இந்தியாவிலுள்ள மிகவும் பிரசித்து பெற்ற தேவ்பந்த் இஸ்லாமிய பிறவினர்களின் மத்ரஸாவிற்கு அடித்தளம் நாட்டியவர் அல்லாமா முஹம்மத் காசிம் நானத்வி (ரஹ்) அவர்கள் ஆவார்கள். இவர் 1297 ஹிஜ்ரியில் மரணம் அடைந்தார்கள். உத்திரபிரதேசத்திலுள்ள நானத்வா என்ற இடத்தை சார்ந்தவர் இவர். இறையச்சம் கொண்ட ஒரு நபர். மக்களுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர். இவர் பல்வேறு நூட்களை எழுதியுள்ளார்கள். இதில் "தஹ்சீருன் நாஸ்" என்ற ஒரு நூலையும் இவர் எழுதியுள்ளார். இந்த நூலில் அன்னார் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் காதமியத் அந்தஸ்தை பற்றி பல்வேறு கோணங்களில் விளக்கி கூறியுள்ளார். இந்த நூலில் பக்கம் 34 இல் இவர் "நபிமார்களின் வருகை நின்று விடுவதின் மூலம் அன்னாரின் மகிமை அந்தஸ்து நிரூபணம் ஆகாது................ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றினாலும் அன்னாரின் காதமியத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று கூறியுள்ளார். இதே கருத்தை கொண்ட சொல்லை பக்கம் 4,5 இலும் கூறியுள்ளார்கள். ஆக ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் காதம் ஆக இருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் இறுதி கிடையாது என்பதை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள். மூல நூலின் பக்கம் கீழே:
Marham-i-Isa: The Ancient "Ointment of Jesus" and the Science of Survival
-
The account of the Crucifixion is one of history’s most debated events.
While traditional views often focus on the burial, a closer look at the
botani...
3 மாதங்கள் முன்பு

.jpg)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None