முன்னறிவிப்புகளில் ஈஸப்னு மர்யம் என்று கூறப்பட்டுள்ள அந்த மஸீஹ் மெஸாயா இறங்குவார் என்று உள்ளது. இந்த முன்னறிவிப்பு அதே மெஸாயாவை குறித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்தில் கடைசியில் தோன்றி அவரைப் பற்றி கூறப்பட்டிருந்தால் பிறகு இந்த முழு முன்னறிவிப்பும் நேரடி பொருளில் தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அந்த முன்னறிவிப்புகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் நேரடிப் பொருளில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஈஸாவையும் தஜ்ஜாலையும் தஜ்ஜால் உடைய கழுதையும் அந்த கழுதை செய்யக்கூடியதையும் நேரடி பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை உருவகமாக கொள்ள முடியாது. ஈஸாவின் வருகை உருவகமானதாக இருந்தால் அதாவது அவர் நேரடியாக வரமாட்டார், அவருடைய வருகை ஆத்மீகமானதாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டால் பிறகு இந்த முழு முன்னறிவிப்பையும் உருவகமாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உருவகமான கருத்தாக, தூது செய்தியாக. அது நேரடிப் பொருள் கொள்ளக் கூடிய தூதுச் செய்தி அல்ல. இறைவனும் இயேசு பிரானை போல உருவக மொழியில் பேசுகின்றான். அவர் நிறைய உவமை கதைகளில் பேசுகிறார். அதுபோல் திருக்குர்ஆனிலும் உருவகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த விஷயத்தில் நாம் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸின் பால் திரும்புவோம் இதில் ஈஸா நபியும், தஜ்ஜாலும், அவனுடைய கழுதையும் நேரடிப் பொருளில் கூறப்படவில்லை. எல்லா முன்னறிவிப்புகளையும் நாம் புரிந்துகொண்டு அவற்றை விளக்கிட வேண்டும். அவற்றிற்கு ஒரு ஆன்மீக திறவுகோல் இருக்கவேண்டும். அதை கொண்டு நாம் அந்த முன்னறிவிப்பை விளக்கி அதன் தூதுச் செய்தியை புரிந்துகொள்ள வேண்டும். ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறுதிக்காலத்தில் இறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது அன்னாருடைய பணிகளில் ஒன்று தஜ்ஜாலை கொல்வதாகும்.
யக்துலுத் தஜ்ஜால வ யக்துலுல் கின்ஸீர வ யக்ஸிருஸ்ஸலீப
அதாவது தஜ்ஜாலைக் கொல்வார், பன்றிகளை கொல்வார், சிலுவையை உடைப்பார்.
இந்த மூன்று பணிகளுமே இந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தஜ்ஜால் என்றால் அதே ராட்சஸன் பிரம்மாண்டமான ராட்சஸன். அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான் என்றால் அவன் நிலத்தில் நிற்கும்பொழுது அவனுடைய தலை மேகங்களின் மேல் இருக்கும் அவனுக்கு ஒரே ஒரு கண்தான் இருக்கும். ஒரு கண் வலது கண் பொட்டையாக இருக்கும். இன்னொரு கண் இடதுகண் பிரகாசமாக இருக்கும். எந்த அளவிற்கென்றால் அவனால் பூமியின் கீழ் உள்ள பொக்கிஷங்களை கூட ஊடுருவி எக்ஸ்ரே செய்து பார்க்க முடியும்.
இப்பொழுது நாங்கள் என்ன நம்புகிறோம் என்றால் இவை அனைத்தும் உருவகங்கள் ஆகும். தஜ்ஜால் என்று ஒரே ஒரு மனிதனைப் பற்றிக் கூறப்படவில்லை. மேலும் உண்மையிலேயே பன்றிகளைப் பற்றியும் அவற்றை இயேசு கொல்வது தொடர்பாக கூறப்படவில்லை. அசல் கற்கள் அல்லது ஆபரணங்களைக் கொண்டு செய்யப்பட்ட சிலுவைகளை பற்றியும் அவற்றை இயேசு முறிப்பார் என்றும் கூறப்படவில்லை.. ஈஸா (அலை) குறித்தும் நேரடிப் பொருளில் சொல்லப்படவில்லை. இந்த விஷயங்களும் நேரடிப் பொருளில் சொல்லப்படவில்லை. எங்களுடைய விளக்கம் எப்பொழுதும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. அதாவது இங்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஆத்மீக பிரதிநிதியை பற்றி கூறப்பட்டுள்ளது. நேரடிப் பொருளில் கூறப்படவில்லை அவர் மீண்டும் வரமாட்டார். அவர் வரும் பொழுது அவருடைய முக்கியமான பணி சிலுவையை உடைப்பதாகும். அதன் பொருள் திரியேகத்துவத்திற்கு ஆதரவாக கிறிஸ்தவம் கூறக்கூடிய அந்த நடுநாயகமான வாதத்தை உடைப்பது. இதுதான் சிலுவையாகும். இதுதான் சிலுவை குறிக்கின்ற விஷயமாகும். அதாவது திரியேகத்துவம் என்னும் மூன்று தெய்வ கொள்கை. அவர் வருவார் வந்து ஆத்மீகமான முறையில் சிலுவையை உடைப்பார். அதன் பொருளாவது அவர் மூன்று தெய்வ கொள்கைக்கு எதிராக மிகவும் வலுவான வாதங்களை முன் வைப்பார். அதனால் சிலுவை உடைந்தது போல் ஆகிவிடும். நிச்சயமாக நேரடிப் பொருளில் அல்ல.
பிறகு அவர் தஜ்ஜாலை கொல்வார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் அவருடைய வாளினை கொண்டு அல்ல. அதற்கு இது மட்டுமே பொருளாகும். அதாவது அவனுடைய தாக்கம் குறைய ஆரம்பித்து அவன் படிப்படியாக மறைந்து விடுவான். ஒரு புரட்சி ஏற்பட்டு கொண்டிருப்பதற்கான புதிய அடையாளங்கள் தோன்றிவிடும். மிகப்பெரிய சக்திகள் எல்லாம் தங்கள் வலிமையை இழந்து விடும் அதாவது தஜ்ஜால் என்ற பொருளாவது மிகப்பெரிய கிறிஸ்தவ சக்திகளாகும். இந்த கிறிஸ்தவ சக்தியின் அடையாளம் திரியேகத்துவ தத்துவமாகும், சிலுவை ஆகும்.
ஆக எப்படி நீங்கள் பார்த்தாலும் இவை அனைத்தும் ஒரே மக்களையே சுட்டிக்காட்டுகின்றது. அதாவது இறுதி காலத்தில் கிறிஸ்தவம் உலகமெங்கும் சக்தி படைத்தது ஆகிவிடும். அவர்கள் முழு உலகையும் ஆட்சி செய்வார்கள். இதுவே கிறிஸ்தவத்தின் அந்தஸ்தாக இருக்கும் இதனையே ஒரு மிகப்பெரிய ராட்சசன் ஆக குறியீடாக சொல்லப்பட்டுள்ளது. அவனுக்கு எதிராக எவருக்கும் எந்த சக்தியும் இருக்காது. இந்த ராட்சசன் எல்லா நிலங்களையும் கைப்பற்றி விடுவான் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் தற்கால, முந்தைய வரலாற்றைப் பார்க்கும் பொழுது முழு உலகிலும் ஒரு அங்குலம் நிலம் கூட கிறிஸ்தவ நாடுகளின் மேலான வல்லமையினால் பிடிக்கப்படாமல் ஆட்சி செய்யப்படாமல் இருந்தது இல்லை. அது பிரிட்டிஷார் ஆகட்டும் ஜெர்மானியர்கள் ஆகட்டும் அல்லது ரஷ்யர்கள் ஆகட்டும் அல்லது வேறு எந்த ஐரோப்பிய நாடோ அல்லது அமெரிக்காவோ கூட ஆகட்டும் முழு உலகமும் இந்த கிறிஸ்தவ சக்தியின் கீழ் வந்துவிட்டது. இதுவே மிகச் சரியாக தஜ்ஜாலின் தோற்றம் குறித்து நபி பெருமானார் (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்டது. சிலுவையை இரண்டாக உடைக்க கூடிய அளவிற்கு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது கைகளில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தார்கள்? ஈஸா (அலை) ஏசு இயற்கையாக இறந்துவிட்டார் என்ற அன்னாருடைய வாதமே ஆகும். அவர் சிலுவையில் மரணிக்கவில்லை மற்ற இறைவனுடைய நபிமார்களை போல சாதாரணமாக இயற்கை மரணம் அடைந்தார். எனவே அவர் இறைவனுடைய மகன் கிடையாது. நீங்கள் இதை நம்பினால் அல்லது இதை நம்புவதற்கான ஆதாரங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டால், சிலுவை உடைந்துவிட்டது.
இது ஒரு பொருள் ஆகும். நாங்கள் ஏற்றுக் கொண்ட பொருளாகும். இந்த பொருளை நீங்கள் மறுத்தால் பிறகு உங்களுக்கு ஒரே ஒரு மாற்று வழிதான் இருக்கிறது. அதாவது அஹ்மதியா ஜமாத்துக்கு எதிராக உள்ள முல்லாக்கள் முழு உலகிலும் பிடிவாதமாக பிடித்துக் கொண்டு இருக்கின்ற அந்தப் பொருளை ஏற்றுக் கொள்வதாகும். அவர்கள் கூறுகிறார்கள் இல்லை இல்லை இது முட்டாள்தனமாகும். நாங்கள் திருக்குர்ஆனை அறிவுபூர்வமாக விளக்கிட அனுமதிக்க மாட்டோம். புனித குர்ஆனை அல்லது புனித ஹதீஸை அறிவுபூர்வமாக விளக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை அளித்தது? என்று கேட்கிறார்கள். நாம் அதில் உள்ள அதே நேரடி பொருளை சொல்லுக்குச் சொல் அப்படியே பின்பற்றுவோம். ஆனால் அதற்குப் பிறகு இன்னும் பெரிய வேறுபாடுகள் தோன்றுகின்றன மிகவும் சிக்கலான வேறுபாடுகள்.
அவர்கள் கூறுகிறார்கள்: ஈஸா (அலை) வருவார்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு வருவார்கள். இதுவரை அவர் தோன்றவில்லை அவர்களை பொருத்தவரை. அவர் என்ன காண்பார் அவர் ஒரு தஜ்ஜாலை காண்பார் ஒரு மிகப்பெரிய ராட்சசன் அவனுடைய பரிமாணங்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்றால் நம்ப முடியாததாக இருக்கும். அவனைப் போன்ற ஒரு மனிதனை கற்பனை கதைகளில் ஜின்களைப் பற்றிய கதைகளில் கூட காண முடியாது. இவனைப் போன்ற இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான எந்த ராட்சசனை பற்றியும் எங்கும் குறிப்பிடப்படவில்லை அவர்கள் அப்படி ஒரு ராட்சசன் பிறப்பான் என்று நம்புகிறார்கள். அவன் முழு உலகத்திலும் பயணித்து எல்லா நாடுகளையும் எல்லா மக்களையும் பிடித்து விடுவான் அவனுடைய பயணத்திற்கான சாதனம் என்னவாயிருக்கும்? அவன் எப்படி அவ்வளவு வேகமாக பயணிப்பான்? அவன் வேகமாக ஓடுவானா??
அவர்கள் கூறுகிறார்கள்: இல்லை இல்லை ஹதீஸ் நமக்கு இதையும் சொல்கிறது. ஒரு கழுதை ஒன்று பிறக்கும் இந்த பெரிய ராட்சசனை சுமந்து செல்வதற்காக. அந்த கழுதையும் அந்த ராட்சசனுக்கு ஏற்றார்போல் மிகப் பெரியதாக இருக்கும். அதன் இரண்டு காது மடல்களுக்கு இடையிலான தூரம் 105 அடிகளாக இருக்கும். அதனுடைய பிரம்மாண்டத்தை பொருத்தவரை அது அந்த ராட்சசனையே தன்னுடைய முதுகில் வைத்து உலகமெங்கும் சுமந்து செல்லும். ஆனால் அதே நேரத்தில் அதனுடைய வயிற்றின் இரு விலா பக்கங்களிலும் வாயில்கள் இருக்கும். அது பல நிறுத்தங்களில் (Stops) நின்று செல்லும் அது கிளம்பும்போது உரத்த குரலில், இந்த ராட்சசன் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வளவு நிமிடங்கள் தான் இருக்கின்றன, இவ்வளவு நிமிடங்கள் தான் இருக்கின்றன வந்து உள்ளே அமருங்கள் என்று அறிவிக்கும். மக்கள் விரைவாக ஓடிவந்து கழுதையின் வயிற்றுக்குள் அதன் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக நுழைந்து கொள்வார்கள், அதன் இரண்டு பக்கங்களிலிருந்தும்.
விசித்திரமான ராட்சசன் அவனுக்கு உதவுவதற்கு ஒரு விசித்திரமான கழுதையும் கூட. மேலும் ஹதீஸ் நமக்கு கூறுகிறது: இந்த கழுதை மற்ற மிருகங்களைப் போல் தீவனத்தை உண்ணாது. அது நெருப்பால் இயக்கப்படும் ஒரு கழுதையாக இருக்கும். அது ஒரு நெருப்பு சக்தியை கொண்ட கழுதையாக இருக்கும் அது தான் நகர்ந்து செல்வதற்கும் தன்னுடைய பணிகளை பார்ப்பதற்கும் உண்டான சக்தியை அந்த நெருப்பை உண்டு நெருப்பிலிருந்து பெறும். தீவனத்தை உண்ண கூடிய கழுதையாக அல்லாமல் ஒரு புதிய வகை கழுதை தஜ்ஜாலுக்காக படைக்கப்படும் அது நெருப்பை உண்ணும். இது மிகவும் தெளிவாக உள்ளது.
அந்த கழுதையுடைய வேகம் என்னவாக இருக்கும்? அது எவ்வளவு வேகமாக தன்னையும் தன்னுடைய வயிற்றில் இருக்கும் மக்களையும் சுமந்து செல்லும்? நபி பெருமானார் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை அந்த கழுதையின் வேகம் நிலத்திலும், கடலிலும், வானத்திலும் வேறுபடும். அது நிலத்தில் தன்னுடைய பயணிகளை அவர்கள் 30 நாட்களில் கடந்து செல்லக்கூடிய தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து சென்று அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். அவ்வளவு வேகமாக நகர்ந்து செல்லும்.
அது பூமியில் மட்டும்தான் பயணம் செய்யுமா? அல்லது கடலிலும் செல்லுமா? ஹதீஸ் கூறுகிறது: ஆம் அது கடலிலும் நீந்திச் செல்லும் அது மூழ்கி விடாது. அதே கழுதை நெருப்பால் இயங்கக்கூடிய கழுதை கடலில் நீந்திச் செல்லும். அது மூழ்கி விடாது ஆனால் அது இன்னும் அதிக சுமைகளை தன் முதுகில் சுமந்து செல்லும். இன்னும் சொல்லப்பட்டுள்ளது இந்த கழுதை அதன் எஜமானர் ஆகிய தஜ்ஜாலால் ஏழை நாடுகளுக்கு கோதுமை மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்காக உபயோகப்படுத்தப்படும். அது கடலில் நீந்தும் பொழுது மலைபோன்ற அளவு சுமைகளை அதன் முதுகில் சுமந்து செல்வது போல் இருக்கும்.
அந்த உணவுப் பொருள் உலகெங்கிலும் உள்ள எல்லா ஏழை மக்களுக்கும் பாரபட்சமின்றி அனுப்பப்படாது. தஜ்ஜாலுக்கும் அவனுடைய மேலாதிக்கத்திற்கு தலைகுனியும் அந்த மக்களுக்கு மட்டுமே அது அனுப்பப்படும். எனவே அந்த நிவாரண உதவிகளுக்கு ஒரு நிபந்தனை இருக்கும். அது இலவசமாக எல்லோருக்கும் கிடைத்துவிடாது. சோமாலியா போன்ற நாடுகளில் பசியால் பட்டினியால் அவதிப்படும் மக்களுக்கு அது வழங்கப்படாது. ஏனென்றால் அவர்கள் தங்களை அமெரிக்க கொள்கைகளுடன் இணைத்துக் கொள்ளவில்லை. எந்த மக்கள் தங்களுடைய எஜமானர் ஆக தஜ்ஜாலையும் அவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த நிவாரண உதவி வழங்கப்படும். ஏன் இல்லை? இந்த கழுதை இந்த பணியை செய்யும்.
நபிமொழிகளின் படி இது மட்டுமே நமக்கு ஆச்சரியத்திற்குரிய விஷயம் அல்ல. நபி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த கழுதையால் மேகங்களுக்கு மேலாக பறக்கவும் முடியும். அவர்கள் கூறுகிறார்கள்: சில நேரங்களில் அது எவ்வளவு பெரிதாக எகிறி குதிக்கும் என்றால் அதன் ஒரு கால் கிழக்கிலும் ஒரு கால் மேற்கிலும் இருக்கும். இந்தியா, ஆப்பிரிக்கா அல்லது பாகிஸ்தான் அல்லது எந்த ஒரு கிழக்கத்திய நாட்டில் இருந்தும் கிளம்பி ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் போய் இறங்க கூடிய எந்த ஒரு விமானமும் புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய உண்மைத்துவத்தை தொடர்ந்து பறைசாற்றுகின்றது. இதைத்தான் அவர்கள் கற்பனை செய்தார்கள் இதைத்தான் அவர்கள் முன்கூட்டியே கண்டார்கள் அன்னார் அல்லாஹ்வுடைய உண்மையான நபி என்பதற்கு நான் இப்பொழுது ஒரு ஆதாரமாக இருக்கின்றேன். அன்னாருடைய முன்னறிவிப்பு சரியானதாகும் என்று அது பறைசாற்றும்.
நம்முடைய வழிமுறையில் இது விளக்கப்படும் பொழுது இவ்வாறு நடக்கின்றது, அதாவது இந்த முன்னறிவிப்பு ஒரு உருவகம் என்று நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது, அது அசல் கழுதை கிடையாது. அது ஒரு போக்குவரத்து சாதனம் மட்டுமே. அந்தப் போக்குவரத்து சாதனம் அது நிலத்தில் செல்லக் கூடியதாக இருந்தாலும் கடல்வழிப் பயணமாக இருந்தாலும் வானத்தில் பறக்கக்கூடியதாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் ஒரு பொதுவான பண்பு இருக்கும். அது அவை நெருப்பு சக்தியால் இயங்கக் கூடியதாக இருக்கும். கழுதைகளுடைய உணவை அது உண்ணாது. எனவே மீண்டும் இது ஓர் உவமையான விஷயமாகும்.
ஆனால் மற்ற முல்லாக்கள் பொறுத்தவரை இது இப்படி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இல்லை, இல்லை அபத்தமாக பேசாதீர்கள் நபி பெருமானார் (ஸல்) அப்படி ஒரு கழுதை பிறக்கும் என்று கூறினால் நம்புங்கள். அப்படி நிச்சயமாக பிறக்கும். இன்று இல்லை என்றால் நாளை பிறக்கும். நீங்கள் ஒரு மிகப்பெரிய கழுதையை ஒரு பலவீனமான தாய் கழுதைக்கு பிறப்பதை காண்பீர்கள். அது பிறந்து அசாதாரணமான ஒரு உருவத்தை அடைந்து விடும். பிறகு நீங்கள் பார்ப்பீர்கள் அந்த ராட்சஸன் எங்கிருந்தோ தோன்றிடுவான். பிறகு அவன் அந்த கழுதையின் விலாப் புறத்தில் உள்ள வாசல் வழியாக நுழைந்து பயணிப்பான். எல்லாவிதமான நவீன கால விமானங்களும் கைவிடப்படும் எல்லா ரயில்களும், கப்பல்களும் கைவிடப்படும். மனித இனத்திற்கு ஒரு புதுமையான போக்குவரத்து சாதனம் கிடைத்துவிடும். அவர்கள் எப்பொழுதும் இந்த கழுதையின் வயிற்றுக்குள் உட்கார்ந்து பயணம் செய்வதை விரும்புவார்கள். இதுதான் அவர்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் இப்பொழுது எந்த பக்கம் இருக்கிறீர்கள்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளை கருத்தில் கொள்ளுங்கள். இந்த விளக்கமே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உயர்விற்கு உயர்ந்த பாராட்டுரை வழங்கக்கூடிய விஷயமாகும். நீங்கள் தேர்ந்தெடுக்கப் போவது இந்த அறிவுப்பூர்வமான விளக்கமா? அல்லது அவர்களுடைய முட்டாள்தனமான விளக்கமா? அந்த விளக்கம் கற்பனை கதைகளை கூட வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
(ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி), அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 9 ஜூலை 1995 இல் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் வழங்கிய பதில்)
மொழியாக்கம்: ஜனாப் ஃபயாஸ் அஸ்லம் சாஹிப் - சென்னை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None