மார்க்கத்தை சார்ந்த துஆவே அசல் துஆவாக இருக்கின்றது.

ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: 

"நமது ஜமாஅத் இரவு நேரம் அழுதழுது துஆ செய்ய வேண்டும். உத்ஊணி அஸ்தஜிப் லகும் (முஃமின்:61) என்பது அவனது வாக்குறுதியாக இருக்கின்றது. சாதாரண மக்கள் துஆ என்றால் இந்த உலகத்தின் துஆ தான் என்று கருதுகின்றனர். அவர்கள் இந்த உலகத்தின் பூச்சியாக இருக்கின்றார்கள். இதிலிருந்து அவர்கள் தவிர்ந்து செல்வதில்லை. உண்மையில் மார்க்கத்தை சார்ந்த துஆவே அசல் துஆவாக இருக்கின்றது. நாம் பாவியாக இருக்கிறோம், இதிலிருந்து நம்மால் மாற முடியாது ஆதலால் இந்த துஆ எவ்வாறு நிறைவேறும் என்று ஒரு போதும் நினைத்துவிடாதீர்கள். இந்த நினைப்பு தவறானதாகும். சில நேரம் மனிதன் பாவத்துடன் இவ்விஷியத்தில் (துஆ வில்) வெற்றி அடைகிறான். இதற்கு காரணம் அவனது தூய்மையான இயல்பாகும். பாருங்கள், நீர் எவ்வளவுதான் சூடாக இருந்தாலும் அதனை நெருப்பில் ஊற்றும்போது அந்த நெருப்பு அணைந்து விடுகிறது. காரணம் அதில் (அந்த நீரில்) குளிர்படுத்தும் தன்மை இருக்கிறது. இவ்வாறே மனிதனின் இயல்பிலும் தூய்மை இருக்கிறது. ஒவ்வொருவரிலும் இது இருக்கிறது. அந்த தூய்மை எங்கும் செல்லவில்லை. இவ்வாறு , உங்களது உள்ளம் எந்த அளவுக்கும் காழ்புணர்ச்சியால் நிரம்பி இருந்தாலும் அழுது துஆ செய்யும்போது அதனை அல்லாஹ் நீக்கி விடுகின்றான்."
(மல்ஃபூசாத் பாகம் 5 பக்கம் 132-133)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.