இந்த உம்மத்தில் இருந்தே நபிமார்கள் தோன்ற முடியும் - தீர்ப்பு கூறக்கூடிய நபிமொழி

இந்த உம்மத்தில் இருந்தே நபிமார்கள் தோன்ற முடியும்

 

தீர்ப்பளிக்கின்ற  ஹதீஸே குத்ஸீ

இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (அலைஹிர் ரஹ்மா) அவர்கள் ‘கியாபாத்துல் பைத்தி பீ கஸாயிஸில் ஹபீபில் மரூபி பில் கஸாயிஸில் குப்ரா என்ற தனது நூலில் ஒரு ஹதீஸே குத்ஸியைக் கொடுத்திருக்கிறார்கள். அது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் நபி தோன்றுவார் என்னும் விஷயத்திற்கு தீர்ப்பளிக்கக் கூடியதாக இவ்வாறு இருக்கிறது:

‘வஅக்ரஜ அபூ நயீமின் ஃபில் ஹில்யதி அன் அனஸின் கால கால ரஸூலுல்லாஹி (ஸல்) அவ்ஹல்லாஹு இலா மூஸா நபிய்யி பனீ இஸ்ராயீல அன்னஹூ மன் லகியனீ வஅஹுவ ஜாஹிதுன் பிஅஹ்மத அத்கல்துஹுன்னார. கால யா ரப்பி வமன் அஹ்மது. கால மாகலக்த்து கல் அக்ரம அலைய்ய மின்ஹு கதப்து இஸ்மஹூ மஅ இஸ்மீ ஃபில் அர்ஷி. கப்ல அன் அக்லுக ஸ்ஸமாவாத்தி வல் அர்ழ். இன்னல் ஜன்னத முஹர்ரமதுன் அலா ஜமீயி கல்கி ஹத்தா யத்குலஹா வ உம்மதுஹூ. கால வ மன் உம்மதுஹூ. காலல் ஹம்மாதூன யஹ்மிதூன சவூதன் வஹமூதன் வ அலா குல்லி ஹாலின் யஷுத்தூன அவ்சாதஹும் வ யுதஹ்ஹிரூன அத்ராஃபஹும். சாயிமூன பின்னஹாரி. வ ருஹ்பானுஹும் பில் லைலி. அக்பல மின்ஹுமுல் யஸீர வ அத்குலுஹுமுல் ஜன்னத பிஷ்ஷஹாததி அன்ல் லாயிலாஹ இல்லல்லாஹு. காலஜ்அல்னீ நபிய்ய தில்கல் உம்மதி. கால நபிய்யுஹா மின்ஹா. காலஜ்அல்னீ மின் உம்மதி ஸாலிகன்னபிய்யு. காலஸ்தக்தம்த வஸ்தஃகர வலாகின் சஅஜ்மவு பைனக வ பைனஹூ ஃபீ தாரில் ஜாலால். (கஸாயிஸுல் குப்ரா. தொகுதி 1 பக்கம் 12 தீயிரத்துல் மஆரி ஃப். பதிப்பு ஹைதராபாத் தெற்கு)            

பொருள்: அபூ நயீம் ஹில்யா என்ற தனது நூலில் ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அஹ்மது (ஸல்) அவர்களை நிராகரித்த நிலையில் என்னை சந்திப்பாரோ அவர் எவராக இருந்தாலும் அவரை நான் நரகத்தில் நுழைப்பேன் என்று இறைவன் பனீ இஸ்ராயீலின் நபி மூஸா (அலை) அவர்களுக்கு ஆகி அறிவித்தான். அதற்கு ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள், அஹ்மது என்பவர் யார்? எனக் கேட்டார். அப்போது (அஹ்மது ஆகிய) அவரை விட எனது பார்வையில் அதிகமாக கண்ணியமிக்கவரான வேறு எந்தப் படைப்பையும் நான் படைக்கவில்லை. வானம், பூமி ஆகியவற்றைப் படைப்பதற்கு முன்பே நான் எனது அர்ஷில் அவரது பெயரை எனது பெயருடன் எழுதி விட்டேன். சந்தேகமின்றி, அவரும் அவருடைய உம்மத்தும் சுவர்க்கத்தில் நுழையாத வரை எனது அனைத்து படைப்பினங்கள் மீது சுவாக்கத்தில் நுழைவது தடுக்கப்பட்டதாகும். என்று கூறப்பட்டது. மூஸா (அலை) அவர்கள், அன்னாரின் உம்மத் யார்? என்று கேட்டார். இறைவன், அவர்கள் மிகவும் (இறைவனைப்) புகழ்பவர் ஆவார்கள்; ஏறும்போதும், இறங்கும்போதும் புகழ்வார்கள்; பெரு முயற்சி செய்யவார்கள். மேலும் தமது உறுப்புகளை தூய்மையாக வைத்திருப்பார்கள். பகலில் நோன்பு வைப்பார்கள்; இரவில் உலகை விட்டு விடுபவர்களாக இருப்பார்கள். நான் அவர்களின் குறைவான செயலையும் ஏற்றுக் கொள்வேன். மேலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற ஷஹாதத் கலிமாவினால் நான் அவர்களை சுவர்க்கத்தில் நுழைப்பேன் என்று கூறினான்.

அப்போது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம், என்னை அந்த உம்மத்தின் நபியாக ஆக்குவாயாக என்று வேண்டினார். அதற்கு இறைவன், அந்த உம்மத்தின் நபி அந்த உம்மத்திலிருந்தே தோன்றுவார் என்று கூறினான். அப்போது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம்,  என்னை (அஹ்மதின்) அந்த உம்மத்தைச் சேர்ந்தவனாக ஆக்கி விடுவாயாக என்று வேண்டினார். அப்போது இறைவன், நீர் முன்னர் தோன்றி விட்டீர்; அவர்கள் பின்னர் தோன்றுவார்கள். ஆயினும் உம்மையும் அவர்களையும் தாருல் ஜலால் (கம்பீரமான) இல்லத்தில் அதாவது சுவர்க்கத்தில்) ஒன்று சேர்த்து விடுவேன் என்று கூறினான்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும், ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களைப் போன்று அசலாகவே இந்த உம்மத்திற்கு வர முடியாது. ஏனெனில், இந்த ஹதீஸின்படி, நபி இந்த உம்மத்திலிருந்தே வர முடியும். எனவே ஹதீஸுகளில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ்வின் நபியாகிய வாக்களிக்கப்பட்ட ஈஸா அல்லாஹ்வின் ஒரு நபியாக ஆகவிருந்தார். மேலும் நுபுவ்வத் நின்று விட்டது என்பதன் கருத்து, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்திற்கு வெளியிலிருந்து இனி வேறு யாரும் நுபுவ்வத்தின் அந்தஸ்தைப் பெற முடியாது என்பதாகும். ஃபததப்புர் யா உலில் அல்பாப். (அறிவுள்ளவர்களே! சிந்தியுங்கள்.) 

-முரப்பி முஸ்ஸம்மில் அஹ்மது சாஹிப் - சென்னை  

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.