ஐந்தாவது கேள்வி: கலிஃபாவை எந்த மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள்.?
தேர்தல் குழு
தேர்தலின் அனைத்து பணியும் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இறையச்சம் இல்லாவிட்டால் இறைவனும் இந்த தேர்தலில் பங்கேற்பதில்லை. இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகின்றது. அது என்னவென்றால், கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் பணியில் எந்த மக்கள் பங்கேற்கின்றார்கள்? மேலும் அவர்கள் இறையச்சத்தின் உயர்ந்த அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்று நாம் எவ்வாறு நம்ப முடியும்?
இதற்கு பதில் என்னவென்றால், இப்பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட ஒரு குழு உள்ளது. அது "கிலாஃபத் தேர்தல் குழு" என்று அழைக்கப்படுகின்றது. இந்தக் குழு கலிஃபாவை தேர்ந்தெடுக்கும் நற்பணியில் பங்கேற்கும் நல்வாய்ப்பை பெறுகின்றது. இதன் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் இவர்கள் இறையச்சத்தின் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கவேண்டும் என்பது இக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரிய நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது முஹாஜிரின்கள் மற்றும் அன்சாரிகளில் இறையச்சத்தின் உயர்ந்த நிலையை அடைந்திருந்த மக்கள் ஒன்று திரண்டு அவர்களுக்குள் ஆலோசனை செய்து ஹஸ்ரத் அபூ பக்கர் (ரலி) அவர்களை முதல் கலீஃபாவாக தேர்ந்தெடுத்தார்கள். மேலும் ஹஸ்ரத் அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய மரணம் நேரம் நெருங்கியபோது; இனிவரும் காலத்தில் யாரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் எவரிடம் நேர்மை மற்றும் இறையச்சத்தை கண்டார்களோ அவர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். இறையச்சத்தை மேற்கொண்டிருந்த அனைத்து நம்பிக்கையாளர்களும் ஹஸ்ரத் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களை தங்களுக்கு பின்னர் கலீஃபாவாக நியமிக்கலாம் என்று ஒரு மனதோடு ஒத்த கருத்தைக் கூறினார்கள். ஹஸ்ரத் அபூ பக்கர் (ரலி) அவர்களும் இதில் திருப்தி அடைந்தார்கள். ஆகையால் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் இறைவனிடம் இஸ்திகாரா செய்த பிறகு உமர் (ரலி) அவர்களுடைய பெயரை கலீஃபாவிற்காக முன்மொழிந்தார். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவானதும், கலீஃபாவின் தேர்தலைக் கண்காணிக்க தேர்தல் குழுவை அமைக்க உத்தரவிட்டார்கள். இந்தக் குழு ஆறு பெரும் சாஹாபிகள் கொண்டதாக இருந்தது. மேலும் இந்த சஹாபாகள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தின் நற்செய்தி வழங்கிய அந்த பத்து ஸஹாபாக்களில் இருந்தவர்கள் ஆவர்.
இஸ்லாத்தின் மறுமலர்ச்சிற்கான இரண்டாவது காலகட்டத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வருகைக்குப் பின்பு, ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸிஹ் அவர்களும் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடும் ஒரு தேர்தல் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்கள். பிறகு ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மசீஹ் (ரஹ்) அவர்கள் காலத்தின் மாற்றத்தை கருத்தில் கொண்டு இதனுடைய விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தார்கள். இந்தக் குழு, இஸ்லாத்திற்காகவும் ஜமாஅத்திற்காகவும் தூய உள்ளத்துடன் மற்றும் இறையச்சத்துடன் உன்னதமான சேவைகளை செய்த அந்த மக்களை கொண்டதாக இருந்தது. இந்தக் குழு கலீஃபா மரணித்த பிறகு தன்னுடைய பணியை தொடங்குகின்றது. காலத்தின் கலீஃபாவின் மரணத்திற்கு முன்பு எந்த பணியும் செய்வதில்லை. கலீஃபா மரணித்த பிறகு இந்தக் குழு கிலாஃபத்தின் தலைமையகத்தில் ஒன்று கூடுகின்றது. தொலைபேசி, ஃபேக்ஸ் அல்லது இன்டர்நெட் மூலம் வாக்களிக்க எவருக்கும் அனுமதி இல்லை. தலைமையகத்தில் மற்ற உறுப்பினர்களுடன் கலந்து கொள்வது அவசியமாகும். இது போன்றே அவர்கள் அங்கு சென்று கலீஃபாவுடைய மரணத்தின் துயரம் மற்றும் துன்பத்தில் பங்கு எடுப்பதால் நிச்சயமாக இறைவனுடைய நெருக்கத்தை அதிகரிக்க செய்கின்றது. மேலும் அவர் இறைவா நீ எவரை இறையச்சம் உடையவர்களுக்கு இமாமாக ஆக்க விரும்புகிறாயோ அவருக்கே நான் வாக்களிக்க எனக்கு வழி காட்டுவாயாக; என்று துஆ செய்கின்றார், துஆ செய்கின்றார் மேலும் துஆ செய்கின்றார். எனவே இயல்பாகவே, தேர்தல் குழுவில் பங்கு பெருபவர் இறையச்சத்தின் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தவராக இருக்கின்றார். இறைவன் இந்த குழுவில் இருக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் அவன் எவரை கலீஃபாவாக நியமிக்க விரும்புகிறான் என்று அறிவிப்பதில்லை என்ற விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு இறைவன் நிச்சயமாக வழி காட்டுகின்றான். மேலும் அவர்களின் உள்ளத்தை இறைவன் எவரை கலிஃபாவாக நியமிக்க விரும்புகின்றானோ அவர் பக்கம் திருப்புகின்றான்.
தேர்ந்தெடுப்பது யார்?
தேர்தல் குழுவில் பங்கேற்றுள்ள இறையச்சத்தை மேற்கொண்ட நபர்கள் இறைவனிடத்தில் அவன் யாரை கலிஃபாவாக தேர்ந்தெடுக்க விரும்புகின்றான் என்ற விண்ணப்பத்தை வைக்கின்றார்கள். ஆக இறைவன் எவரை கலீஃபாவாக தேர்ந்தெடுக்க விரும்புகின்றானோ அவரின் பக்கம் அதிக படியான மக்களின் உள்ளங்களை திருப்பிகின்றான். எனவே உண்மையில் இறைவன் தான் கலீஃபாவை தேர்ந்தெடுக்கின்றான் மக்கள் வெறும் வாக்கை தான் அளிக்கின்றார்கள்.
இவ்விஷயத்தை புரிந்து கொள்வதற்காக தங்கள் முன் நான் ஓர் உதாரணத்தை வைக்கின்றேன். உங்களிடம் ஒரு தட்டு உள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதில் பல வகையான பழங்கள் உள்ளன. உதாரணத்திற்கு மாம்பழம், ஆப்பிள் வாழைப்பழம் போன்றவை. அவைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து தங்களுடைய தந்தைக்கு கொடுங்கள் என்று யாராவது கூறினால்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்கேற்ப பழத்தை கொடுக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் தந்தையிடம் சென்று அவருடைய விருப்பத்தை கேட்டறிந்து அதற்கேற்ப அவருக்கு பழத்தை கொடுத்தால்; அந்த பழத்தை யார் தேர்வு செய்தது? அந்தத் தேர்வானது பழத்தை கொடுத்த தங்களுடையதா? அல்லது தன்னுடைய விருப்பத்திற்கேற்ப கூறிய அவருடையதா?
முற்றிலும் இதைப்போன்றே கலீஃபாவை தேர்ந்தெடுப்பதிலும் நிகழ்கின்றது. கலீஃபாவை தேர்ந்தெடுப்பது முற்றிலும் இறைவனையே சார்ந்துள்ளது. தேர்தல் பணியில் கலந்து கொள்கின்ற நம்பிக்கையாளர்கள் இறைவனுடைய விருப்பத்திற்கேற்ப பணியாற்றுகிறார்கள்.
மகத்தான நற்பாக்கியம் மற்றும் பெரும் அச்சம்
இங்கு இவ்விஷயத்தை கூறுவதும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அதாவது, இறைவன் நம்பிக்கையாளர்களை கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் பணியில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு மிகப்பெரிய நற்பாக்கியத்தை வழங்கியுள்ளான். நபியை தேர்ந்தெடுக்கும் போது நம்பிக்கையாளர்களின் எந்த இருப்பும் இருப்பதில்லை. ஆக இறைவன் சுயமே எவருடைய தொடர்பும் இல்லாமல் நபியை தேர்ந்தெடுக்கிறான். ஆனால் நபி தன்னுடைய முக்கிய கடமையை நிறைவேற்றிய பிறகு நம்பிக்கையாளர்களின் ஓர் ஜமாஅத்தை உருவாக்கி விடுகின்றார். இத்தேர்தலில் கலந்து கொண்டு அவர்களும் அருட்களையும், நன்மைகளையும் பெறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம்பிக்கையாளர்களையும் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் இந்த பாக்கியமான செயலில் ஈடுபடுத்துகிறான். இறைவனால் எவருடைய தொடர்பும் இல்லாமல் கலீஃபாவை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் இது நம்பிக்கையாளர்கள் ஜமாத்துடன் இறைவனுக்கு இருக்கும் அன்பு மட்டுமேயாகும். அதாவது அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்து கௌரவித்து, அவர்களுக்கு அருள்களை வழங்குகின்றான். எனவே அவர்களுடைய நாவினால் அவர்களுடைய கரத்தை உயர்த்துவதினால் இறைவனுடைய விருப்பம் வெளிப்படுகின்றது. இவ்வாறு கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகின்றது.
நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய நற்பாக்கியமாகும். ஆனால் இத்துடன் அச்சம் மற்றும் எச்சரிக்கையும் கலந்துள்ளது. அது என்னவென்றால், நம்பிக்கையாளர்களுடைய ஜமாஅத்தின் இறையச்சத்தின் தரம் நிலை குலைந்தது என்றால், அல்லது அவர்கள் கஃபாவிற்கு முழுவதுமாக கட்டுப்படவில்லை என்றால் பிறகு இறைவன் இந்த நற்பாக்கியத்தை திரும்ப எடுத்துக் கொள்கிறான். பிறகு அவர்கள் தகுந்த நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் இறைவனை ஒருபோதும் தம்முடன் காண்பதில்லை.
நன்றி: அல்-ஃபஸ்ல் இன்டர்நேஷனல் பத்திரிகை
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன்-திருச்சி
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None