கனவு மற்றும் வஹீ மட்டுமே நபித்துவ வாதத்திற்கு போதிய சான்றாக அமையுமா!? உண்மை மற்றும் பொய் நபியை பிரித்துக் காட்டும் ஃபுர்கான் எனும் சான்று
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அசல் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து ஏதாவது ஒரு ஷரீஅத் வழங்கப்படுகிறது. அது புதியதாக இருப்பினும் சரி அல்லது பழையதாக இருப்பினும் சரி (அதாவது முந்தைய நபியின் ஷரீஅத்தின்படி அமல் செய்யுமாறு கட்டளை வழங்கப்படுகிறது) இதேபோல் ஃபுர்கான் வழங்கப்படுகிறது. அதாவது எப்படிப்பட்ட அடையாளங்கள் வழங்கப்படுகின்றன என்றால் அவற்றின் மூலமாக உண்மை மற்றும் பொய்யை பிரித்தறிய முடியும். இந்த ஃபுர்கானே அவர்களின் உண்மைத்துவத்தை அடையாளம் காண்பதற்கான உண்மையான வழியாக இருக்கிறது. எல்லா காலங்களிலும் மக்கள் இந்த குறிப்பை புரிந்து கொள்ளாததன் காரணமாக உண்மையான நபிமார்களை ஏற்பதை விட்டும் மறுத்து விட்டனர், அல்லது பொய்யான நபிமார்களின் வலைக்குள் விழுந்து விட்டனர். அல்லாஹ் நபிமார்களின் உண்மைத்துவத்தை ஒற்றைப் பொருளைச் சார்ந்தாக மட்டுமே வைப்பதில்லை. மாறாக அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட சான்றுகள் வழங்கப்படுகின்றன. அவை ஒருமித்த வடிவில் அவர்களின் உண்மைத்துவம் அல்லது அவர்களின் உயர் தகுதிக்கு சான்று பகர்கின்றன.
சிலர் வெறும் ஒருசில கனவுகள் அல்லது இறையறிவிப்புகளைப் பார்த்து தம்மைத்தாமே தூதராக அறிவித்துக் கொள்ளத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் கனவுகள் மற்றும் இறையறிவிப்புகள் எண்ணங்களாகவும் இருக்க முடியும். நோய்களின் விளைவாகவும் இருக்க முடியும். இயல்பாகவும் இருக்க முடியும். ஷைத்தானுடையதாகவும் இருக்க முடியும். ரஹ்மானுடையதாகவும் இருக்க முடியும். வெறும் ஏதேனும் கனவு அல்லது இறையறிவிப்பு உண்மையாகி விடுவதால் அது ரஹ்மானைச் சேர்ந்தவராக நிரூபணமாகி விடுவதில்லை. ஏனென்றால் இயல்பான மற்றும் எண்ணங்களின் விஷயங்களும் பல நேரங்களில் நிறைவேறி விடுகின்றன. நபிமார்களின் இறையறிவிப்புகள் தனக்குள் ஒரு குறிப்பிட்ட வல்லமையைக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்குள் பரந்தத் தன்மை காணப்படுகிறது, காலத்தின் தேவைகளுக்கேற்ற மருத்துவம் இருக்கிறது. காலத்தின் நிலைமையில் மீது பொருந்தக் கூடியதாக இருக்கின்றன.
எனவே வெறும் இறையறிவிப்பு சில பலகீன இயல்புகளைக் கொண்டவர்களுக்கு தனித்துவதற்கான காரணியாக இருப்பதில்லை. ஆனால் இறையறிவிப்பு மட்டுமின்றி நபிமார்களுக்கு தமது வாதத்திற்கு முன்பு ஒரு பரிசுத்தமான மற்றும் தனித்துவமான வாழ்க்கை கிடைக்கிறது. திருக்குர்ஆனில் முஹம்மத் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பாக அல்லாஹ் கூறுகிறான்:
நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளைக் கழித்திருக்கின்றேனே, இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை? (10: 17)
இறையறிவிப்பு என்பது மூளையின் பலகீனத்தின் விளைவாக வெளிப்பட்ட தவறு எனக் கூற முடியும். ஆனால் இப்படிப்பட்ட தகுதியைக் கொண்ட மனிதரைக் குறித்து மூளையில் பலகீனம் ஏற்பட்டுவிட்டது எனக் குறிப்பிடுவது கடினமாகிவிடுகிறது. இறையறிவிப்பின் உண்மைத்துவமும் ஒரு சான்றாக இருக்கிறது. வாதத்திற்கு முந்தைய வாழ்க்கையின் பரிசுத்தமும் ஒரு சான்றாக இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு சான்றுகளும் இணைந்து மூன்றாவது சான்றாக உருவாகிவிடுகின்றன. இது தனக்குள் மிகப் பெரிய மகத்துவத்தைக் கொண்டுள்ளது, இது ஃபுர்கான் ஆகும். (தஃப்ஸீரே கபீர் 2:54 வசனத்தின் விளக்கத்தின் கீழ்)
மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில் - தூத்துக்குடி
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None