَہُ اللہُ اِلَيْہِ۝۰ۭ وَكَانَ اللہُ عَزِيْزًا حَكِـيْمًاO

وَاِنْ مِّنْ اَہْلِ الْكِتٰبِ اِلَّا لَيُؤْمِنَنَّ بِہٖ قَبْلَ مَوْتِہٖ۝۰ۚ وَيَوْمَ الْقِيٰمَۃِ يَكُوْنُ عَلَيْہِمْ شَہِيْدًاO
(4:158-160)

பொருள்: இறைவனின் கருணையையும் நம்பிக்கையையும் யூதர்கள் இழந்துவிட்டதற்க்குக் காரணம், அவர்கள் செய்த அவர்களின் தீய செயல்களாகும். அவற்றுள் ஓன்று என்னவென்றால்,அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதரென்றும் மஸீஹ் என்றும் வாதித்த ஈசப்னு மர்யத்தை நாங்கள் கொன்றுவிட்டோம். (நாங்கள் ஈஸா ரெசூளுல்லாஹ்வை கொன்று விட்டோம் என்று யூதர்கள் கூறினார்களென்றால், அவர்கள் ஹஸ்ரத் மஸீஹை ரேசூல் என்று நம்பினார்கள் என்று பொருளன்று.

ஏனெனில் அவர்கள் அவரை உண்மையான ரெஸூல் என்று நம்பியிருந்தால் சிலுவையில் அறைய முற்பட்டிருக்க மாட்டார்கள். எனவே "இதோ இந்த ரெஸூலை நாங்கள் சிலுவையில் அறைந்து கொன்றோம் என்ற அவர்களின் கூற்று, கேலி செய்யும் முறையிலாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவன் சாபத்திற்குரியவன் என்ற தவ்ராத்தின் கூற்றுதான் இந்த கேலி கிண்டலுக்கு அடிப்படைக் காரணம்)

யூதர்களின் இந்தக் கூற்றின் நோக்கம் என்னவென்றால் ஈசப்னு மரியம் உண்மையான ரெஸூலாக இருந்திருந்தால் அவரைத் தூக்கிலிட நாங்கள் ஒருநாளும் ஆற்றல் பெற்றிருக்க மாட்டோம். ஏனெனில் சிலுவைக் தண்டனை பெற்றவன் சாபத்திற்குரியவன் ஆவான் என தவ்ராத் உரத்த குரலில் கூறுகிறது என்று காட்டுவதேயாகும்.

திருக்குர்ஆன் இந்த வசனங்களுக்குப் பின் கூறுவதாவது,உண்மையில் யூதர்கள் மசீஹிப்னு மர்யமைக் கொல்லவில்லை. தூக்குத் தண்டனை வழங்கவுமில்லை. மாறாக இந்த எண்ணம் அவர்களின் உள்ளங்களில் யூகமாகவே உள்ளது. உறுதியானதன்று. மேலும் அவர்களின் மடமையையும் தன் வல்லமையையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ்வே அவர்களைச் சந்தேகத்தில் ஆக்கினான்.

அதன்பின் கூறினான்; மஸீஹிற்கு சிலுவை தண்டனை கிடைத்திருக்கலாமோ என்ற ஐயத்தில் இருக்கும் மக்களிடம் அதக்கான எந்தத் திட்டவட்டமான சான்றும் இல்லை. ஒரு யூகத்தையே அவர்கள் பின்பற்றுகின்றனர். மேலும் மஸீஹிற்கு சிலுவை தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கு உறுதியான அறிவு அவர்களிடமில்லை என்பதை அவர்களே நன்கறிவார்கள். மாறாக உண்மையான (உறுதியான) செய்தி என்னவென்றால் அவர் இறந்து விட்டார் என்பதேயாகும். அதாவது அவர் தமது முதிய வயதில் இயற்கையாக மரணமடைந்தார்.

மேலும் இறைவன் அவரை நல்லடியார்களாகிய மக்களைப் போல் தன்பால் எடுத்துக் கொண்டான், மேலும் இறைவன் மிகைத்தவனாவான், அவனுக்காக ஆகி விடுகின்றவர்களுக்கு அவன் கண்ணியத்தை வழங்குகின்றான். மேலும் அவன்'ஹக்கீம்' (நுண்ணறிவுள்ளவன்) ஆவான் அவன் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு தன் நுண்ணறிவால் பயனடையச் செய்கிறான்.

தொடர்ந்து இறைவன் கூறுவதாவது, வேதக்காரர்களில் ஒவ்வொருவரும் மஸீஹ இயற்கையாக இறந்தார் என்ற உண்மையை நம்புவதற்கு முன்(வேதக்காரர்களின் எண்ணங்களைப் பற்றி) நாம் மேலே குறிப்பிட்ட விதமாக நம்பிக்கைகொண்டவராகவே இருப்பார்.

அதாவது மஸீஹ் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டு மறைந்தார் என்ற விஷயத்தில் எந்த வேதக்காரர்களுக்கும் உள்ளத்தளவில் உருதிகிடையாது. என்று நாம் ஏற்கனவே விளக்கி வந்துள்ளோம். கிறிஸ்தவர்களாயினும் சரி,யூதர்களாயினும் சரி, யூகம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று எண்ணுகின்றனர்.

எமது இந்தக் கூற்று உண்மையானது. எவரும் இதனை மறுக்க முடியாது. எனினும் அவரின் மரணம் பற்றி அவர் எப்போது இறந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே அது குறித்து நாம் தெரிவிக்கிறோம். அவர் இறந்துவிட்டார் அவருடைய ஆன்மா கண்ணியத்துடன் நம் பக்கம் உயர்த்தப்பட்டது என இறைவன் கூறுகின்றான்.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் எண்ணங்கள் தொடர்பாக நாம் வெளிப்படுத்திய விஷயத்தில் நம்பிக்கை வைத்திராத எவரும் அவர்களிடையே இல்லை என்ற இறைவனின் கூற்று அற்புதமான ஒரு கூற்றாகும். இது யூதர்களைப் பார்த்து "நீங்கள் உண்மையாளர்கள் என்றால் மரணத்தை நாடுங்கள்" ((2:95) என்ற வசனத்தைப் போன்ற ஒன்றாகும் இது. எனவே இந்தக் கூற்றின் மூலம், "நாங்கள் உண்மையிலேயே மஸீஹிற்குத் சிலுவை தண்டனை வழங்கினோம்" என்று யூதர்கள் கூறுவதிலிருந்து, அவர் சாபத்திற்குரியவராவார். உண்மையான நபியில்லை (நவூதுபில்லாஹ்) என்ற முடிவுக்கு வருவதே அவர்களின் நோக்கம்.

அவ்வாறே மஸீஹ் உண்மையிலேயே சிலுவைதண்டனையால் இறந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவதன் நோக்கம் , மஸீஹ் கிறிஸ்தவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிவிட்டார் என்ற முடிவுக்கு வருவதாகும்.

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய இவ்விரு எண்ணங்களும் தவறாகும். இவ்விரு பிரிவினருள் எவருக்கும் இவ் எண்ணங்களில் திடமான உறுதியில்லை. மாறாக மஸீஹ் உறுதியாகவே சிலுவை தண்டனைக்கு ஆளாகவில்லை என்பதில் மட்டுந்தான் அவர்களுக்குத் திடமான உறுதியுள்ளது.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் மவுனம் கொள்வதிலிருந்தும் அவர்களிடம் சந்தேகத்தைத் தவிர ஏதும் இல்லை என்பதை நேர்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்தக் கூற்றினால் அல்லாஹ் விளக்க விரும்புகிறான்.

மேலும் யூதர்களும் கிறித்தவர்களும் இந்த வசனத்தைக் கேட்டும் மவுனமாக இருந்தனர்; மறுப்பதற்காக களத்தில் இறங்கவில்லை என்றால் அதற்க்குக் காரணம், நாம் இதற்க்கு எதிரில் நம் உள்ளத்தில் இல்லாத ஒரு வாதத்தை விடுத்தால் நாம் பொய்யர் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய ஏதேனும் அடையாளம் இறைவனிடமிருந்து வெளியாகிவிடும் என்றும் அவர்கள் நன்கு அறிந்ததேயாகும். எனவே அவர்கள் மூச்சு விடவில்லை; மவுனமாக இருந்தனர்.

நாம் மவுனம் சாதிப்பதால் நாம் அதனை ஒப்புக் கொண்டுவிட்டோம் என்பது நிரூபணமாகி விடும் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர். மேலும் அதனால் ஒருபக்கம் அந்த மறுபபோரின் கொள்கையின் வேர் அறுந்துவிடும். அதே சமயத்தில் இன்னொருபக்கம் மஸீஹ் இறைவைனின் உண்மையான தூதரும் நல்லடியாரும் இல்லை; இறைவன் பால் கண்ணியத்துடன் உயர்த்தப்படக் கூடியர்வர்களை சேர்ந்தவரில்லை என்ற தங்களின் கொள்கை பொய்யாகிவிடும் என்பதையும் யூதர்கள் அறிந்திருந்தாலும் முஹம்மது ரெசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மையின் ஒளியின் வாள் அவர்களின் கண்களை கூசச் செய்து விட்டது.

திருக்குரானில் அவர்களைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்கள் என்றால், மரணத்தை நாடுங்கள் என்று கூறியும் அச்சத்தால் எவரும் மரணத்தை நாடாததைப் போன்று அச்சத்தால் நடுங்கிய அவர்களால் மறுக்க முடியவில்லை. அதாவது மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் என்று நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் உறுதி கொள்ளாதவர்களுடன் சேர்க்கின்றீர்கள்?என அவர்கள் வாதிக்கவில்லை. எனவே நபி(ஸல்) அவரளின் காலத்தில் அவர்கள் மவுனம் சாதித்ததே நிரந்தரமான முறையில் அவர்களுக்கு எதிரான சான்றாக அமைந்துவிட்டது.
அவர்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனையான கருத்தின் தாக்கத்திற்கு அவர்களின் வழித் தோன்றல்களும் ஆளாகிவிட்டனர். ஏனென்றால் முன்சென்றோர் பின் வருபவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அவர்களின் சாட்சியத்தை வருங்கால வழித்தோன்றல்கள் என்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது.

மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளாகவில்லை. மாறாக இயற்கையாக இறந்தார் என்ற பிரச்சனையை இறைவன் எழுப்பினான் என்றால் இந்த வாதத்தின் குறிக்கோள் இதுதான் என்பதைத் தற்போது வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அதாவது மஸீஹ் சிலுவை தண்டனையால் வெவ்வேறான இரு பிரிவினர்கள்- அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது குறிக்கோளுக்குச் சாதகமாக வெவ்வேறான இரு முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள்.

அவர் சிலுவைதண்டனைக்கு ஆளானவர் தவ்ராத்தின்படி சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் சாபத்திற்குறியவர்;இறை நெருக்கத்தை இழந்தவர். ரபாஆ வின் கண்ணின்யம் இழந்துவிட்டார்; மேலும் நுபுவத்தின் அந்தஸ்து என்பது இந்த இழிநிலைக்கு அப்பாற்பட்டது என்று யூதர்கள் கூறினர்.
கிறித்தவர்களோ யூதர்களின் இந்த அவதூறுக்கு, மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானது அவருக்குத் தீயதன்று மாறாக பாவிகளைச் சாபத்திலிருந்து காப்பாற்றவே இந்த சாபத்தைத் தமக்காக மேற்கொண்டாரென்ற பதிலைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டனர்.

எனவே இறைவன் அவ்விரு பிரிவினரின் மேரிகுரிப்பிட்ட கூற்றுகளையும் அழித்துவிடத் தீர்மானித்தான். மேலும் அவ்விரு பிரிவினருக்கும் மஸீஹின் சிலுவைதண்டனைக்கு ஆளாதல் குறித்து உறுதியில்லை என்றும் உறுதியிருந்தால் முன்வரவேண்டும் என்று வெளிப்படுத்தினான். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர். எவரும் மூச்சு விடவில்லை. இது நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானின் ஓர் அற்புதமாகும். இது தற்கால அறிவற்ற மவுலவிகளின் பார்வைகளிலிருந்து மறைந்துள்ள ஒன்றாகும்.

எவன் கையில் ஏன் உயிர் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நான் கூறுகிறேன்; இப்பொழுது இந்த நேரத்திலே மேற் குறிப்பிட்ட உண்மை ஆன்மீகக் காட்சியின் மூலம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எழுதியதெல்லாம் அந்த உண்மையான கற்பிப்போனின் போதனையால்தான் எழுதினேன். இதற்காக எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தாலும் இக்கூற்றின் உண்மைக்கு ஒவ்வொரு நேர்மையான உள்ளமும் சான்று பகரும். ஏனெனில் இறைவனின் கூற்று வீண் விஷயங்களைவிட்டும் தூயதாக இருத்தல் வேண்டும். இந்தச் சர்ச்சையின் இடையில் மிகப்பெரும் இந்த நோக்கங்கள் இல்லைஎன்றால் இந்தக் கூற்றுகள் அத்தனையும் எந்த உண்மையும் இல்லாத வெறும் வீணானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவராலும் உணர முடியும். ஏனெனில் அந்நிலையில் ஒரு நபிக்குத் சிலுவைதண்டனை கிடைத்ததா அல்லது இயற்கையான மரணத்தால் இறந்தாரா என்ற இந்த பிரச்சனை, பயனற்ற ஒரு சர்ச்சையாகும். இதனால் எந்தப் பயனும் விளையாது!

எனவே எந்த யூதருக்கும் எந்தக் கிறித்தவருக்கும் மஸீஹின் சிலுவைத் தண்டனை குறித்து உறுதியான நம்பிக்கை இல்லை என அல்லாஹ் மிகவும் விளக்கமாக வலுவான ஆற்றலுடன் கூறுவதில் என்னதான் பெரிய நோக்கமிருக்கிறது? என்பதையும் எதனை நிரூபிப்பதற்காக யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் பதில் சொல்ல முடியாமல் மவுனமாக்கியதன் பின்னால் இருந்த மாபெரும் குறிக்கோள் என்ன? என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அந்த நோக்கத்தைத் தான் மவுலவிகளின் பார்வையில் காபிராகவும் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனாகவும் இருக்க இவ்வடியானுக்கு அவன் தன் சிறப்பான ஆன்மீகக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றான். (இஸாலேயே அவ்ஹாம், பக்கம் : 288 - 294 )

எமது நான்கு கேள்விகள்

4:159 வசனதுக்கு நீங்கள் ஈஸா வானத்திலிருந்து வந்த பிறகு அவர்கள் மீது வேதக் காரர்கள் ஈமான் கொள்ளுவார்கள்" ஆகவே அவர் மரணிக்கவில்லை என்ற கருத்தை வைத்துக் கொண்டு இந்த வசனதுக்கு மேலே சொன்னவாறு பொருள் கொள்பவராக இருந்தால் எது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:
1- நீங்கள் அந்த வசனதுக்கு அவ்வாறு பொருள் கொடுப்போராக இருந்தால், அனைத்து வேதக்காரர்களும் என்று அந்த வசனத்தில் வருகிறதே, ஆனால் ஈஸா வருவதற்கு முன் பல்வேறு கணக்கான யூதர்கள் மரணித்துவிட்டார்களே அவர்களின் நிலை என்ன...? இந்த வசனத்தில் மரணித்து போன அந்த வேத காரர்கள் அடங்க மாட்டார்களா...? இல்லை அடங்க மாட்டார்கள், ஈஸா வந்த பிறகு அந்த சமயம் இருக்கக்கூடிய வேதக் காரர்களையே இது குறிக்கும் என்று சொல்வதாக இருந்தால், ஹதீஸில் 70 ஆயிரம் யூதர்கள் தஜ்ஜாலுடன் இருப்பார்கள் என்று வந்துள்ளதே, இதற்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்..? இதோ யூதன் எனக்கு பின்னாடி ஒளிந்திருக்கிறான் என்று ஒவ்வொரு கல்லும் சொல்லும் என்று ஹதீஸ் கூறுகிறதே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்...?
2-இந்த வசனதுக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் சரி என்றால், அந்த வசனத்தில் அல்லாஹ் அனைத்து யூதர்களும் நம்பிக்கை கொண்டு விடுவர் என்று கூறிய பிறகு அதற்கு அடுத்தடுத்த வசனங்களில் ஏன் அவர்களின் நிலையை மன்னித்து பேசாமல் அவர்களை தூற்றி பேச வேண்டும்....? இது குர்ஆன் கூறும் கூற்றின் நடைமுறையாகுமா...?
3- இந்த வசனதுக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் சரி என்றால், இந்த வசனதுக்கு முன்புள்ள வசனம் 4:46 இல் அவர்கள் (யூதர்கள்) "குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள். " என்று வருகிறதே, பிறகு எப்படி, எந்த வகையில் நீங்கள் இந்த வசனதுக்கு ஒரு முரண்பட்ட பொருளை கொடுத்துள்ளீர்கள்...? இது முரண்பாடு இல்லை என்றால் விளக்கவும்.
4-இந்த வசனதுக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் சரி என்றால், சூரா ஆலி இம்ரான் வசனம் 55 இல் ஈஸாவை பின்பற்றுவோரை அவரை நிராகரித்தவர்களின் (யூதர்களின்) மீது இறுதி நாள் வரை வெற்றி பெற செய்வான். என்றும் 5:14 இல் "இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்" என்றும், 5:64 இல் "ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்" என்றும் கூறி உள்ளானே...அனைத்து வேத காரர்களும் ஈஸா மீது ஈமான் கொண்டு விட்டால், இந்த வசனங்களின் நிலை என்ன...? ஈஸா வை பின்பற்றுவோர் எப்படி வெற்றி கொள்ளுவர், எவ்வாறு அவர்களின் மத்தியில் (கிருஸ்தவர், யூதர்கள் மத்தியில்) வெறுப்புணர்ச்சி நிலைத்திருக்கும்...?

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.