மூன்றாம் உலகப் போர் மற்றும் ரஷ்யாவின் பங்கு குறித்து அஹ்மதிய்யா இயக்கத்தின் கலீஃபாக்களின் எச்சரிக்கைகள்
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இரண்டாவது உலகப்போருக்குப் பின் இன்னும் பெரிய பரிமாணங்களுடைய மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என்றும் முன்னறிவித்துள்ளார்கள். இரண்டு எதிரெதிர் முகாம்கள் எந்த அளவிற்கு திடீரென்று மோதிக்கொள்ளும் என்றால் சற்றும் உணராத நிலையில் எல்லோரும் பிடிக்கப்படுவார்கள். மரணமும் அழிவும் வானத்திலிருந்து பொழியும், கடுமையான தீப்பிழம்புகள் பூமியைப் பற்றிக்கொள்ளும்.
நவீன நாகரீகத்தின் பிரம்மாண்டம் தரையில் வீழ்ந்து விடும். கம்யூனிஸ மற்றும் எதிர் அணியினர் ஆகிய இருவருமே இந்த செயலில் அழிந்துவிடுவர். ரஷ்யாவும் அதன் துணை நாடுகள் ஒரு புறமும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மறுபுறமும் அழிக்கப்படுவார்கள். அவர்களின் வலிமை உடைக்கப்பட்டு, அவர்களின் நாகரீகமும் அழிந்து போய் அவர்களின் அமைப்பும் நொறுங்கி விடும். உயிர் பிழைத்தவர்கள் திகைத்து நிற்பார்கள்.
மேலும் அந்த சோகத்தை கண்டு வியந்தும் நிற்பார்கள். மேற்கினை விடவும் ரஷ்யா இந்த பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு எழும். ரஷ்ய மக்கள் மீண்டு வருவது மட்டுமல்லாமல் வேகமாக பெருகியும் விடுவர் என்று முன்னறிவிப்பு தெளிவாக உள்ளது. அவர்கள் தங்களுடைய படைப்பாளனுடன் சமரசம் செய்து கொண்டு, இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் புனித தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக்கொள்வார்கள். எந்த மக்கள் இறைவனின் பெயரை அழிக்கவும், பூமி மற்றும் வானங்களிலிருந்து அவனை விரட்டவும் முயல்கிறார்களோ அவர்கள் தங்களின் வழிகளின் முட்டாள்தனத்தை உணர்ந்து கொள்வார்கள். நீண்ட காலத்திற்கு பிறகு, கடைசியாக அவனது ஏகத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்ட தீவிர நம்பிக்கையாளர்களாக அவனுக்கு அடிபணிவார்கள்.
இதை ஒரு கற்பனையாக நீங்கள் கருதலாம். ஆனால் மூன்றாம் உலகப் போரில் உயிர் பிழைப்பவர்கள் நான் சொல்வதன் உண்மையை கண்டு சாட்சி கூறுவர். இவை எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளாகும். அவை நிச்சயம் நிறைவேறும். எவராலும் அவன் விதித்ததை மாற்றமுடியாது.
(ஹஸ்ரத் மிர்ஸா நாஸிர் அஹ்மது (ரஹி) ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி), ஒரு அமைதியின் தூதுச்செய்தியும், ஒர் எச்சரிக்கை வார்த்தையும் - A Message of Peace and a Word of Warning, பக்கம் 11,12,13 – 28 ஜூலை 1967 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட உரை)
ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி)
மேலும், கம்யூனிச அமைப்பின் அழிவுக்குப் பிறகு இன்னும் அவதிப்படும் ரஷ்யா இன்றைய ரஷ்யாவாகவே எப்பொழுதும் இருக்காது. ரஷ்யா தன்னை மீண்டும் ஒருங்கிணைத்து வருகிறது. அதன் பொருளாதாரம் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும். இன்று ரஷ்யாவின் நிலை, ‘பாரடைஸ் ரீகெய்ன்ட் – சொர்க்கம் மீண்டும் கிடைத்தது’ என்ற பெயர் கொண்ட மில்டனின் மகத்தான படைப்பினை நமக்கு நினைவூட்டுகிறது. அதில் சாத்தானின் படைகள் ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு சொர்க்கத்தை மீண்டும் கைப்பற்றுகின்றன. எனவே, இந்த போட்டியிலிருந்து ரஷ்யா விலகி விட்டதாக கருத வேண்டாம்.
சோவியத் சோஷலிஸ குடியரசுகளின் ஒன்றியம் (USSR) ஒரு பெரிய நாடாகும். அல்லது பல நாடுகள் ஒன்றிணைந்து, அதன் பொருளாதாரம் பல ஐரோப்பிய நாடுகளை விடவும் வலுவானதாகும். அவர்கள் தங்களை மீண்டும் ஒருங்கிணைத்து, தங்கள் அமைப்பை முதலாளித்துவ அமைப்பாக மாற்றுவதற்கான, அதாவது தங்களை ஆசுவாசப் படுத்தி கொள்வதற்கான கால அவகாசம் அவர்களுக்கு கிடைத்தவுடன், ஜெர்மனியைப் போன்ற நிகழ்வுகள் அங்கேயும் நடக்கும் (அதாவது ஜெர்மனியைப் போல் மீண்டும் வலிமை அடைவார்கள்). எனவே, வாங்கும் சக்தி குறைந்து, பொருளாதாரச் சிக்கல்களும் பெருகி, போட்டியும் அதிகரித்து வரும் ஐரோப்பாவின் நிலைமையை இப்போது கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய நெருக்கடி எப்போதும் போருக்கே வழிவகுக்கும். இது ஒருபோதும் மறுக்க முடியாத ஒரு அடிப்படைக் கோட்பாடாகும்.
(ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி), நான்காவது கலீஃபத்துல் மஸீஹ்(ரஹி) – ரிவ்யூ ஆஃப் ரிலீஜியன்ஸ் - Review of Religions, ஃபிப்ரவரி 1994)
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதுஹுல்லாஹு தஆலா)
இது போன்றே நியூயார்க் டைம் பத்திரிகையில் சோவியத் யூனியனின் உடைய முன்னாள் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் சமீபத்தில் INS Treaty உடன்படிக்கை முறிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியை தொடங்கி விட்டதாக எழுதியுள்ளார். உலக விஷயங்களில் இராணுவ மயமாக்கலின் முதல் பலி அல்ல INS உடன்பாடு!!!! 2002 இல் அமெரிக்கா ஏவுகணைகளுக்கு எதிரான உடன்பாட்டில் இருந்து விலகிக் கொண்டது. மேலும் இந்த வருடம் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. ராணுவத்திற்கான செலவினங்கள் வானளாவிய அளவில் உயர்ந்து விட்டன மேலும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன இது இப்பொழுது ஏற்பட்டு கொண்டிருக்கின்ற அணு ஆயுதப் போரின் ஒரு போட்டியை குறித்தே நம்மை எச்சரிக்கின்றன .
அனைத்து நாடுகளும் ஒன்றுக்கு எதிராக ஒன்று அணிதிரண்டு விடும் பொழுது அத்தகைய போரில், குறிப்பாக அது அணு ஆயுதப் போர் ஆக மாறி விடும் பொழுது, அந்தப் போரில் எவரும் வெற்றியாளராக முடியாது. இது அணு ஆயுத போராக மாறிவிடும் என்பதற்கான வாய்ப்பை யாராலும் மறுக்க முடியாது. சளைக்காத ஆயுதப் போட்டி, உலகளாவிய பதட்டம், எதிர்ப்பு, உலகளாவிய நம்பிக்கை அற்ற தன்மை. இதற்கான அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். கருத்து கூறக்கூடிய நிபுணர்கள், அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் இத்தகைய முடிவிற்கு வந்துள்ளனர் அதாவது அணு ஆயுத போர் தூரத்தில் உள்ள ஒரு விஷயம் அல்ல மாறாக அது ஒரு வளர்ந்து வரும் ஆபத்தாகும் அதனை யாராலும் மறுத்து விட முடியாது……..
இதற்கு மாற்றமான விஷயங்களை நிச்சயமாக நாம் நினைத்துப் பார்க்க முடியாது. முன்னதாக நான் அணுஆயுதப் போர் மற்றும் வளர்ந்துக்கொண்டே செல்லும் உலகளாவிய ஆயுதப் போட்டியைப்பற்றி பல வல்லுநர்களை மேற்கோளிட்டு கூறினேன். மனிதர்கள் இதுவரை பார்த்திராத ஒரு அபாயகரமான பேரழிவை நோக்கி உலகம் செல்கிறது என்றும், அதன் அழிவுகளை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்ற அச்சத்திற்கு அந்த கட்டுரைகளும் மற்றும் பலவும் வலு சேர்க்கின்றன.
சில மதிப்பீடுகளின்படி அணுசக்தி போரின் விளைவுகள் உலகின் 90% ஐ சென்று அடைந்து விடும். அது மட்டுமல்லாமல் இன்று ஒரு அணு ஆயுதப் போர் நடந்தால் நாம் இன்றைய உலகத்தை அழித்துவிடுவது மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையினருக்கும் அழிவு மற்றும் துயரத்தின் ஒரு நீடித்த தொடரை நாம் விட்டுச்செல்வோம். எனவே நாம் நிதானமாக நம்முடைய செயல்களின் விளைவுகளை சிந்தித்துப்பார்க்க வேண்டும்…….
(ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதுஹு), ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ், உலகளாவிய அஹ்மதிய்யா இயக்கத்தின் தலைவர் – அமைதி கருத்தரங்கு சிறப்புரை – 9 மார்ச்சு 2019)
தொகுத்தவர்: ஜனாப் ஃபயாஸ் அஸ்லம் சாஹிப் - சென்னை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None