(ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 1985 இல் ஆற்றிய ஜுமுஆ சொற்பொழிவு)
.....................................................
இன்றைய ஜுமுஆ சொற்பொழிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர்ஆனின் அத்தியாயம் சூரா இப்ராஹீம் ஒன்று முதல் நான்கு வரையுள்ள இந்த இறை வசனங்களில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பிற்குரிய ஒரு பண்பை இறைவன் கூறியுள்ளான். அவர்கள் மக்களை பல்வேறு இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் கொண்டு வந்தார்கள். இதே பணியினை அவர்களின் சீடர்களும் மேற்கொண்டு அவர்களுக்கு உதவிட முன்வருவார்கள். இதனால் நான்கு புறமும் ஒளிமயமாகிறது.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் "அஸ்ஹாபீ கன்னுஜூமி. பி அய்யிஹிமிக்ததைத்தும் இஹ்ததைத்தும் - என் தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்கள் நீங்கள் அவர்களுள் யாரைப் பின்பற்றினாலும் உங்களுக்கு நேர்வழி கிடைத்து விடும்.
மாபெரும் இப்பணியினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறைவன் ஒப்படைத்துள்ளான். அவன் அவன் வானங்களையும் பூமியையும் படைத்து பரிபாலிப்பவன் ஆவான். அவனை விட்டு விட்டு மனிதனுக்கு வேறெங்கும் அடைக்கலம் கிடைக்காது. இறைவனின் கட்டளையை நிராகரிப்பவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைக்கும். துர்பாக்கியத்திற்காளான சிலர் மறுமை வாழ்வை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பர் இது மட்டுமல்லாமல், அவர்கள் நேரான பாதையிலிருந்து மக்களை தடை செய்து கொண்டிருப்பர். இறைவனுடைந நேரானப் பாதையைக் கோணலாக்கவும் விரும்புவர். இதனால் அம்மக்கள் இறைவனுடைய நேரான பாதையை விட்டு விட்டு தவறான பாதையில் செல்ல விரும்புவார். இத்தகையவர்கள் தவறான வழியில் மிகவும் தூரமாகச் சென்று விட்டார்கள். அதாவது நஜாத்தென்னும் ஈடேற்றம் கிடைக்காதவர்களாவார்கள். இவர்கள் நேர்வழியின்பால் திரும்பி வரமுடியாத முறையில் விலகிச் சென்று விடுவார்கள்.
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சீடராகத் தோன்றும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்ட ஒரு மாபெரும் பணியாகும். இதனால்தான் அவர்களுக்கு "ஹகமன், அதலன்" நியாயமான தீர்ப்பு வழங்குபவர் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வால் அமைக்கப்பட்ட நேரான பாதைக்குப் பதிலாக, மக்கள் கோணலான வழிகளையும் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தை சின்னாபின்னமாக்கி பல்வேறு வேற்றுமைகளைக் கொண்டிருக்கும் போது, அவர்களக அந்த இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கு ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றுவார்கள்.
சமுதாயத்தில் வேற்றுமைகள் அதிகமாகி விட்டன. இதனால் அவ்வேற்றுமைகளுக்கு நியாயமான தீர்ப்பு வழங்குபவர் சீர்குலைந்து கிடந்த இஸ்லாமியக் கொள்கைகளை சீர்படுத்த வேண்டியதாயிற்று.
இது குறித்து ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்: "ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வாயிலிருந்து வந்த வசனங்கள் என் காதுகளில் ஒலிக்கின்றன. அதாவது கொள்கைகளைப் பொறுத்த வரையில் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை ஈஸா வின் மரணம் மற்றுமர சில பிரச்சனைகளில் மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், திருக்குர்ஆன், தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத்து முதலிய ஒவ்வொன்றிலும் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் வேற்றுமை உண்டு.
இவ்வாக்கியங்களின் முன்பின் தொடர்களை நீக்கிவிட்டு பாக் அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மிகவும் பெருமையுடன் அத்தொடரை அரைகுறையாகக் கூறியுள்ளது. இதன்மூலம் அஹ்மதிகள் தங்களுடைய இஸ்லாமல வேறு என்றும் ஏனைய முஸ்லிம்களின் இஸ்லாம் வேறு என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அந்த வெள்ளை அறிக்கை கூறுகின்றது.
"காதியானிகளுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள கொள்கை வேறுபாடு மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களுடைய நபித்துவ வாதம் மட்டுமல்ல மாறாக அவர்களுடைய இறைவன், அவர்களுடைய இஸ்லாம், அவர்களுடைய குர்ஆன், அவர்களுடைய நோன்பு, ஒவ்வொரு காரியமும் ஏனைய முஸ்லிம்களின் ஒவ்வொரு காரியத்திற்கும் மாறுபட்டதாகும். மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களின் மகன் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது அவர்கள் அல்ஃபஸல் என்னும் இதழில் 30-07-1931 இல் முஸ்லிம்களுடன் உள்ள வேறுபாடுகள் என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்கள், என்று கூறி நான் ஏற்கனவே ஏற்கனவே எடுத்துக் கூறிய வாக்கியங்களை அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து நான் முதலாவதாக கூறுவது என்னவென்றால், ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்துரைத்தவர் உண்மையிலேயே வேண்டுமென்றே பொய் கூறியுள்ளார் என்பதேயாகும்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தங்களுடைய கொள்கைகளை மிகவும் விளக்கமாக எடுத்துரைத்திருப்பது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் ஆலிம்களுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நன்றாக தெரியும். அஹ்மதிகளின் வாழ்க்கையும் அவர்களின் நடைமுறைகளும் திறந்த புத்தகம் போல் எல்லோருக்கும் முன்னால் இருக்கின்றன. அஹ்மதிகளின் குர்ஆன் வேறு, அல்லாஹ் வேறு, இஸ்லாம் வேறு, தொழுகை வேறு, நோன்பு வேறு என்று கூறுவது முற்றிலும் பொய் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.
அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று மட்டும்தான் இதுவரை அவர்கள் கூறிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் அவர்கள் தாமாகவே எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அஹ்மதிகளுடைய கலிமா தங்களுடைய கலிமாவேதான்; அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று கடந்த 90 வருட காலமாகத்தாங்கள் கூறிக்கோண்டிருந்தது போய்தான்; உண்மையில் அஹ்மதிகளின் கலிமா லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதேயாகும். ஆனால் எங்களுடைய இந்த கலிமாவை அஹ்மதிகள் கூறிக்கொண்டிருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதன் மூலம் அஹ்மதிகளின் உண்மையை உலகிற்கு அவர்களே அறிவித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறிக்கொண்டிருக்கும் பொய்கள் தானாகவே அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த வெள்ளை அறிக்கையில் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்துக் கூறியவர் எவராக இருந்தாலும் அவர் தஜ்ஜாலிய்யத்தில் திறமை மிக்கவரும் வேண்டுமென்றே பொய்யுரைத்தவருமேயாவார். மக்களை ஏமாற்றுவதற்காக இந்தப் பொய்யை தனது அறிக்கையில் இணைத்துக் கொண்ட அரசாங்கமே இதற்குப் பொறுப்பாகும்.
பொதுவழக்கில் இத்தகு வாக்கியங்களை பயன்படுத்துவது யாவரும் அறிந்த உண்மையாகும். உதாரணமாக ஒருவர் மற்றொருவரிடம் நான் வேறு நீ வேறு நான் ஒரு மாதிரியான மனிதன் நீ ஒரு விதமான மனிதன் என்றெல்லாம் கூறுவதுண்டு. இவ்வாறு கூறுவதனால் அந்த மனிதன் உண்மையிலேயே மனிதனல்ல; கழுதை, நாய், பூனை என்று ஒப்பு கொண்டதாக பொருள்படாது. எனினும் உண்மையான மனிதத் தன்மை உன்னிடம் இல்லை என்பதை எடுத்து காட்டுவதுதான் அதன் பொருள். இதே கருத்தைதான் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் தங்களுடைய ஜமாஅத்துற்கு தெரிவிப்பதற்காக அவ்வாறு கூறினார்கள். சிறுசிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்காக மட்டும் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றவில்லை எனினும் இறைவன், திருக்குர்ஆன், மலக்குகள், நபிமார்கள், சுவர்க்கம், நரகம், மறுமை முதலியவை பற்றிய முஸ்லிம்களின் தவறான நம்பிக்கைகள், அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நம்பிக்கைகளுக்கு மாறுபட்டனவாக இருக்கின்றன. ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மையான இஸ்லாம்தான் தங்களுடையதென்றும் அவர்கள் காட்டிய இறைவன்தான் தங்களுடைய இறைவன் என்றும் அவர்களுக்கு இறங்கிய குர்ஆன்தான் தங்களுடையதென்றும் மலக்குகள், நபிமார்கள், சுவர்க்கம், நரகம் முதலியவை பற்றிய நம்பிக்கை திருக்குர்ஆனின் அடிப்படையிலும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் அமைந்ததாகும் என்றும் அஹ்மதிகள் வாதிக்கின்றனர்.
உண்மையான இறை பக்தியும் இறையச்சமும் கொண்ட ஒருவர் உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் இறைவனைப் பற்றியும் ஏனைய கொள்கைகளைப் பற்றியும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதே சமயத்தில் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கடும் விரோதிகள் என்ன கூறியுள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால் அந்த வெள்ளை அறிக்கையில் அவ்வாறு அலசி ஆராயப்படவில்லை.
இப்போது உதாரணமாக சில விஷயங்களை உங்கள் முன் எடுத்துக் கூற விரும்புகிறேன். ஷியாக்கள் தங்களுடைய நூற்களில் இறைவனைப் பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்பதை பாருங்கள்; "தத்கிரத்துல் அயிம்மா" என்னும் நூலில் பக்கம் 51 இல் ஹஸ்ரத் அலி அவர்களே அல்லாஹ் ஆவார் என்று எழுதப்பட்டுள்ளது. அடுத்து "மனாகிபே முர்தஸயீ ஹயாத்துல் குலூப்" என்ற நூலின் பாகம் 2 பக்கம் 49 இல் ஹஸ்ரத் அலியே அல்லாஹ் என்றும் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவருடைய தாஸரென்றும், "ரிஸாலா நூர்தன்" என்ற நூலின் பக்கம் 36 இல், ஹஸ்ரத் அலி தெய்வ புத்திரர் என்றும், "புனியத்துத் தாலிபீன் வஹக்குல் யகீன் மஜ்லிஸி" என்னும் நூலின் அத்தியாயம் 5 இல் ஹஸ்ரத் அலி எல்லா நபிமார்களை விடவும் சிறந்தவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இறைவனுடைய வல்லமைகளும் குண இயல்புகளும் உயிருள்ளவர்களிடத்தில் மட்டுமல்லாமல் ,மரணித்தவர்களிடத்திலும் காணப்படுகின்றன என்பமு பரேல்வி பிரிவைச் சார்ந்தவர்களின் கொள்கையாகும். அவர்களின் கொள்கைப்படி, மரணித்தவர்களின் கபுருகளிலும் இறைவனுடைய வல்லமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த ஆவிகள் இறைவனுக்கு இணைகளாக இருக்கின்றன. இந்தக் கொள்கைப்படி இன்று பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான கபுருகள் (கல்லறைகள்) இருக்கின்றன. அவற்றில் பல்வேறு கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கபுருக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளதென்று கூறப்படுகிறது. சில கபுருகள் குழந்தை தரக்கூடியது என்றும் சில கபுருகள் நோயை குணப்படுத்தக் கூடியது என்றும் இன்னும் சில கபுருகள் ஆண் குழந்தையை தரக்கூடியது என்றும் இவ்வாறு அந்த கபுருகள் பல்வேறு வகையான சிறப்புகளை கொண்டிருக்கின்றனவென்று கூறப்படுகின்றது.
இவ்வாறு இறைவனிடம் மட்டும் கேட்க வேண்டிய நாட்டங்கள் கபுருகளாகிய இந்த கல்லறைகளிடம் கேட்கப்படுகின்றன. இதற்கு ஷரீஅத்தின் போர்வையும் போர்த்தப்படுகின்றது.
"இகாமுஷ் ஷரீஅத் பாகம் 2 பக்கம் 155 இல் பரேல்வி வகுப்பைச் சார்ந்த மவ்லவி அஹ்மது ரிஸாக் கான் என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
" வலிமார்களின் கபுருகளைப் பற்றி நிராசை அடைவது குஃப்ராகும்"
மவாயிதே நயிமா என்னும் நூலில் "மாலா யன்ஃபுஸக வலா யலுர்ருக" என்ற திருக்குர்ஆனின் வசனத்தின்படி உங்களுக்கு நன்மையோ தீமையோ தர முடியாதவைகளிடம் (அதாவது இறைவனைத் தவிர வேறு எவரிடமும்) நீங்கள் எதுவும் கேட்கக்கூடாது என்ற கருத்திற்கேட்ப உங்களுக்கு நன்மையோ தீமையோ தர முடியாத சிலைகளிடம் நீங்கள் எதையும் கேட்கக்கூடாது. ஆனால் நபிமார்களிடமும், வலிமார்களிடமும் அவர்கள் மரணமடைந்த பின்னரும் கூட நீங்கள் உங்களுடைய நாட்டங்களை கேட்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.
இறைவனின் தன்மையைக் குறித்து பரேல்விகளுக்கும், தேவ்பந்திகளுக்குமிடையே பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. அதாவது அல்லாஹ் பாவம் செய்வானா? பாவம் செய்வதற்குரிய சக்தி அவனுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதே அவ்விரு சாராரும் எடுத்து கொண்ட விவாதம்.
இறைவனுக்கு பொய் கூறுவதற்குரிய சக்தியும் இயல்பும் இல்லை என்று நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு அந்த சக்தி இல்லையாயின் மனிதனுக்கு இறைவனை விடவும் அதிகமான சக்தியும், இயல்பும் இருப்பதாக நாம் ஒப்புக் கொள்ள வேண்டியது வந்துவிடும் என்று ஒரு சாரார் வாதிக்கின்றனர்.
பொய் கூறுதல் மட்டுமல்ல, வெறுக்கத்தக்க இதர செயல்களும் இறைவனுடைய வல்லமைகளுக்கு உட்பட்டவையேயாகும் என்ற வாதமும் அவர்களுக்கிடையில் நடைபெற்று வருகின்றது. உதாரணமாக திருடுதல், மது அருந்துதல், அநீதியிழைத்தல், அறியாமை முதலிய இயல்புகளும் இறைவனிடம் உள்ளன என்று "தத்கிரத்துல் கலீல்" என்ற நூலின் பக்கம் 86 இல் ஆஷிக் அலி மீரட்டு என்பவர் எழுதியுள்ளார்.
விசித்திரமான இவ்விரு கருத்துக்களும் இறைவனுடைய மேலான தன்மைகளுக்கு அப்பாற்பட்டதும், நேர்மாற்றமானதுமாகும். ஒரு கூட்டத்தார் இறைவனை ஒரு சாதாரண மனிதனுடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். மற்றொரு கூட்டத்தாரோ, ஒரு மனிதனை இறைவனுடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு காட்சியளித்த இறைவன் இப்படிப்பட்டவனல்ல.
இறைவனைப் பற்றிய இவர்களின் கருத்து எல்லாக் குறைபாடுகளிலிருந்தும் தூய்மையானவனும் எல்லாச் சிறப்பு பண்புகளையும் ஒருங்கே பெற்றவனும் பிரபஞ்சங்களையெல்லாம் படைத்து அவற்றை சரியாகக் கவனித்து வருபவனாகிய அந்த இறைவனைப் பற்றியது அல்ல. திருக்குர்ஆனில் விளக்கப்பட்டிருக்கும் இறைவனுக்கும் இவர்களின் விவாதங்களில் காணப்படும் இறைவனுக்கும் பாரதூரமான வேற்றுமையுள்ளது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இறைவனையே அஹ்மதி முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
எனவே நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் இறைவன்தான் அல்லாஹ் என்றால், இறைவனின் மீது ஆணையாக எங்களுடைய இறைவன் வேறுதான். உங்களுடைய இறைவன் வேறொருவன்தான். இறைவனைப் பற்றி இவர்கள் கூறிக் கொண்டிருக்கும் கட்டுக் கதைகளைக் கேட்டு உண்மையான ஒரு மூமினுடைய உள்ள மும்புத்தியும் சிந்தனையும் தடுமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது.
ஹஸ்ரத் ஸய்யிது அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களைப் பற்றி "குல்தஸ்தயே கராமாத்" என்னும் நூலில் ஒரு நீண்ட கதை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பக்கம் 22 இல் ஒரு கிழவியின் கதை வருகிறது. ' அந்த கிழவினுடையை வாலிப பருவத்திலுள்ள மகன் ஒருவன் தோணியில் பயணம் செய்த போது அத்தோணி நதியில் மூழ்கியதால் அவன் மரணம் அடைந்துவிட்டான். இதனால் அக்கிழவி 12 வருடங்களாக அந்த நதிக்கரையில் உட்கார்ந்து தனது மகனை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். ஒரு நாள் ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜெய்லானி அந்தப் பக்கமாக சென்று கொண்டிருந்த போது, அக்கிழவியிடம் நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தார்கள். இதற்கு அவள் தனது அழுகைக்கான காரணத்தை கூறியதும், நீ அதற்காக கவலைப்பட வேண்டாம் எனக்கூறி அந்த நதியின் பக்கம் ஒரு பார்வையிட்டார்கள். இதனால் 12 வருடங்களுக்கு முன் மூழ்கி கிடந்த அத்தோணி, அதிலுள்ள எல்லா மக்களுடனும் மீண்டும் தண்ணீருக்கு வெளியில் வந்து நின்றது. அத்தோணியிலுள்ள மக்கள் எல்லாரும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
இறைவனைப் பற்றிய இவர்களின் நம்பிக்கை இதுதான். அதாவது இறைவனுக்கு மட்டுமுள்ள வல்லமை மனிதர்களுக்கும் தரப்படுகின்றது.
அடுத்து மலக்குகளைப் பற்றியும் மிகவும் தவறான கொள்கைகளைத்தான் இவர்கள் கொண்டுள்ளனர். இவர்கள் உலக மக் களுக்கு முன்னால் எத்தகைய இஸ்லாத்தைதான் போதிக்கின்றார்களோ என்று அஹ்மதிகளாகிய நாங்கள் அஞ்சுகின்றோம்.
மெளலானா அஹ்மது ஹுஸைன் முஹத்திஸ் தஹ்லவி என்பவர் "அஹ்ஸனுத் தஃபாஸீர்" பாகம் 1 பக்கம் 106-108 இல் மலக்குகளைப் பற்றுக் கீழ்கண்டவாறு வரைந்திருக்கிறார்.
"மலக்குகளில் மிகவும் அதிகமான இறைவணக்கம் செய்து கொண்டிருந்த இரண்டு மலக்குகளான ஹாரூத்தையும், மாரூத்தையும் சோதனை செய்வதற்காக இறைவன் தேர்ந்தெடுத்தான். (அதாவது அவ்விருவரும் சாதாரண மலக்குகள் அல்ல; மிகச்சிறந்த மலக்குகள்; இறைவனை அதிகமாக வணங்கிக் கொண்டிருந்தவர்கள்) பின்னர் மனிதனுடைய எல்லா மன இச்சைகளையும் மலக்குகளுக்கு கொடுத்து கூஃபாவிலுள்ள பாபுல் என்னுமிடத்திற்கு அவர்களை அனுப்பினான். அவர்கள் அங்குச் சென்று ஸுஹ்ரா எனும் பாரசீகப் பெண்ணுடன் காதல் கொண்டார்கள். அவளுடையப் பேச்சைக் கேட்டு, அவர்கள் இருவரும் மது அருந்தினார்கள். அவர்கள் மது அருந்தியதின் காரணமாக விபச்சாரமும், ஷிர்க்கும் (இறைவனுக்கு இணை வைத்தலும்) இதனைத் தொடர்ந்து கொலையும் செய்தார்கள். இந்த பாவச் செயல்களின் காரணமாக அன்றிலிருந்து இறுதிநாள் வரை அவர்களின் மீது இறைத் தண்டனைகள் தொடர்ந்து இறங்கி கொண்டே இருக்கின்றன.
அடுத்து ஷியாக்கள் மலக்குகளைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பாருங்கள்; ஹஸ்ரத் இமாம் ஹுஸைனுக்கு கிடைத்து கொண்டிருந்த துன்பங்களையும் கண்டு மலக்குகள் இறைவனிடம் சென்று மிகவும் பணிவுடன் ஹஸ்ரத் இமாம் ஹுஸைனைக் காப்பாற்றி உதவி புரிந்திட அனுமதி கோரினார்கள். இறுதியில் இறைவன் அனுமதி கொடுத்தான். ஆனால் மலக்குகள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியதும் இமாம் ஹுஸைன் ஷஹீத் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அதாவது இறைவன் அனுமதி கொடுப்பதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அல்லது மலக்குகள் அங்கு செல்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. (ஜிலாஉல் உயூன், அத்தியாயம் 5 பக்கம் 498,540)
இவ்வாறு இவர்கள் இறைவனைப் பற்றியும் மலக்குகளைப் பற்றியும் நகைப்பிற்குரிய கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் "ஹகமன் அதலன்" ஆகத் தோன்றிய ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கெதிராக மிகவும் கீழ்த்தரமாகப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இறைவனைப் பற்றியும் மலக்குகளைப் பற்றியும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதை இவர்கள் படித்திருந்தால். இவ்வாறு கீழ்த்தரமாகப் பேசியிருக்கமாட்டார்கள். அவர்களின் மீது இவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் எழுந்திருக்காது.
மேலும் மலக்குகளைபல பற்றி இவர்கள் பின்வருமாறு எழுதி வைத்துள்ளார்கள், " ஒரு மலக்கு ஹஸ்ரத் அலியிடம் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் யாவஸிய்ய ரஸூலுல்லாஹி வ கலீஃபதஹு; நான் கிளர் நபியை சந்திக்க நாடுகிறேன் தயவு செய்து எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு ஹஸ்ரத் அலி அனுமதி வழங்குகிறார்கள். அப்பொழுது ஹஸ்ரத் ஸல்மானுல் ஃபார்ஸி அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் மலக்குகள் கூட தங்களுடைய அனுமதி இல்லாமல் எவரையும் சந்திக்கு முடியாதா என்று கேட்டார்கள். அதற்கு அலியவர்கள், வானங்களை எந்த தூணுமில்லாமல் நிலைநாட்டிய இறைவன் மீது ஆணையாக, எந்த மலக்கும் என்டைய அனுமதி இல்லாமல் எந்த நொடியிலும் ஓர் அங்குலம் கூட நகரவே முடியாது என்று பதிலளித்தார்கள். என்னுடைய நிலை போன்றே எனது பிள்ளைகளான ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரின் நிலையுமாகும் என்றும் கூறினார்கள்". (அல்ஹக்குமா அலி துர்ரே நஜாப்)
இறைவன் திருக்குர்ஆனில் எனது அனுமதியில்லாமல் மலக்குகள் எதையும் செய்ய முடியாது. அவர்களுக்கு நான் கட்டளையிடுவதைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று கூறுகின்றான். ஆனால் இங்கு இறைவன் திருவசனத்திற்கெதிரான போதனைச் செய்யப்படுகின்றது.
அஹ்மதி முஸ்லிம்கள் குர்ஆன் வேறு மற்ற முஸ்லிம்களின் குர்ஆன் வேறு என்று இவர்கள் கூறும் ஆட்சேபனைக்குப் பதில் தருவதற்கு முன் ஓர் உண்மையை உங்களிடம் கூறுகின்றேன்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் திருக்குர்ஆன் மீது கொண்டிருந்த நேசம் எத்தகையதென்றால் வேறெவரும் போற்றியிராத அளவு அதனைப் புகழ்ந்து பேசியுள்ளார்கள். உதாரணமாக அவர்கள் அதனைக் குறித்து ஒரு கவிதையில் பின்வருமாறு புகழ்ந்து பாராட்டியுள்ளார்கள்.
இறைவா! உனது குர்ஆனை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதும் அதனை எப்போதும் வலம் வந்து கொண்டேயிருக்க வேண்டுமென்பதும் என்னுள்ளத்தின் குறையாத ஆசையாக இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இதுவே எனது கஅபாவாக இருக்கிறது.
இத்தகைய பாராட்டுகள் உண்மையான் ஒரு நேசருடைய வாயிலிருந்தே தவிர வேறெவருடைய வாயிலிருந்தும் ஒருபோதும் வெளிவராது. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் திருக்குர்ஆனுக்குச் செய்த தொண்டுகளுக்கும் அதன்மீது தொடுக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கும் அவர்கள் அளித்த பதில்களுக்கும் நிகரானவற்றை வேறெங்குமே காண முடியாது.
ஆலிம்கள் அறியாமையின் காரணமாக திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் ரத்தாக்கப்பட்டவையாக (மன்ஸூக்காக) இருக்கின்றனவென்றும் கூறினார்கள். இவ்வாறு திருக்குர்ஆனுக்கு எதிராக மாபெரும் தாக்குதலை இந்த ஆலிம்கள்தான் செய்திருக்கின்றார்கள். ஆனால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களோ திருக்குர்ஆனில் எந்த வசனமும் எந்த புள்ளியும் ரத்து செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று நிரூபித்து காட்டினார்கள்.
இத்தகு திருக்குர்ஆனைக் குறித்து மற்ற முஸ்லிம்களின் பெரியார்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதற்கான சில உதாரணங்களை இப்போது உங்களுங்கு எடுத்துக் காட்டுகிறேன்.
தஃப்ஸீரே ஷாஃபி என்பது ஷியாக்களிடத்தில் நம்பத்தகுந்த திருக்குர்ஆன் விரிவுரை நூலாகும். இந்நூலின் பாகம் 22, பக்கம் 411 மற்றும் தஃப்ஸீரே லவாமுத் தன்ஸீல் பாகம் 4 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
"உண்மையான குர்ஆன் காணாமாற் போய்விட்டது. தற்போதைய குர்ஆனில் 10 பாகங்கள் மறைந்து விட்டன. சில வசனங்களில் மாறுதல் இருக்கிறது."
ஷியாக்களுடைய நூர்தன் என்ற நூலின் 37 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
"திருக்குர்ஆன் ஹஸ்ரத் அலிக்குதான் இறக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக ஹஸ்ரத் முஹம்மது நபியிடம் போய்ச் சேர்ந்து விட்டது. இதன் விளக்கம் ஷியாக்களின் பல்வேறு நூட்களில் காணப்படுகிறது. அதாவது ஜிப்ரீல் அலை அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. ஜிப்ரீல் அங்கு சென்ற போது ஹஸ்ரத் அலியுடன் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஹஸ்ரத் அலிக்கு வஹியை (இறையறிவிப்பை) அறிவிப்பதற்கு பதிலாக ஹஸ்ரத் முஹம்மது நபிக்கு அறிவித்து விட்டார்கள்."
திருக்குர்ஆனின் விரிவுரைகளின் மூலம் அதன்மீது செய்யப்பட்ட அநீதிகளும் தாக்குதல்களும் எடுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகவும் அதிகமாக இருக்கின்றன. உரிய நேரத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தோன்றாமல் இருந்திருந்தால் திருக்குர்ஆன் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்டது என்ற உண்மை மக்களுடைய உள்ளங்களிலிருந்து மறைந்திருக்கும்.
லா ரைப ஃபீஹி - இதில் எவ்விதமான ஐய்யத்திற்கும் இடமில்லாத முழுமையான வேத நூல் என்று இறைவனே சிறப்பித்துக் கூறியிருக்கும்போது திருக்குர்ஆனைப் பற்றி பல்வேறு சந்தேகத்திற்கிடமான செய்திகளை இட்டுக்கட்டி விரிவுரை என்ற பெயரால் பரப்பியிருப்பதைப் பார்க்கும் போது நம்முடைய உள்ளத்தில் நடுக்கம் ஏற்படுகிறது.
தம்மைப் பற்றிய பெரிய ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொண்டிருக்கும் ஓர் ஆலிம் "ஃபதாவா நயீமியா" என்னும் நூலில் "எல்லாக் கோலங்களும் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன" என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பூமி ஒருபோதும் சுற்றிக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் அது சுற்றிக் கொண்டிருக்குமாயின், மனிதன் தங்கியிருக்கும் இடத்தின் முகப்பு (மேற்குப்பகுதி) மாற்றமடைந்து கொண்டேயிருக்க வேண்டும். உதாரணமாக காலை எனது வீட்டின் முகப்பு மேற்குத் திசையை நோக்கியிருந்தால், மாலையில் கிழக்குத் திசையை நோக்கியிருக்க வேண்டும். மத்தியானத்தில் வேறு திசையை நோக்கியிருக்க வேண்டும். ஆனால் ஒரு போதும் அவ்வாறு இருப்பதாக நாம் காண்பதில்லை என்று கூறி தற்போதைய விஞ்ஞானிகளின் கருத்தை முறியடித்திருக்கின்றான். இந்த பூமி ஒரே இடத்திலேயே நிலைத்து நிற்கின்றது இன்னும் எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. என்னுடைய ஆராய்ச்சிக்கேற்ப காந்தத்தைத் தவிர வேறெதிலும் ஈர்ப்பு சக்தியில்லை."
மற்றொரு ஆயத்திற்கு விளக்கம் தரும்போது;
"கற்களும் மற்ற கனமான பொருள்களும் மேலிருந்து கீழ் நோக்கி விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு சக்தியல்ல. இறைவனை பயந்துதான் அவ்வாறு விழுகின்றன."
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) ஆராய்ச்சியாளரான இந்த ஆலிமிடம்தான் நீயுட்டனும் ஜன்ஸ்டீனும் இப்போது பிச்சை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள் போலும்.
இவ்வாறு நீங்கள் விளக்கமளித்திருக்கும் இந்தக் குர்ஆனைத்தான் உலகின் முன் வைத்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கூறப் போகின்றீர்களா?
பிரசித்துப்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா உலூசி என்பவர் தமது திருக்குர்ஆன் விரிவுரையில், காஃப் எனும் அத்தியாத்திற்கு விளக்கம் எழுதும்போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"இந்த பூமிக்கப்பால் இறைவன் ஒரு சமுத்திரத்தை உருவாக்கியிருக்கின்றான். அந்தச் சமுத்திரம் இந்தப் பூமியியை முற்றுகையிட்டிருக்கின்றது. அதற்கு அப்பால் ஒரு மலை இருக்கின்றது. அதுதான் காஃப் மலை என்று வழங்கப்படுகின்றது. இந்த வானம் அதன்மீதுதான் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. அந்த மலைக்குப்பின்னால் இந்தப் பூமியை போன்ற வேறொரு பூமியிருக்கிறது. இரண்டாவது வானம் அதன் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் ஏழு பூமிகளும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு வானங்களும் இருக்கின்றன."
(தஃப்ஸீர் ரூஹுல் மஆனி, ஜுஸூ 26, பக்கம் 176)
அபுல் ஆலா மவ்தூதி என்பவர் திருக்குர்ஆனுக்கு செய்திருந்த விரிவுரையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டாக ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் தமது தஃப்ஹீமுல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விளக்கவுரையில் அத்தியாயம் ஸாஃபாத், அத்தியாயம் துகான் ஆகியவற்றில் வந்திருக்கும் "ஹூருல் அய்ன்" களைப் பற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
"இந்த வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கூடாரம் என்பது, அரசர்கள் அந்தப்புரங்களில் அமைக்கும் அரண்மனைகளைப் போன்றவைகளாகும். அந்த கூடாரங்களில் அழகிகள் இருப்பார்கள். அந்த அழகிகள் முஸ்லிம் அல்லாதவர்களுடைய பருவமடையாத குமரிகளாவார்கள். இவர்கள் சுவனப்பகுதிக்குள் போகமுடியாது. இதனால் சுவனப்பகுதிக்கு வெளியிலுள்ள தோட்டங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் இருப்பார்கள். சுவனப்பகுதியில் பிரவேசித்த நல்லடியார்கள் தங்களுடைய மனைவிமார்களுடன் இருப்பார்கள். ஆயினும் மற்றப் பெண்களையும் சந்தித்து உடலுறவு கொள்ள அவர்கள் ஆசைப்படுவார்கள். அப்போது சுவனப்பகுதிக்கு வெளியிலுள்ள கூடாரங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் அல்லாத அழகிகளுடன் இணைந்து உறவாட இறைவன் அவர்களுக்கு அனுமதியளிப்பான். இரவு வேளைகளில் அம்மங்கையர்களுடன் சேர்ந்திருந்துவிட்டுப் பின்னர் திரும்பி விடுவார்கள்."
(தஃப்ஹீமுல் குர்ஆன், பாகம் 5 பக்கம் 271)
ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த நூல் "ரத்துல் முக்தார் அலா துர்ரி முக்தாரிஷ் ஷாமீ" என்பதன் பாகம் 1, பக்கம் 154 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
"எவருக்காவது மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் ஃபாத்திஹா அத்தியாயத்தை இரத்தத்தால் எழுதி அவருடைய நெற்றியிலும், மூக்கிலும் தடவ வேண்டும். இதனால் குணம் கிடைத்துவிடும். இதே போன்று (இறைவன் நம்மை பாதுகாப்பானாக) ஃபாத்திஹா அத்தியாயத்தை மூத்திரத்திலும் எழுதலாம்.
பாருங்கள் இதுதான் இவர்களுடைய மார்க்கப் போதனை! இறைவன் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களைத் தோற்றுவித்து நம்மையெல்லாம் மிகக் கேவலமான போதனைகளிலிருந்து காப்பாற்றியுள்ளான். இதற்காக நாம் அவனுக்கு மிகவும் அதிகமான முறையில் நன்றி செலுத்த வேண்டும்.
இப்போது நபிமார்களைப் பற்றி இவர்களுடைய கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.
நபிமார்களைப் பற்றி அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நம்பிக்கையையும், கொள்கையையும் குறித்து ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தங்களுடைய நூல்களில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள். அவற்றின் சாராம்சத்தை ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் தஅவத்துல் அமீர் என்னும் நூலின் 144 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள். அதனை இப்போது படித்து காட்டுகிறேன்.
" இறைவனுடைய எல்லா நபிமார்களும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டவர்களாவர். உண்மையிலேயே அவர்கள் உயிருள்ள முன்மாதிரிகளாவர். அவர்கள் இறைவனின் பண்புகளை பிரதிபலித்துக் காட்டக் கூடியவர்களாவர். அவர்கள் தங்களுடைய தூய்மையான வாழ்க்கையின் மூலம் இறைவனுடைய தூயத் தன்மையை எடுத்துக் காட்டுபவர்களாவர்.
ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் ஷரீஅத்திற்கு மாற்றம் செய்ததில்லை. ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்கள் பாவம் செய்யவில்லை. ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) ஒரு போதும் பொய்யுரைத்ததில்லை. ஹஸ்ரத் யஃகூப் (அலை) அவர்கள் ஒருபோதும் எவரையும் ஏமாற்றியதில்லை. ஹஸ்ரத் யூசுஃப் (அலை) அவர்கள் ஒரு போதும் தீய நடத்தையில் நாட்டங் கொண்டதில்லை. ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அவசியமில்லாமல் எவரையும் கொலை செய்யவில்லை. ஹஸ்ரத் தாவூத் (அலை) அவர்கள் எவருடைய மனைவியையும் பறித்ததில்லை. ஹஸ்ரத் சுலைமான் (அலை) அவர்கள் ஒருபோதும் எந்த முஷ்ரிக் பெண்ணையும் காதலித்ததுமில்லை. தங்களுடைய கடமைகளை மறந்ததுமில்லை. ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் சிரிய - பெரிய எந்தப் பாவமும் எந்தக் குற்றமும் எந்த தவறும் செய்ததில்லை. அவர்கள் எல்லா வகையான குற்றங் குறைகளிலிருந்து தூய்மையாக்கப்பட்டவர்களாவார்கள். எவர் நபிகள் நாயகத்தைப் பற்றி குறை கூறுகின்றாரோ அவர் உண்மையிலேயே தமது குறைகளைத்தாம் எடுத்துரைக்கின்றார்.
திருக்குர்ஆனின் விரிவுரையாளர்களாகிந இவர்களுக்கு கடுகளவாவது இறையச்சம் இருந்திருந்தால் நபிமார்கள் மீது இத்தகு இழிவான கட்டுக்கதைகளை புனைந்திருக்கமாட்டார்கள். எந்த நபியின் ஒரு சிறந்தப் பண்பைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளானோ அந்த நபியின் அச்சிறப்பிற்கெதிராக இந்த விரிவுரையாளர்கள் பொய்க்கதைகளை புனைந்திருக்கின்றனர். இவர்கள் நபிமார்களைப் பற்றி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே திருக்குர்ஆன் சாட்சி பகர்ந்து கொண்டிருக்கிறது.
ஹஸ்ரத் யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றைப் பற்றி "அஹ்ஸனுல் கஸஸ்" அதாவது அவர்களின் வரலாறு மிகச்சிறந்தது என்று இறைவன் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான். அவர்களின் தூய்மையைப் பற்றியும் கற்பைப் பற்றியும் புகழ்ந்து கூறியுள்ளான்.
ஆனால் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களோ ஹஸ்ரத் யூஸுஃப் (அலை) அவர்களை (நஊதுபில்லாஹ்) கட்டுக்கடங்காத இச்சைக்கு அடிமைப்பட்டவராகவும், அவர்களை தீய நடத்தையில் வலுக்கட்டாயாமாக ஈடுபடுத்திட நினைத்த ஸுலைகாவை ஹஸ்ரத் ஸுலைகா என்று கூறி கற்பிற்குரியவளாகவும் சித்தரித்து காட்டியுள்ளனர். இறைவன் எவர்களை தூய்மைமிக்கவர் எனக் கூறி பாராட்டியுள்ளானோ அவர்களை கெட்டவராகவும் எவளைத் தீய நடத்தையுள்ளவளாக கூறியுள்ளானோ அவளைத் தூய்மையானவளாகவும் கற்பிற்குரியவளாகவும் இந்த விளக்கவுரையாளர்கள் வரைந்து வைத்துள்ளனர்.
இதுதான் உங்களுடைய குர்ஆனும் இவர்களே உங்களுடைய நபிமார்களும் என்றால் நிச்சயமாக எங்களுடைய குர்ஆன் வேறுதான் எங்களுடைய நபிமார்களும் வேறுதான். திருக்குர்ஆனைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களுக்கும் எங்களுடைய கருத்துக்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாது.
ஹஸ்ரத் யூஸுஃப் (அலை) அவர்களைப் பற்றி தஃப்ஸீர் "ரூஹுல் மஆனி"யில் 20 க்கும் மேற்ப்பட்ட ரிவாயத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் சாராம்சம் இதுவாகும்.
" ஹஸ்ரத் யூஸுஃப் நபி (அலை) அவர்கள் ஸுலைகா என்ற பெண்ணுடன் விபச்சாரம் செய்வதற்கு பூரணமாக உறுதி கொண்டுவிட்டார்கள். அதற்குப் பிறகு நடந்தவற்றை அந்த நூலில் நீங்கள் படிக்கும்போது உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. மிகவும் பயங்கராமன முறையிலும் வெறுக்கத்தக்க முறையிலும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த கெட்ட செயல் நடப்பதற்கு முன் ஜிப்ரீல் எனும் மலக்கு அங்குத் தோன்றினார். இதற்கும் அவர்கள் அடங்கவில்லை. அவர்களின் தந்தை ஹஸ்ரத் யாகூப் நபி (அலை) அவர்கள் அங்கு வந்து நின்றார்கள். அப்போதும் அத்தீயச் செயலிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளவில்லை. அதாவது அந்த கெட்டச் செயலிலிருந்து அவர்களைத் தவிர்த்து கொள்ளச் செய்வதற்காக இறைவன் ஹஸ்ரத் யாகூப் நபியை அனுப்பினான். கொஞ்சமாவது அச்சம் படட்டுமே வெட்கப்படட்டுமே என்று நினைத்து. ஆனால் அவர்கள் இதற்கும் அடங்கவில்லை. இதன் பின்னரும் இறைவன் ஒருத் திட்டம் தீட்டினான். அத்திட்டத்தைப் பற்றி விளக்குவது மிகவும் வெட்கங்கெட்டச் செயலாகும். ஒரு சாதாரண மனிதர் அந்த விளக்கத்தைப் படித்துப் பார்த்தால் வெட்கப்பட்டு தலைக்குணிந்து விடுவார். இவ்வாறிருக்க அதை என்னால் படித்துக் காட்ட முடியாது. இவ்வாறு இவர்கள் நபிமார்கள் மீது மாபெரும் துரோகம் செய்துள்ளார்கள்.
மேலும் ஹிஸ்ரத் ஸுலைமான் நபி (அலை) அவர்களைப் பற்றி இன்னொரு தஃப்ஸீரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"அவர்கள் ஒரு பெண்ணிடம் மாதவிடாவின் போது உடலுறவு கொண்டார்கள். இக்குற்றத்திற்குத் தண்டனையாக அவர்களுடைந அரியாசனத்தில் ஆஸிப் என்ற ஒரு ஷெய்த்தான் உட்கார்ந்து கொண்டான்" (தஃப்ஸீர் ரூஹுல் மானி அத்தியாயம் ஸாது)
திருக்குர்ஆனின் இந்த விரிவுரையாளர்கள் பொதுவாக யூதர்களுடைய தஃப்ஸீர்களிலிருந்தும் இஸ்லாத்தின் விரோதிகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளிலிருந்தும் இறைத்தூதர்களான நபிமார்களைப்பற்றி பல்வேறு பொய்க்கதைகளை தங்களுடைய தஃப்ஸீர்களில் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இந்த விரிவுரையாளர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூட விட்டு வைக்கவில்லை. இவர்கள் தஃப்ஸீர் ஜலாலைன், தஃப்ஸீர் ஃபத்ஹுல் பயான் முதலிய நூல்களில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:
"குறைஷிகளின் ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அத்தியாயம் நஜ்மிலிருந்து ஒரு வசனத்தை ஓதினார்கள். அப்போது அவர்களுடைய நாவில் ஷைத்தான் வஹியை (இறையறிவிப்பை) இறக்கினான்.
சிறிது சிந்தனை செய்து பாருங்கள், ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் நாவில் ஷைத்தான் வஹியை இறக்கினானாம். இதனை எந்த அஹ்மதி முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அவர்களை ஷைத்தான் அணுகினான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? " அந்த ஷெய்த்தான் இறக்கிய வஹி என்னவென்றால் தில்கல் கராணிகுல் குரா லஇன்ன ஷஃபாஅத்துஹுன்ன லதுர்ஜா- என்பதாகும்.
இந்தப் பொய்யான ரிவாயத்தை வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் விரோதிகள் நபிகள் நாயகத்தின் மீது மாபெரும் ஆட்சேபனைகளை கிளப்பினார்கள்.
தஃப்ஸீர் ரூஹுல் மஆனி, தஃப்ஸீர் காஸின், ஜலகலைன் முதலிய தஃப்ஸீர்களில் ஹஸ்ரத் ஜைனபுடன் (ரலி) சேர்த்து ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது;
"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய ஏதோ ஒரு காரியத்திற்காக ஹஸ்ரத் ஸைது இப்னு ஹாரிஸ் வீட்டிற்குச் சென்றார்கள். அப்போது காற்றடித்ததால் வீட்டு வாசலிலுள்ள திரை சற்று அகன்று விட்டது. இதனால் அவர்களுடைய பார்வை ஹஸ்ரத் ஜைனபின் மீது விழுந்தது. அப்போது அவர்கள் அவளுடைய அழகில் மயங்கிவிட்டார்கள்." (நஊதுபில்லலாஹி மின்ஹா)
விரிவுரையாளர்கள் இந்த சம்பவத்தை நீட்டி இழுத்து எழுதியுள்ளார்கள். இந்த நீண்ட கட்டுக் கதையைப் படித்து பார்க்கும்போது, எம்பெருமானிடம் அன்பும் நேசமும் கொண்ட ஒவ்வொருவருடைய இரத்தமும் கொதிக்க தொடங்கிவிடுகிறது. எல்லாரையும் விட மிகவும் தூய்மையானவர்களாகிய எம்பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூட இவ்வாறு பழித்துக் கூறியுள்ளார்கள். இந்த கட்டுக் கதையை எழுதும்போது இவர்களுடைய உள்ளங்கள் ஏன் வெடித்துப் போகவில்லையோ!?
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பற்றி "ஜிலாவுல் உயூன் மஜ்லிஸு அஸ் கிலாஃபத்துஷ் ஷைனகன்" என்னும் நூலில் பக்கம் 17 இல் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
"மிஃராஜ் (விண்பயண) இரவில் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் இல்லாது போயிருந்தால் முஹம்மது நபிக்கு எந்த விதமான மதிப்பும் கிடைத்திருக்காது"
ஆனால் மிஃராஜுன் போது ஹஸ்ரத் முஹம்மது நபியுடன் (ஸல்) ஹஸ்ரத் அலி (ரலி) இருந்ததில்லை. இது மட்டுமல்லாமல் மிஃராஜில் நபிகள் நாயகத்திற்கு கிடைத்த மிகவும் உயர்வான அந்தஸ்தை எவராலும்- மலக்குகளால் கூட பெற முடியவில்லை.
ஷிஆ ஆலிம்கள் மட்டுமில்லை மாறாக ஸுன்னி முஸ்லிம்கள் கூட இவ்வாறான கட்டுக்கதைகளை புனைந்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் நான்கு புறங்களிலிருந்தும் இஸ்லாத்தை மிகவும் மோசமான முறையில் தாக்கியிருக்கின்றனர். இத்தகு விளக்கங்களை கொண்ட இஸ்லாத்தைதான் இவர்கள் உலகின் முன் வைக்க நாடுகின்றனரா? ஆனால் அதே வேளையில் இவர்களை சீர்திருத்துவதற்காக "ஹகமன், அதலன்" ஆகத் தோன்றிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு எதிராக இவர்கள் தங்களுடைய நாவுகளை வெறுக்கத்தக்க வகையில் நீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று குற்றம் சாற்றுகின்றனர். ஆனால் இவர்களுடைய நிலை என்னவென்றால், ஷியாக்களும் ஸுன்னிகளும் சேர்ந்து தங்களுடைய கலிமாவை மாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இதற்கெதிராக எந்தவிதமான குரலும் எழுப்பப்படுவதில்லை.
காஜா முயீனுத்தீன் சிஷ்த்தியை பற்றி "ஹஸனாத்துல் ஆரிஃபீன்" என்னும் நூலில் பக்கம் 34 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
"ஒருவர் ஹஸ்ரத் காஜாவிடம் வந்து நான் உங்களுடைய முரீதாக நினைக்கிறேன் என்று கூறினார். இதற்கு அவர்கள் லாயிலாஹா இல்லல்லாஹு சிஷ்த்தி ரஸூலுல்லாஹ் என்று கூறு என்றார்கள். அவ்வாறே அவர் கலிமா கூறியதும் காஜா அவரை தமது முரீதாக ஏற்றுக் கொண்டார்கள்."
தமது காலத்தின் முஜத்திதும் ஒரு வலியுல்லாஹ்வுமாக இருந்த ஹஸ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்த்தி அவர்கள் நிச்சயமாக அவ்வாறு கூறியிருக்கமாட்டார்கள்.
இவர்கள் தாம் நபிமார்களை கூட விட்டு வைக்கவில்லையே. அப்படியிருக்க முஜத்தித்மார்களையும், ஃபக்கீர்மார்களையும், வலிமார்களையும் எங்கனம் விட்டு வைப்பார்கள்? இப்படிப்பட்ட ஆலிம்களுடன் ஒரு சமுதாயம் தொடர்பு வைத்திருக்க வேண்டியதிருந்தால் அந்த சமுதாயத்தின் நிலை பரிதாபத்திற்குரியதேயாகும். இத்தகைய ஆலிம்களிடமிருந்து சமுதாயத்தை விடுவித்து அச்சமுதாயத்தை சீர்திருத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமேயாகும். அந்த மாபெரும் பொறுப்பைத்தான் அஹ்மதிய்யா ஜமாஅத் ஏற்றிருக்கிறது. நம்மை எல்லா வகையான இருள்களிலிருந்தும் விலக்கி, நம்மை ஒளியின் பக்கம் கொண்டு வந்த ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ், இமாம் மஹ்தி (அலை) அவர்களுடைய உபகாரம் மிகவும் மகத்துவம் கொண்டதாகும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வ அலா அப்திகல் மஸீஹில் மவ்ஊது வ பாரிக் வ ஸல்லிம்.
.....................................................
இன்றைய ஜுமுஆ சொற்பொழிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர்ஆனின் அத்தியாயம் சூரா இப்ராஹீம் ஒன்று முதல் நான்கு வரையுள்ள இந்த இறை வசனங்களில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பிற்குரிய ஒரு பண்பை இறைவன் கூறியுள்ளான். அவர்கள் மக்களை பல்வேறு இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் கொண்டு வந்தார்கள். இதே பணியினை அவர்களின் சீடர்களும் மேற்கொண்டு அவர்களுக்கு உதவிட முன்வருவார்கள். இதனால் நான்கு புறமும் ஒளிமயமாகிறது.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் "அஸ்ஹாபீ கன்னுஜூமி. பி அய்யிஹிமிக்ததைத்தும் இஹ்ததைத்தும் - என் தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்கள் நீங்கள் அவர்களுள் யாரைப் பின்பற்றினாலும் உங்களுக்கு நேர்வழி கிடைத்து விடும்.
மாபெரும் இப்பணியினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறைவன் ஒப்படைத்துள்ளான். அவன் அவன் வானங்களையும் பூமியையும் படைத்து பரிபாலிப்பவன் ஆவான். அவனை விட்டு விட்டு மனிதனுக்கு வேறெங்கும் அடைக்கலம் கிடைக்காது. இறைவனின் கட்டளையை நிராகரிப்பவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைக்கும். துர்பாக்கியத்திற்காளான சிலர் மறுமை வாழ்வை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பர் இது மட்டுமல்லாமல், அவர்கள் நேரான பாதையிலிருந்து மக்களை தடை செய்து கொண்டிருப்பர். இறைவனுடைந நேரானப் பாதையைக் கோணலாக்கவும் விரும்புவர். இதனால் அம்மக்கள் இறைவனுடைய நேரான பாதையை விட்டு விட்டு தவறான பாதையில் செல்ல விரும்புவார். இத்தகையவர்கள் தவறான வழியில் மிகவும் தூரமாகச் சென்று விட்டார்கள். அதாவது நஜாத்தென்னும் ஈடேற்றம் கிடைக்காதவர்களாவார்கள். இவர்கள் நேர்வழியின்பால் திரும்பி வரமுடியாத முறையில் விலகிச் சென்று விடுவார்கள்.
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சீடராகத் தோன்றும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்ட ஒரு மாபெரும் பணியாகும். இதனால்தான் அவர்களுக்கு "ஹகமன், அதலன்" நியாயமான தீர்ப்பு வழங்குபவர் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வால் அமைக்கப்பட்ட நேரான பாதைக்குப் பதிலாக, மக்கள் கோணலான வழிகளையும் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தை சின்னாபின்னமாக்கி பல்வேறு வேற்றுமைகளைக் கொண்டிருக்கும் போது, அவர்களக அந்த இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கு ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றுவார்கள்.
சமுதாயத்தில் வேற்றுமைகள் அதிகமாகி விட்டன. இதனால் அவ்வேற்றுமைகளுக்கு நியாயமான தீர்ப்பு வழங்குபவர் சீர்குலைந்து கிடந்த இஸ்லாமியக் கொள்கைகளை சீர்படுத்த வேண்டியதாயிற்று.
இது குறித்து ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்: "ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வாயிலிருந்து வந்த வசனங்கள் என் காதுகளில் ஒலிக்கின்றன. அதாவது கொள்கைகளைப் பொறுத்த வரையில் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை ஈஸா வின் மரணம் மற்றுமர சில பிரச்சனைகளில் மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், திருக்குர்ஆன், தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத்து முதலிய ஒவ்வொன்றிலும் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் வேற்றுமை உண்டு.
இவ்வாக்கியங்களின் முன்பின் தொடர்களை நீக்கிவிட்டு பாக் அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மிகவும் பெருமையுடன் அத்தொடரை அரைகுறையாகக் கூறியுள்ளது. இதன்மூலம் அஹ்மதிகள் தங்களுடைய இஸ்லாமல வேறு என்றும் ஏனைய முஸ்லிம்களின் இஸ்லாம் வேறு என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அந்த வெள்ளை அறிக்கை கூறுகின்றது.
"காதியானிகளுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள கொள்கை வேறுபாடு மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களுடைய நபித்துவ வாதம் மட்டுமல்ல மாறாக அவர்களுடைய இறைவன், அவர்களுடைய இஸ்லாம், அவர்களுடைய குர்ஆன், அவர்களுடைய நோன்பு, ஒவ்வொரு காரியமும் ஏனைய முஸ்லிம்களின் ஒவ்வொரு காரியத்திற்கும் மாறுபட்டதாகும். மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களின் மகன் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது அவர்கள் அல்ஃபஸல் என்னும் இதழில் 30-07-1931 இல் முஸ்லிம்களுடன் உள்ள வேறுபாடுகள் என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்கள், என்று கூறி நான் ஏற்கனவே ஏற்கனவே எடுத்துக் கூறிய வாக்கியங்களை அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து நான் முதலாவதாக கூறுவது என்னவென்றால், ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்துரைத்தவர் உண்மையிலேயே வேண்டுமென்றே பொய் கூறியுள்ளார் என்பதேயாகும்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தங்களுடைய கொள்கைகளை மிகவும் விளக்கமாக எடுத்துரைத்திருப்பது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் ஆலிம்களுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நன்றாக தெரியும். அஹ்மதிகளின் வாழ்க்கையும் அவர்களின் நடைமுறைகளும் திறந்த புத்தகம் போல் எல்லோருக்கும் முன்னால் இருக்கின்றன. அஹ்மதிகளின் குர்ஆன் வேறு, அல்லாஹ் வேறு, இஸ்லாம் வேறு, தொழுகை வேறு, நோன்பு வேறு என்று கூறுவது முற்றிலும் பொய் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.
அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று மட்டும்தான் இதுவரை அவர்கள் கூறிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் அவர்கள் தாமாகவே எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அஹ்மதிகளுடைய கலிமா தங்களுடைய கலிமாவேதான்; அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று கடந்த 90 வருட காலமாகத்தாங்கள் கூறிக்கோண்டிருந்தது போய்தான்; உண்மையில் அஹ்மதிகளின் கலிமா லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதேயாகும். ஆனால் எங்களுடைய இந்த கலிமாவை அஹ்மதிகள் கூறிக்கொண்டிருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதன் மூலம் அஹ்மதிகளின் உண்மையை உலகிற்கு அவர்களே அறிவித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறிக்கொண்டிருக்கும் பொய்கள் தானாகவே அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த வெள்ளை அறிக்கையில் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்துக் கூறியவர் எவராக இருந்தாலும் அவர் தஜ்ஜாலிய்யத்தில் திறமை மிக்கவரும் வேண்டுமென்றே பொய்யுரைத்தவருமேயாவார். மக்களை ஏமாற்றுவதற்காக இந்தப் பொய்யை தனது அறிக்கையில் இணைத்துக் கொண்ட அரசாங்கமே இதற்குப் பொறுப்பாகும்.
பொதுவழக்கில் இத்தகு வாக்கியங்களை பயன்படுத்துவது யாவரும் அறிந்த உண்மையாகும். உதாரணமாக ஒருவர் மற்றொருவரிடம் நான் வேறு நீ வேறு நான் ஒரு மாதிரியான மனிதன் நீ ஒரு விதமான மனிதன் என்றெல்லாம் கூறுவதுண்டு. இவ்வாறு கூறுவதனால் அந்த மனிதன் உண்மையிலேயே மனிதனல்ல; கழுதை, நாய், பூனை என்று ஒப்பு கொண்டதாக பொருள்படாது. எனினும் உண்மையான மனிதத் தன்மை உன்னிடம் இல்லை என்பதை எடுத்து காட்டுவதுதான் அதன் பொருள். இதே கருத்தைதான் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் தங்களுடைய ஜமாஅத்துற்கு தெரிவிப்பதற்காக அவ்வாறு கூறினார்கள். சிறுசிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்காக மட்டும் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றவில்லை எனினும் இறைவன், திருக்குர்ஆன், மலக்குகள், நபிமார்கள், சுவர்க்கம், நரகம், மறுமை முதலியவை பற்றிய முஸ்லிம்களின் தவறான நம்பிக்கைகள், அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நம்பிக்கைகளுக்கு மாறுபட்டனவாக இருக்கின்றன. ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மையான இஸ்லாம்தான் தங்களுடையதென்றும் அவர்கள் காட்டிய இறைவன்தான் தங்களுடைய இறைவன் என்றும் அவர்களுக்கு இறங்கிய குர்ஆன்தான் தங்களுடையதென்றும் மலக்குகள், நபிமார்கள், சுவர்க்கம், நரகம் முதலியவை பற்றிய நம்பிக்கை திருக்குர்ஆனின் அடிப்படையிலும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் அமைந்ததாகும் என்றும் அஹ்மதிகள் வாதிக்கின்றனர்.
உண்மையான இறை பக்தியும் இறையச்சமும் கொண்ட ஒருவர் உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் இறைவனைப் பற்றியும் ஏனைய கொள்கைகளைப் பற்றியும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதே சமயத்தில் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கடும் விரோதிகள் என்ன கூறியுள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால் அந்த வெள்ளை அறிக்கையில் அவ்வாறு அலசி ஆராயப்படவில்லை.
இப்போது உதாரணமாக சில விஷயங்களை உங்கள் முன் எடுத்துக் கூற விரும்புகிறேன். ஷியாக்கள் தங்களுடைய நூற்களில் இறைவனைப் பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்பதை பாருங்கள்; "தத்கிரத்துல் அயிம்மா" என்னும் நூலில் பக்கம் 51 இல் ஹஸ்ரத் அலி அவர்களே அல்லாஹ் ஆவார் என்று எழுதப்பட்டுள்ளது. அடுத்து "மனாகிபே முர்தஸயீ ஹயாத்துல் குலூப்" என்ற நூலின் பாகம் 2 பக்கம் 49 இல் ஹஸ்ரத் அலியே அல்லாஹ் என்றும் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவருடைய தாஸரென்றும், "ரிஸாலா நூர்தன்" என்ற நூலின் பக்கம் 36 இல், ஹஸ்ரத் அலி தெய்வ புத்திரர் என்றும், "புனியத்துத் தாலிபீன் வஹக்குல் யகீன் மஜ்லிஸி" என்னும் நூலின் அத்தியாயம் 5 இல் ஹஸ்ரத் அலி எல்லா நபிமார்களை விடவும் சிறந்தவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இறைவனுடைய வல்லமைகளும் குண இயல்புகளும் உயிருள்ளவர்களிடத்தில் மட்டுமல்லாமல் ,மரணித்தவர்களிடத்திலும் காணப்படுகின்றன என்பமு பரேல்வி பிரிவைச் சார்ந்தவர்களின் கொள்கையாகும். அவர்களின் கொள்கைப்படி, மரணித்தவர்களின் கபுருகளிலும் இறைவனுடைய வல்லமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த ஆவிகள் இறைவனுக்கு இணைகளாக இருக்கின்றன. இந்தக் கொள்கைப்படி இன்று பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான கபுருகள் (கல்லறைகள்) இருக்கின்றன. அவற்றில் பல்வேறு கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கபுருக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளதென்று கூறப்படுகிறது. சில கபுருகள் குழந்தை தரக்கூடியது என்றும் சில கபுருகள் நோயை குணப்படுத்தக் கூடியது என்றும் இன்னும் சில கபுருகள் ஆண் குழந்தையை தரக்கூடியது என்றும் இவ்வாறு அந்த கபுருகள் பல்வேறு வகையான சிறப்புகளை கொண்டிருக்கின்றனவென்று கூறப்படுகின்றது.
இவ்வாறு இறைவனிடம் மட்டும் கேட்க வேண்டிய நாட்டங்கள் கபுருகளாகிய இந்த கல்லறைகளிடம் கேட்கப்படுகின்றன. இதற்கு ஷரீஅத்தின் போர்வையும் போர்த்தப்படுகின்றது.
"இகாமுஷ் ஷரீஅத் பாகம் 2 பக்கம் 155 இல் பரேல்வி வகுப்பைச் சார்ந்த மவ்லவி அஹ்மது ரிஸாக் கான் என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
" வலிமார்களின் கபுருகளைப் பற்றி நிராசை அடைவது குஃப்ராகும்"
மவாயிதே நயிமா என்னும் நூலில் "மாலா யன்ஃபுஸக வலா யலுர்ருக" என்ற திருக்குர்ஆனின் வசனத்தின்படி உங்களுக்கு நன்மையோ தீமையோ தர முடியாதவைகளிடம் (அதாவது இறைவனைத் தவிர வேறு எவரிடமும்) நீங்கள் எதுவும் கேட்கக்கூடாது என்ற கருத்திற்கேட்ப உங்களுக்கு நன்மையோ தீமையோ தர முடியாத சிலைகளிடம் நீங்கள் எதையும் கேட்கக்கூடாது. ஆனால் நபிமார்களிடமும், வலிமார்களிடமும் அவர்கள் மரணமடைந்த பின்னரும் கூட நீங்கள் உங்களுடைய நாட்டங்களை கேட்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.
இறைவனின் தன்மையைக் குறித்து பரேல்விகளுக்கும், தேவ்பந்திகளுக்குமிடையே பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. அதாவது அல்லாஹ் பாவம் செய்வானா? பாவம் செய்வதற்குரிய சக்தி அவனுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதே அவ்விரு சாராரும் எடுத்து கொண்ட விவாதம்.
இறைவனுக்கு பொய் கூறுவதற்குரிய சக்தியும் இயல்பும் இல்லை என்று நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு அந்த சக்தி இல்லையாயின் மனிதனுக்கு இறைவனை விடவும் அதிகமான சக்தியும், இயல்பும் இருப்பதாக நாம் ஒப்புக் கொள்ள வேண்டியது வந்துவிடும் என்று ஒரு சாரார் வாதிக்கின்றனர்.
பொய் கூறுதல் மட்டுமல்ல, வெறுக்கத்தக்க இதர செயல்களும் இறைவனுடைய வல்லமைகளுக்கு உட்பட்டவையேயாகும் என்ற வாதமும் அவர்களுக்கிடையில் நடைபெற்று வருகின்றது. உதாரணமாக திருடுதல், மது அருந்துதல், அநீதியிழைத்தல், அறியாமை முதலிய இயல்புகளும் இறைவனிடம் உள்ளன என்று "தத்கிரத்துல் கலீல்" என்ற நூலின் பக்கம் 86 இல் ஆஷிக் அலி மீரட்டு என்பவர் எழுதியுள்ளார்.
விசித்திரமான இவ்விரு கருத்துக்களும் இறைவனுடைய மேலான தன்மைகளுக்கு அப்பாற்பட்டதும், நேர்மாற்றமானதுமாகும். ஒரு கூட்டத்தார் இறைவனை ஒரு சாதாரண மனிதனுடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். மற்றொரு கூட்டத்தாரோ, ஒரு மனிதனை இறைவனுடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு காட்சியளித்த இறைவன் இப்படிப்பட்டவனல்ல.
இறைவனைப் பற்றிய இவர்களின் கருத்து எல்லாக் குறைபாடுகளிலிருந்தும் தூய்மையானவனும் எல்லாச் சிறப்பு பண்புகளையும் ஒருங்கே பெற்றவனும் பிரபஞ்சங்களையெல்லாம் படைத்து அவற்றை சரியாகக் கவனித்து வருபவனாகிய அந்த இறைவனைப் பற்றியது அல்ல. திருக்குர்ஆனில் விளக்கப்பட்டிருக்கும் இறைவனுக்கும் இவர்களின் விவாதங்களில் காணப்படும் இறைவனுக்கும் பாரதூரமான வேற்றுமையுள்ளது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இறைவனையே அஹ்மதி முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
எனவே நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் இறைவன்தான் அல்லாஹ் என்றால், இறைவனின் மீது ஆணையாக எங்களுடைய இறைவன் வேறுதான். உங்களுடைய இறைவன் வேறொருவன்தான். இறைவனைப் பற்றி இவர்கள் கூறிக் கொண்டிருக்கும் கட்டுக் கதைகளைக் கேட்டு உண்மையான ஒரு மூமினுடைய உள்ள மும்புத்தியும் சிந்தனையும் தடுமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது.
ஹஸ்ரத் ஸய்யிது அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களைப் பற்றி "குல்தஸ்தயே கராமாத்" என்னும் நூலில் ஒரு நீண்ட கதை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பக்கம் 22 இல் ஒரு கிழவியின் கதை வருகிறது. ' அந்த கிழவினுடையை வாலிப பருவத்திலுள்ள மகன் ஒருவன் தோணியில் பயணம் செய்த போது அத்தோணி நதியில் மூழ்கியதால் அவன் மரணம் அடைந்துவிட்டான். இதனால் அக்கிழவி 12 வருடங்களாக அந்த நதிக்கரையில் உட்கார்ந்து தனது மகனை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். ஒரு நாள் ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜெய்லானி அந்தப் பக்கமாக சென்று கொண்டிருந்த போது, அக்கிழவியிடம் நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தார்கள். இதற்கு அவள் தனது அழுகைக்கான காரணத்தை கூறியதும், நீ அதற்காக கவலைப்பட வேண்டாம் எனக்கூறி அந்த நதியின் பக்கம் ஒரு பார்வையிட்டார்கள். இதனால் 12 வருடங்களுக்கு முன் மூழ்கி கிடந்த அத்தோணி, அதிலுள்ள எல்லா மக்களுடனும் மீண்டும் தண்ணீருக்கு வெளியில் வந்து நின்றது. அத்தோணியிலுள்ள மக்கள் எல்லாரும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
இறைவனைப் பற்றிய இவர்களின் நம்பிக்கை இதுதான். அதாவது இறைவனுக்கு மட்டுமுள்ள வல்லமை மனிதர்களுக்கும் தரப்படுகின்றது.
அடுத்து மலக்குகளைப் பற்றியும் மிகவும் தவறான கொள்கைகளைத்தான் இவர்கள் கொண்டுள்ளனர். இவர்கள் உலக மக் களுக்கு முன்னால் எத்தகைய இஸ்லாத்தைதான் போதிக்கின்றார்களோ என்று அஹ்மதிகளாகிய நாங்கள் அஞ்சுகின்றோம்.
மெளலானா அஹ்மது ஹுஸைன் முஹத்திஸ் தஹ்லவி என்பவர் "அஹ்ஸனுத் தஃபாஸீர்" பாகம் 1 பக்கம் 106-108 இல் மலக்குகளைப் பற்றுக் கீழ்கண்டவாறு வரைந்திருக்கிறார்.
"மலக்குகளில் மிகவும் அதிகமான இறைவணக்கம் செய்து கொண்டிருந்த இரண்டு மலக்குகளான ஹாரூத்தையும், மாரூத்தையும் சோதனை செய்வதற்காக இறைவன் தேர்ந்தெடுத்தான். (அதாவது அவ்விருவரும் சாதாரண மலக்குகள் அல்ல; மிகச்சிறந்த மலக்குகள்; இறைவனை அதிகமாக வணங்கிக் கொண்டிருந்தவர்கள்) பின்னர் மனிதனுடைய எல்லா மன இச்சைகளையும் மலக்குகளுக்கு கொடுத்து கூஃபாவிலுள்ள பாபுல் என்னுமிடத்திற்கு அவர்களை அனுப்பினான். அவர்கள் அங்குச் சென்று ஸுஹ்ரா எனும் பாரசீகப் பெண்ணுடன் காதல் கொண்டார்கள். அவளுடையப் பேச்சைக் கேட்டு, அவர்கள் இருவரும் மது அருந்தினார்கள். அவர்கள் மது அருந்தியதின் காரணமாக விபச்சாரமும், ஷிர்க்கும் (இறைவனுக்கு இணை வைத்தலும்) இதனைத் தொடர்ந்து கொலையும் செய்தார்கள். இந்த பாவச் செயல்களின் காரணமாக அன்றிலிருந்து இறுதிநாள் வரை அவர்களின் மீது இறைத் தண்டனைகள் தொடர்ந்து இறங்கி கொண்டே இருக்கின்றன.
அடுத்து ஷியாக்கள் மலக்குகளைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பாருங்கள்; ஹஸ்ரத் இமாம் ஹுஸைனுக்கு கிடைத்து கொண்டிருந்த துன்பங்களையும் கண்டு மலக்குகள் இறைவனிடம் சென்று மிகவும் பணிவுடன் ஹஸ்ரத் இமாம் ஹுஸைனைக் காப்பாற்றி உதவி புரிந்திட அனுமதி கோரினார்கள். இறுதியில் இறைவன் அனுமதி கொடுத்தான். ஆனால் மலக்குகள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியதும் இமாம் ஹுஸைன் ஷஹீத் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அதாவது இறைவன் அனுமதி கொடுப்பதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அல்லது மலக்குகள் அங்கு செல்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. (ஜிலாஉல் உயூன், அத்தியாயம் 5 பக்கம் 498,540)
இவ்வாறு இவர்கள் இறைவனைப் பற்றியும் மலக்குகளைப் பற்றியும் நகைப்பிற்குரிய கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் "ஹகமன் அதலன்" ஆகத் தோன்றிய ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கெதிராக மிகவும் கீழ்த்தரமாகப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இறைவனைப் பற்றியும் மலக்குகளைப் பற்றியும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதை இவர்கள் படித்திருந்தால். இவ்வாறு கீழ்த்தரமாகப் பேசியிருக்கமாட்டார்கள். அவர்களின் மீது இவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் எழுந்திருக்காது.
மேலும் மலக்குகளைபல பற்றி இவர்கள் பின்வருமாறு எழுதி வைத்துள்ளார்கள், " ஒரு மலக்கு ஹஸ்ரத் அலியிடம் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் யாவஸிய்ய ரஸூலுல்லாஹி வ கலீஃபதஹு; நான் கிளர் நபியை சந்திக்க நாடுகிறேன் தயவு செய்து எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு ஹஸ்ரத் அலி அனுமதி வழங்குகிறார்கள். அப்பொழுது ஹஸ்ரத் ஸல்மானுல் ஃபார்ஸி அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் மலக்குகள் கூட தங்களுடைய அனுமதி இல்லாமல் எவரையும் சந்திக்கு முடியாதா என்று கேட்டார்கள். அதற்கு அலியவர்கள், வானங்களை எந்த தூணுமில்லாமல் நிலைநாட்டிய இறைவன் மீது ஆணையாக, எந்த மலக்கும் என்டைய அனுமதி இல்லாமல் எந்த நொடியிலும் ஓர் அங்குலம் கூட நகரவே முடியாது என்று பதிலளித்தார்கள். என்னுடைய நிலை போன்றே எனது பிள்ளைகளான ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரின் நிலையுமாகும் என்றும் கூறினார்கள்". (அல்ஹக்குமா அலி துர்ரே நஜாப்)
இறைவன் திருக்குர்ஆனில் எனது அனுமதியில்லாமல் மலக்குகள் எதையும் செய்ய முடியாது. அவர்களுக்கு நான் கட்டளையிடுவதைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று கூறுகின்றான். ஆனால் இங்கு இறைவன் திருவசனத்திற்கெதிரான போதனைச் செய்யப்படுகின்றது.
அஹ்மதி முஸ்லிம்கள் குர்ஆன் வேறு மற்ற முஸ்லிம்களின் குர்ஆன் வேறு என்று இவர்கள் கூறும் ஆட்சேபனைக்குப் பதில் தருவதற்கு முன் ஓர் உண்மையை உங்களிடம் கூறுகின்றேன்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் திருக்குர்ஆன் மீது கொண்டிருந்த நேசம் எத்தகையதென்றால் வேறெவரும் போற்றியிராத அளவு அதனைப் புகழ்ந்து பேசியுள்ளார்கள். உதாரணமாக அவர்கள் அதனைக் குறித்து ஒரு கவிதையில் பின்வருமாறு புகழ்ந்து பாராட்டியுள்ளார்கள்.
இறைவா! உனது குர்ஆனை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதும் அதனை எப்போதும் வலம் வந்து கொண்டேயிருக்க வேண்டுமென்பதும் என்னுள்ளத்தின் குறையாத ஆசையாக இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இதுவே எனது கஅபாவாக இருக்கிறது.
இத்தகைய பாராட்டுகள் உண்மையான் ஒரு நேசருடைய வாயிலிருந்தே தவிர வேறெவருடைய வாயிலிருந்தும் ஒருபோதும் வெளிவராது. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் திருக்குர்ஆனுக்குச் செய்த தொண்டுகளுக்கும் அதன்மீது தொடுக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கும் அவர்கள் அளித்த பதில்களுக்கும் நிகரானவற்றை வேறெங்குமே காண முடியாது.
ஆலிம்கள் அறியாமையின் காரணமாக திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் ரத்தாக்கப்பட்டவையாக (மன்ஸூக்காக) இருக்கின்றனவென்றும் கூறினார்கள். இவ்வாறு திருக்குர்ஆனுக்கு எதிராக மாபெரும் தாக்குதலை இந்த ஆலிம்கள்தான் செய்திருக்கின்றார்கள். ஆனால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களோ திருக்குர்ஆனில் எந்த வசனமும் எந்த புள்ளியும் ரத்து செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று நிரூபித்து காட்டினார்கள்.
இத்தகு திருக்குர்ஆனைக் குறித்து மற்ற முஸ்லிம்களின் பெரியார்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதற்கான சில உதாரணங்களை இப்போது உங்களுங்கு எடுத்துக் காட்டுகிறேன்.
தஃப்ஸீரே ஷாஃபி என்பது ஷியாக்களிடத்தில் நம்பத்தகுந்த திருக்குர்ஆன் விரிவுரை நூலாகும். இந்நூலின் பாகம் 22, பக்கம் 411 மற்றும் தஃப்ஸீரே லவாமுத் தன்ஸீல் பாகம் 4 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
"உண்மையான குர்ஆன் காணாமாற் போய்விட்டது. தற்போதைய குர்ஆனில் 10 பாகங்கள் மறைந்து விட்டன. சில வசனங்களில் மாறுதல் இருக்கிறது."
ஷியாக்களுடைய நூர்தன் என்ற நூலின் 37 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
"திருக்குர்ஆன் ஹஸ்ரத் அலிக்குதான் இறக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக ஹஸ்ரத் முஹம்மது நபியிடம் போய்ச் சேர்ந்து விட்டது. இதன் விளக்கம் ஷியாக்களின் பல்வேறு நூட்களில் காணப்படுகிறது. அதாவது ஜிப்ரீல் அலை அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. ஜிப்ரீல் அங்கு சென்ற போது ஹஸ்ரத் அலியுடன் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஹஸ்ரத் அலிக்கு வஹியை (இறையறிவிப்பை) அறிவிப்பதற்கு பதிலாக ஹஸ்ரத் முஹம்மது நபிக்கு அறிவித்து விட்டார்கள்."
திருக்குர்ஆனின் விரிவுரைகளின் மூலம் அதன்மீது செய்யப்பட்ட அநீதிகளும் தாக்குதல்களும் எடுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகவும் அதிகமாக இருக்கின்றன. உரிய நேரத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தோன்றாமல் இருந்திருந்தால் திருக்குர்ஆன் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்டது என்ற உண்மை மக்களுடைய உள்ளங்களிலிருந்து மறைந்திருக்கும்.
லா ரைப ஃபீஹி - இதில் எவ்விதமான ஐய்யத்திற்கும் இடமில்லாத முழுமையான வேத நூல் என்று இறைவனே சிறப்பித்துக் கூறியிருக்கும்போது திருக்குர்ஆனைப் பற்றி பல்வேறு சந்தேகத்திற்கிடமான செய்திகளை இட்டுக்கட்டி விரிவுரை என்ற பெயரால் பரப்பியிருப்பதைப் பார்க்கும் போது நம்முடைய உள்ளத்தில் நடுக்கம் ஏற்படுகிறது.
தம்மைப் பற்றிய பெரிய ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொண்டிருக்கும் ஓர் ஆலிம் "ஃபதாவா நயீமியா" என்னும் நூலில் "எல்லாக் கோலங்களும் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன" என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பூமி ஒருபோதும் சுற்றிக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் அது சுற்றிக் கொண்டிருக்குமாயின், மனிதன் தங்கியிருக்கும் இடத்தின் முகப்பு (மேற்குப்பகுதி) மாற்றமடைந்து கொண்டேயிருக்க வேண்டும். உதாரணமாக காலை எனது வீட்டின் முகப்பு மேற்குத் திசையை நோக்கியிருந்தால், மாலையில் கிழக்குத் திசையை நோக்கியிருக்க வேண்டும். மத்தியானத்தில் வேறு திசையை நோக்கியிருக்க வேண்டும். ஆனால் ஒரு போதும் அவ்வாறு இருப்பதாக நாம் காண்பதில்லை என்று கூறி தற்போதைய விஞ்ஞானிகளின் கருத்தை முறியடித்திருக்கின்றான். இந்த பூமி ஒரே இடத்திலேயே நிலைத்து நிற்கின்றது இன்னும் எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. என்னுடைய ஆராய்ச்சிக்கேற்ப காந்தத்தைத் தவிர வேறெதிலும் ஈர்ப்பு சக்தியில்லை."
மற்றொரு ஆயத்திற்கு விளக்கம் தரும்போது;
"கற்களும் மற்ற கனமான பொருள்களும் மேலிருந்து கீழ் நோக்கி விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு சக்தியல்ல. இறைவனை பயந்துதான் அவ்வாறு விழுகின்றன."
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) ஆராய்ச்சியாளரான இந்த ஆலிமிடம்தான் நீயுட்டனும் ஜன்ஸ்டீனும் இப்போது பிச்சை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள் போலும்.
இவ்வாறு நீங்கள் விளக்கமளித்திருக்கும் இந்தக் குர்ஆனைத்தான் உலகின் முன் வைத்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கூறப் போகின்றீர்களா?
பிரசித்துப்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா உலூசி என்பவர் தமது திருக்குர்ஆன் விரிவுரையில், காஃப் எனும் அத்தியாத்திற்கு விளக்கம் எழுதும்போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"இந்த பூமிக்கப்பால் இறைவன் ஒரு சமுத்திரத்தை உருவாக்கியிருக்கின்றான். அந்தச் சமுத்திரம் இந்தப் பூமியியை முற்றுகையிட்டிருக்கின்றது. அதற்கு அப்பால் ஒரு மலை இருக்கின்றது. அதுதான் காஃப் மலை என்று வழங்கப்படுகின்றது. இந்த வானம் அதன்மீதுதான் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. அந்த மலைக்குப்பின்னால் இந்தப் பூமியை போன்ற வேறொரு பூமியிருக்கிறது. இரண்டாவது வானம் அதன் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் ஏழு பூமிகளும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு வானங்களும் இருக்கின்றன."
(தஃப்ஸீர் ரூஹுல் மஆனி, ஜுஸூ 26, பக்கம் 176)
அபுல் ஆலா மவ்தூதி என்பவர் திருக்குர்ஆனுக்கு செய்திருந்த விரிவுரையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டாக ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் தமது தஃப்ஹீமுல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விளக்கவுரையில் அத்தியாயம் ஸாஃபாத், அத்தியாயம் துகான் ஆகியவற்றில் வந்திருக்கும் "ஹூருல் அய்ன்" களைப் பற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
"இந்த வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கூடாரம் என்பது, அரசர்கள் அந்தப்புரங்களில் அமைக்கும் அரண்மனைகளைப் போன்றவைகளாகும். அந்த கூடாரங்களில் அழகிகள் இருப்பார்கள். அந்த அழகிகள் முஸ்லிம் அல்லாதவர்களுடைய பருவமடையாத குமரிகளாவார்கள். இவர்கள் சுவனப்பகுதிக்குள் போகமுடியாது. இதனால் சுவனப்பகுதிக்கு வெளியிலுள்ள தோட்டங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் இருப்பார்கள். சுவனப்பகுதியில் பிரவேசித்த நல்லடியார்கள் தங்களுடைய மனைவிமார்களுடன் இருப்பார்கள். ஆயினும் மற்றப் பெண்களையும் சந்தித்து உடலுறவு கொள்ள அவர்கள் ஆசைப்படுவார்கள். அப்போது சுவனப்பகுதிக்கு வெளியிலுள்ள கூடாரங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் அல்லாத அழகிகளுடன் இணைந்து உறவாட இறைவன் அவர்களுக்கு அனுமதியளிப்பான். இரவு வேளைகளில் அம்மங்கையர்களுடன் சேர்ந்திருந்துவிட்டுப் பின்னர் திரும்பி விடுவார்கள்."
(தஃப்ஹீமுல் குர்ஆன், பாகம் 5 பக்கம் 271)
ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த நூல் "ரத்துல் முக்தார் அலா துர்ரி முக்தாரிஷ் ஷாமீ" என்பதன் பாகம் 1, பக்கம் 154 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
"எவருக்காவது மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் ஃபாத்திஹா அத்தியாயத்தை இரத்தத்தால் எழுதி அவருடைய நெற்றியிலும், மூக்கிலும் தடவ வேண்டும். இதனால் குணம் கிடைத்துவிடும். இதே போன்று (இறைவன் நம்மை பாதுகாப்பானாக) ஃபாத்திஹா அத்தியாயத்தை மூத்திரத்திலும் எழுதலாம்.
பாருங்கள் இதுதான் இவர்களுடைய மார்க்கப் போதனை! இறைவன் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களைத் தோற்றுவித்து நம்மையெல்லாம் மிகக் கேவலமான போதனைகளிலிருந்து காப்பாற்றியுள்ளான். இதற்காக நாம் அவனுக்கு மிகவும் அதிகமான முறையில் நன்றி செலுத்த வேண்டும்.
இப்போது நபிமார்களைப் பற்றி இவர்களுடைய கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.
நபிமார்களைப் பற்றி அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நம்பிக்கையையும், கொள்கையையும் குறித்து ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தங்களுடைய நூல்களில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள். அவற்றின் சாராம்சத்தை ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் தஅவத்துல் அமீர் என்னும் நூலின் 144 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள். அதனை இப்போது படித்து காட்டுகிறேன்.
" இறைவனுடைய எல்லா நபிமார்களும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டவர்களாவர். உண்மையிலேயே அவர்கள் உயிருள்ள முன்மாதிரிகளாவர். அவர்கள் இறைவனின் பண்புகளை பிரதிபலித்துக் காட்டக் கூடியவர்களாவர். அவர்கள் தங்களுடைய தூய்மையான வாழ்க்கையின் மூலம் இறைவனுடைய தூயத் தன்மையை எடுத்துக் காட்டுபவர்களாவர்.
ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் ஷரீஅத்திற்கு மாற்றம் செய்ததில்லை. ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்கள் பாவம் செய்யவில்லை. ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) ஒரு போதும் பொய்யுரைத்ததில்லை. ஹஸ்ரத் யஃகூப் (அலை) அவர்கள் ஒருபோதும் எவரையும் ஏமாற்றியதில்லை. ஹஸ்ரத் யூசுஃப் (அலை) அவர்கள் ஒரு போதும் தீய நடத்தையில் நாட்டங் கொண்டதில்லை. ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அவசியமில்லாமல் எவரையும் கொலை செய்யவில்லை. ஹஸ்ரத் தாவூத் (அலை) அவர்கள் எவருடைய மனைவியையும் பறித்ததில்லை. ஹஸ்ரத் சுலைமான் (அலை) அவர்கள் ஒருபோதும் எந்த முஷ்ரிக் பெண்ணையும் காதலித்ததுமில்லை. தங்களுடைய கடமைகளை மறந்ததுமில்லை. ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் சிரிய - பெரிய எந்தப் பாவமும் எந்தக் குற்றமும் எந்த தவறும் செய்ததில்லை. அவர்கள் எல்லா வகையான குற்றங் குறைகளிலிருந்து தூய்மையாக்கப்பட்டவர்களாவார்கள். எவர் நபிகள் நாயகத்தைப் பற்றி குறை கூறுகின்றாரோ அவர் உண்மையிலேயே தமது குறைகளைத்தாம் எடுத்துரைக்கின்றார்.
திருக்குர்ஆனின் விரிவுரையாளர்களாகிந இவர்களுக்கு கடுகளவாவது இறையச்சம் இருந்திருந்தால் நபிமார்கள் மீது இத்தகு இழிவான கட்டுக்கதைகளை புனைந்திருக்கமாட்டார்கள். எந்த நபியின் ஒரு சிறந்தப் பண்பைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளானோ அந்த நபியின் அச்சிறப்பிற்கெதிராக இந்த விரிவுரையாளர்கள் பொய்க்கதைகளை புனைந்திருக்கின்றனர். இவர்கள் நபிமார்களைப் பற்றி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே திருக்குர்ஆன் சாட்சி பகர்ந்து கொண்டிருக்கிறது.
ஹஸ்ரத் யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றைப் பற்றி "அஹ்ஸனுல் கஸஸ்" அதாவது அவர்களின் வரலாறு மிகச்சிறந்தது என்று இறைவன் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான். அவர்களின் தூய்மையைப் பற்றியும் கற்பைப் பற்றியும் புகழ்ந்து கூறியுள்ளான்.
ஆனால் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களோ ஹஸ்ரத் யூஸுஃப் (அலை) அவர்களை (நஊதுபில்லாஹ்) கட்டுக்கடங்காத இச்சைக்கு அடிமைப்பட்டவராகவும், அவர்களை தீய நடத்தையில் வலுக்கட்டாயாமாக ஈடுபடுத்திட நினைத்த ஸுலைகாவை ஹஸ்ரத் ஸுலைகா என்று கூறி கற்பிற்குரியவளாகவும் சித்தரித்து காட்டியுள்ளனர். இறைவன் எவர்களை தூய்மைமிக்கவர் எனக் கூறி பாராட்டியுள்ளானோ அவர்களை கெட்டவராகவும் எவளைத் தீய நடத்தையுள்ளவளாக கூறியுள்ளானோ அவளைத் தூய்மையானவளாகவும் கற்பிற்குரியவளாகவும் இந்த விளக்கவுரையாளர்கள் வரைந்து வைத்துள்ளனர்.
இதுதான் உங்களுடைய குர்ஆனும் இவர்களே உங்களுடைய நபிமார்களும் என்றால் நிச்சயமாக எங்களுடைய குர்ஆன் வேறுதான் எங்களுடைய நபிமார்களும் வேறுதான். திருக்குர்ஆனைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களுக்கும் எங்களுடைய கருத்துக்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாது.
ஹஸ்ரத் யூஸுஃப் (அலை) அவர்களைப் பற்றி தஃப்ஸீர் "ரூஹுல் மஆனி"யில் 20 க்கும் மேற்ப்பட்ட ரிவாயத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் சாராம்சம் இதுவாகும்.
" ஹஸ்ரத் யூஸுஃப் நபி (அலை) அவர்கள் ஸுலைகா என்ற பெண்ணுடன் விபச்சாரம் செய்வதற்கு பூரணமாக உறுதி கொண்டுவிட்டார்கள். அதற்குப் பிறகு நடந்தவற்றை அந்த நூலில் நீங்கள் படிக்கும்போது உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. மிகவும் பயங்கராமன முறையிலும் வெறுக்கத்தக்க முறையிலும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த கெட்ட செயல் நடப்பதற்கு முன் ஜிப்ரீல் எனும் மலக்கு அங்குத் தோன்றினார். இதற்கும் அவர்கள் அடங்கவில்லை. அவர்களின் தந்தை ஹஸ்ரத் யாகூப் நபி (அலை) அவர்கள் அங்கு வந்து நின்றார்கள். அப்போதும் அத்தீயச் செயலிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளவில்லை. அதாவது அந்த கெட்டச் செயலிலிருந்து அவர்களைத் தவிர்த்து கொள்ளச் செய்வதற்காக இறைவன் ஹஸ்ரத் யாகூப் நபியை அனுப்பினான். கொஞ்சமாவது அச்சம் படட்டுமே வெட்கப்படட்டுமே என்று நினைத்து. ஆனால் அவர்கள் இதற்கும் அடங்கவில்லை. இதன் பின்னரும் இறைவன் ஒருத் திட்டம் தீட்டினான். அத்திட்டத்தைப் பற்றி விளக்குவது மிகவும் வெட்கங்கெட்டச் செயலாகும். ஒரு சாதாரண மனிதர் அந்த விளக்கத்தைப் படித்துப் பார்த்தால் வெட்கப்பட்டு தலைக்குணிந்து விடுவார். இவ்வாறிருக்க அதை என்னால் படித்துக் காட்ட முடியாது. இவ்வாறு இவர்கள் நபிமார்கள் மீது மாபெரும் துரோகம் செய்துள்ளார்கள்.
மேலும் ஹிஸ்ரத் ஸுலைமான் நபி (அலை) அவர்களைப் பற்றி இன்னொரு தஃப்ஸீரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"அவர்கள் ஒரு பெண்ணிடம் மாதவிடாவின் போது உடலுறவு கொண்டார்கள். இக்குற்றத்திற்குத் தண்டனையாக அவர்களுடைந அரியாசனத்தில் ஆஸிப் என்ற ஒரு ஷெய்த்தான் உட்கார்ந்து கொண்டான்" (தஃப்ஸீர் ரூஹுல் மானி அத்தியாயம் ஸாது)
திருக்குர்ஆனின் இந்த விரிவுரையாளர்கள் பொதுவாக யூதர்களுடைய தஃப்ஸீர்களிலிருந்தும் இஸ்லாத்தின் விரோதிகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளிலிருந்தும் இறைத்தூதர்களான நபிமார்களைப்பற்றி பல்வேறு பொய்க்கதைகளை தங்களுடைய தஃப்ஸீர்களில் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இந்த விரிவுரையாளர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூட விட்டு வைக்கவில்லை. இவர்கள் தஃப்ஸீர் ஜலாலைன், தஃப்ஸீர் ஃபத்ஹுல் பயான் முதலிய நூல்களில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:
"குறைஷிகளின் ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அத்தியாயம் நஜ்மிலிருந்து ஒரு வசனத்தை ஓதினார்கள். அப்போது அவர்களுடைய நாவில் ஷைத்தான் வஹியை (இறையறிவிப்பை) இறக்கினான்.
சிறிது சிந்தனை செய்து பாருங்கள், ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் நாவில் ஷைத்தான் வஹியை இறக்கினானாம். இதனை எந்த அஹ்மதி முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அவர்களை ஷைத்தான் அணுகினான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? " அந்த ஷெய்த்தான் இறக்கிய வஹி என்னவென்றால் தில்கல் கராணிகுல் குரா லஇன்ன ஷஃபாஅத்துஹுன்ன லதுர்ஜா- என்பதாகும்.
இந்தப் பொய்யான ரிவாயத்தை வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் விரோதிகள் நபிகள் நாயகத்தின் மீது மாபெரும் ஆட்சேபனைகளை கிளப்பினார்கள்.
தஃப்ஸீர் ரூஹுல் மஆனி, தஃப்ஸீர் காஸின், ஜலகலைன் முதலிய தஃப்ஸீர்களில் ஹஸ்ரத் ஜைனபுடன் (ரலி) சேர்த்து ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது;
"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய ஏதோ ஒரு காரியத்திற்காக ஹஸ்ரத் ஸைது இப்னு ஹாரிஸ் வீட்டிற்குச் சென்றார்கள். அப்போது காற்றடித்ததால் வீட்டு வாசலிலுள்ள திரை சற்று அகன்று விட்டது. இதனால் அவர்களுடைய பார்வை ஹஸ்ரத் ஜைனபின் மீது விழுந்தது. அப்போது அவர்கள் அவளுடைய அழகில் மயங்கிவிட்டார்கள்." (நஊதுபில்லலாஹி மின்ஹா)
விரிவுரையாளர்கள் இந்த சம்பவத்தை நீட்டி இழுத்து எழுதியுள்ளார்கள். இந்த நீண்ட கட்டுக் கதையைப் படித்து பார்க்கும்போது, எம்பெருமானிடம் அன்பும் நேசமும் கொண்ட ஒவ்வொருவருடைய இரத்தமும் கொதிக்க தொடங்கிவிடுகிறது. எல்லாரையும் விட மிகவும் தூய்மையானவர்களாகிய எம்பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூட இவ்வாறு பழித்துக் கூறியுள்ளார்கள். இந்த கட்டுக் கதையை எழுதும்போது இவர்களுடைய உள்ளங்கள் ஏன் வெடித்துப் போகவில்லையோ!?
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பற்றி "ஜிலாவுல் உயூன் மஜ்லிஸு அஸ் கிலாஃபத்துஷ் ஷைனகன்" என்னும் நூலில் பக்கம் 17 இல் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
"மிஃராஜ் (விண்பயண) இரவில் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் இல்லாது போயிருந்தால் முஹம்மது நபிக்கு எந்த விதமான மதிப்பும் கிடைத்திருக்காது"
ஆனால் மிஃராஜுன் போது ஹஸ்ரத் முஹம்மது நபியுடன் (ஸல்) ஹஸ்ரத் அலி (ரலி) இருந்ததில்லை. இது மட்டுமல்லாமல் மிஃராஜில் நபிகள் நாயகத்திற்கு கிடைத்த மிகவும் உயர்வான அந்தஸ்தை எவராலும்- மலக்குகளால் கூட பெற முடியவில்லை.
ஷிஆ ஆலிம்கள் மட்டுமில்லை மாறாக ஸுன்னி முஸ்லிம்கள் கூட இவ்வாறான கட்டுக்கதைகளை புனைந்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் நான்கு புறங்களிலிருந்தும் இஸ்லாத்தை மிகவும் மோசமான முறையில் தாக்கியிருக்கின்றனர். இத்தகு விளக்கங்களை கொண்ட இஸ்லாத்தைதான் இவர்கள் உலகின் முன் வைக்க நாடுகின்றனரா? ஆனால் அதே வேளையில் இவர்களை சீர்திருத்துவதற்காக "ஹகமன், அதலன்" ஆகத் தோன்றிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு எதிராக இவர்கள் தங்களுடைய நாவுகளை வெறுக்கத்தக்க வகையில் நீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று குற்றம் சாற்றுகின்றனர். ஆனால் இவர்களுடைய நிலை என்னவென்றால், ஷியாக்களும் ஸுன்னிகளும் சேர்ந்து தங்களுடைய கலிமாவை மாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இதற்கெதிராக எந்தவிதமான குரலும் எழுப்பப்படுவதில்லை.
காஜா முயீனுத்தீன் சிஷ்த்தியை பற்றி "ஹஸனாத்துல் ஆரிஃபீன்" என்னும் நூலில் பக்கம் 34 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
"ஒருவர் ஹஸ்ரத் காஜாவிடம் வந்து நான் உங்களுடைய முரீதாக நினைக்கிறேன் என்று கூறினார். இதற்கு அவர்கள் லாயிலாஹா இல்லல்லாஹு சிஷ்த்தி ரஸூலுல்லாஹ் என்று கூறு என்றார்கள். அவ்வாறே அவர் கலிமா கூறியதும் காஜா அவரை தமது முரீதாக ஏற்றுக் கொண்டார்கள்."
தமது காலத்தின் முஜத்திதும் ஒரு வலியுல்லாஹ்வுமாக இருந்த ஹஸ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்த்தி அவர்கள் நிச்சயமாக அவ்வாறு கூறியிருக்கமாட்டார்கள்.
இவர்கள் தாம் நபிமார்களை கூட விட்டு வைக்கவில்லையே. அப்படியிருக்க முஜத்தித்மார்களையும், ஃபக்கீர்மார்களையும், வலிமார்களையும் எங்கனம் விட்டு வைப்பார்கள்? இப்படிப்பட்ட ஆலிம்களுடன் ஒரு சமுதாயம் தொடர்பு வைத்திருக்க வேண்டியதிருந்தால் அந்த சமுதாயத்தின் நிலை பரிதாபத்திற்குரியதேயாகும். இத்தகைய ஆலிம்களிடமிருந்து சமுதாயத்தை விடுவித்து அச்சமுதாயத்தை சீர்திருத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமேயாகும். அந்த மாபெரும் பொறுப்பைத்தான் அஹ்மதிய்யா ஜமாஅத் ஏற்றிருக்கிறது. நம்மை எல்லா வகையான இருள்களிலிருந்தும் விலக்கி, நம்மை ஒளியின் பக்கம் கொண்டு வந்த ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ், இமாம் மஹ்தி (அலை) அவர்களுடைய உபகாரம் மிகவும் மகத்துவம் கொண்டதாகும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வ அலா அப்திகல் மஸீஹில் மவ்ஊது வ பாரிக் வ ஸல்லிம்.


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None