அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-4


 

நான்காவது கேள்வி

கலிஃபாவை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜமாத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏன் பங்கேற்பதில்லை?

கலிஃபாவை தேர்ந்தெடுத்தல் என்கின்ற மிகப்பெரிய மகத்துவமிக்க நற்பணியானது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானதல்ல. இதில் அனைவரும் பங்கேற்க முடியாது. மேலும் எவர்களது வயது 16 அல்லது 18 அவர்கள் பங்கு பெற வேண்டும் என்பதும் இல்லை. குறிப்பிட்ட நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. கிலாஃபத்தை தேர்ந்தெடுக்கும் அமைப்பு உலகளாவிய ஜனநாயக தேர்தலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இறைவனிடத்தில் நம்பிக்கையாளர்களின் கூட்டம்; அவர்களுக்கு இறையச்சத்தை மேற்கொள்கின்றவர்களிலிருந்து ஒருவரை இமாமாக நியமிப்பாயாக, மேலும் அவர்களிலிருந்து இறையச்சத்தை மேற்கொள்கின்றவர்களுக்காக இமாமை நியமிப்பாயாக; என துஆ செய்கின்றனர். இறையச்சத்தை மேற்கொள்கின்ற அவர்களுக்கு இமாமாக ஆக கூடியவர் அனைவரையும் விட அதிக இறையச்சத்தை பெற்றவராகவும், நேர்மையானவராகவும் விளங்குவார். எனவே  இமாமிற்கு வாக்களிப்பவர் சுயம் இறையச்சம் உடையவர்களில் இருப்பது அவசியமாகும். நம்பிக்கையாளர்களில் அனைவரையும் விட  சிறந்தவரையே தேர்ந்தெடுப்பாயாக என்று இறைவனிடத்தில் மன்றாடப்படுகின்றது. ஆக இறைவனிடத்தில் இந்த துஆவை செய்கின்றவர் சுயம் மற்றவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியமாகின்றது. எவ்வாறு ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் தமது சமுதாயத்திலிருந்து சிறந்த நபர்களில் 70 நபர்களை இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோருவதற்காக தேர்ந்தெடுத்தார்களோ இது அதைப்போன்றே ஆகும். (சூரா அஹ்ராஃப், வசனம் 156)

எனவே, இறையச்சமுடையவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் விருப்பத்தை அவர்களின் கைகளால் வெளிப்படுத்தும் பாக்கியத்திற்கு தகுதியானவர்கள் ஆவர். இறையச்சமுடையவர்களில் சிறந்தவர்கள் இறைவன் யாருக்கு நற்செய்தி கூறுகின்றானோ அவர்களே ஆவர். மேலும் அவன் யாரை கலீஃபாவாக ஆக்க விரும்புகிறானோ அதை குறித்து அவர்களுக்கு கூறிவிடுகிறான். கலிஃபாவை தேர்ந்தெடுக்கும் அருளுக்குரிய நற்பணியில் பங்கேற்பவர் இறையச்சத்தின் உயர்ந்த அந்தஸ்தை அடைந்து இருக்கக்கூடியவர் ஆவர். மேலும் இவர்கள் தன்னுடைய இறைத் தொடர்பின் காரணமாக; இறைவன் தன்னுடைய விருப்பத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துமாறு இறைவனிடத்தில் துஆ செய்யும்போது; இறைவன் செயல் ரீதியாக, எவரை இறையச்சம் உடையவர்களுக்கு இமாமாக ஆக்க விரும்புகிறானோ அவர் பக்கம் இவர்களுடைய உள்ளத்தையும், கவனத்தையும்   திருப்பி விடுகிறான்.

ஜனநாயக தேர்தல்கள் மற்றும் கலிஃபாவை தேர்ந்தெடுத்தல்

கலிஃபாவை தேர்ந்தெடுக்கும் முறை மேற்கத்திய ஜனநாயக தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். ஜனநாயக தேர்தல் முழுக்க முழுக்க மக்கள் கருத்தைச் சார்ந்ததாகும். ஆனால் கலீஃபாவின் தேர்வு இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த தேர்வானது, முழுக்க முழுக்க அல்லாஹ்வை சார்ந்து இருக்கிறது. ஜனநாயக தேர்தலில் மக்கள் தம்மை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தன்னுடைய பெயரை தானே முன்மொழிவார்கள். ஆனால் தன்னை தூய்மையானவனாக  அறிவித்துக் கொள்வது இறை கட்டளைக்கு மாறு செய்வதாகும்.

فَلاَ تُزَکُّوْا اَنْفُسَکُمْ

எனவே நீங்களே உங்களைத் தூயவர்கள் என்று கூறிக் கொள்ளாதீர்கள்.

ஜனநாயக தேர்தலில் தன்னை முன்னிறுத்தும் நபர்; தனக்கு எதிராக தனது பெயரை முன் வைத்த மற்ற நபரை விட சிறந்தவர் என்று நம்புகிறார். எவ்வாறு இதற்கு முன்பு اَنَا خَیْرٌ مِّنْہُ۔ (நான் அவனை விட சிறந்தவன்) என்று இப்லீஸ் கூறினானோ அவ்வாறு அவர் தமது நாவினால் கூறுகின்றார்.

இறையச்சம் இல்லையென்றால் இறைவனுடைய கிலாஃபத்தும் இல்லை

தேர்ந்தெடுக்கும் பணியில் இறையச்சம் இல்லையென்றால் பிறகு அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விடுகின்றது. இறையச்சத்திலிருந்து விலகியிருக்கின்றவர்களுக்கு இறைவனுடைய விருப்பம் வெளிப்படாது. பிறகு அனைத்து விஷயமும்  மக்களிடம் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால், அவர்கள் தங்களுடைய வாக்கின் மூலம் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனவே மக்களுடைய அனைத்து தேர்ந்தெடுப்பும் இறைவன் புறமிருந்து இருக்கும் என்பது அவசியமில்லாதது.

ஆக இறைவனுடைய கட்டளையினால் நபி உருவாக்கிய நம்பிக்கையாளரின் ஓர் ஜமாஅத் இருந்து. அந்த ஜமாஅத் இறையச்சத்தில் நிலை பெற்றிருந்து. ஈமான் மற்றும் நற்செயல்களின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்து, எவ்வகையான தனிப்பட்ட விருப்பம் மற்றும் கலிஃபா ஆவதற்கான விருப்பம்  கொண்டிருக்காமல், எந்த நபரும் தன்னுடைய பெயரை  முன்மொழியாமல், மேலும் தேர்தலின்போது மற்றவர்களை காட்டிலும் அதிக இறையச்சத்தை கொண்ட நம்பிக்கையாளர்கள் பங்கு பெற வேண்டும். இப்படிப்பட்டவர்கள் இறைவனுடைய சன்னதியில் விழுந்து அவனிடம் வழிகாட்டலை வேண்டிய பிறகு ஓட்டு போட்டு, இறையச்சமுடையோரின் இமாமாகத் திகழும் வகையில் இறையச்சம் உள்ளவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அப்பொழுது தான் அந்த மனிதன் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கருதபடுவார்.

எனவே உலக தலைவர்களுடைய தேர்ந்தெடுப்பு இறைக் கட்டமைப்பைப் போன்று இருக்காதபோது; நிச்சயமாக இப்படிப்பட்ட நபர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருப்பதில்லை. ஆம்! இந்த தேர்தல் ஜனநாயகமாக வேண்டுமானால் இருக்க முடியுமே தவிர இறைவனுடையதாக இருக்க முடியாது. ஏனென்றால் இறைக் கட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு கீழ் இது நிறைவேற்றப்படுவதில்லை. ஹிட்லருக்கும் ஆட்சி ஜனநாயக தேர்தல் மூலம் கிடைக்கப் பெற்றது. ஆனால் இது இறைக் கட்டமைப்பிற்கு ஏற்றாற்போல் இருந்ததில்லை. மேலும் இந்த தேர்தலில் இறையச்சத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆகையால் ஹிட்லரை இறைவனே நிறுத்தினான் என்று கூற இயலாது. எங்கு இறையச்சம் இருப்பதில்லையோ அங்கு இறைவனுடைய அருளும் இருக்காது.

நன்றி: அல்-ஃபஸ்ல் இன்டர்நேஷனல் பத்திரிகை   

மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன்-ஈரோடு

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.